Friday, November 18, 2016

முதல் நாடகம்

1950 களின் ஆரம்ப வருடங்கள். தமிழகம் எங்கும் ஏராளமான நாடகக் குழுக்கள். டி.கே.எஸ்., மனோகர், சகஸ்ரநாமம், எம். ஆர். ராதா போன்றோர் நாடக உலகில் கொடி கட்டிப் பறந்த காலம். போதாததற்கு திரைப்படங்களில் 'பிஸி 'யாக இருந்தாலும், எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்றவர்களும் நாடகத்தில் ஆர்வம் காட்டி அவ்வப்போது நடித்து வந்தனர். இதைத் தவிர ஒய்.ஜி.பி., வி.எஸ்.ராகவன், சாம்பு நடராஜன், ராமகிருஷ்ண கிருபா, கே. பாலசந்தர், மேஜர் சுந்தர்ராஜன், சேஷாத்ரி என்று பலர் அமெச்சூர் நாடகக் குழுக்கள் மூலம் பல புதுப்புது நாடகங்கள் அரங்கேற்றிய காலக்கட்டம். அந்தக் காலக்கட்டத்தில்சோ அவர்களின் தம்பி ராஜகோபால் 'அம்பிஎன்ற பெயரில் பிரபலம்அவரும் நீலுநாணிவி.ஆர்.எஸ்போன்ற சில நண்பர்களும் சேர்ந்து 'விவேகா பைன் ஆர்ட்ஸ் க்ளப் ' என்ற குழுவை ஆரம்பித்தனர்இது நடந்த வருடம் 1957.

விவேகா பைன் ஆர்ட்ஸ் மூலம் தான் சோவின் நாடகப் பிரவேசம் ஆரம்பித்தது. பிரபல எழுத்தாளர் பகீரதன் கல்கியில் எழுதிய 'தேன்மொழியாள் ' என்ற கதையைக்  கூத்தபிரான் 1957 யில்  நாடகமாக்கினார்.  கூத்தபிரான் பின்னாட்களில் பல நாடகங்களை வானொலியில் ஒலி பரப்பி பிரபலமானவர். 80களில் மாணவர்களாக இருந்தவர்கள் இவரை அறியாமல் இருக்க முடியாது. 'வானொலி அண்ணா' என்ற பெயரில் மாணவர்களிடையே அக்காலத்தில் இவர் ஒரு ரேடியோ சூப்பர் ஸ்டார்.

விவேகா பைன் ஆர்ட்ஸில் ஆர்வம் காரணமாக சோவும் தம்மை இணைத்துக் கொண்டார். அதற்கு முன் ஒய். ஜி. பி. நாடகக் குழுவில் மேடை நிர்வாகத்திற்கு உதவியதைத் தவிர, சோவுக்கு பெரிதாக நேரடி நாடக அனுபவம் கிடையாது.  'தேன்மொழியாள்' நாடகத்தில் சோவுக்காக ஒரு சிறிய பாத்திரம் உருவாக்கப்பட்டது. சிறு வயதில் தம்மை பெரியவர்கள் அழைத்த பெயரான 'சோ' என்ற பெயரை தாமே சூட்டிக் கொண்டார். இப்படித்தான் ராமசாமிசோஆனார்.


ஒரே ஒரு சீனில் மட்டும் தலை காட்ட விருப்பம் இல்லாத சோ, தமக்கு 4-5 சீன்களிலாவது வரும்படி நாடகத்தை மாற்றாவிட்டால், நடுநடுவே உள்ளே புகுந்து குழப்பம் விளைவிப்பதாகக் கூத்தபிரானைப் பயமுறுத்தினார். அப்பாவியான கூத்தபிரானும் அதற்கு ஒப்புக் கொள்ள, சோவின் முதல் நாடகப் பிரவேசம் வெற்றிகரமாக நடந்தேறியது. சோ என்ற பாத்திரம் மெட்ராஸ் ரசிகர்களிடையே பிரபலமும் ஆனது.

அம்பி வைரம் என்ற கதாபாத்திரத்திலும், நீலு மிஸ்டர் ப்ளான் என்ற கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர்.

'தேன்மொழியாள்' நாடகத்தில் சோவுக்கு என்று ஒரு பாத்திரம் உருவானதால் அதை அவருடைய முதல் நாடகம் என்கிறோம். ஆனால் அதற்கு முன்பாகவே (1956) தேவனின் 'கல்யாணி' என்ற நாடகத்தில் போலீஸ் ஸ்டேஷனில் குறுக்கு விசாரணை செய்யும் சி.ஐ.டி. சந்துரு என்ற கேரக்டரில் நடிக்கும் நடிகர் ஒரு நாள் வராததால், சோ அப்பாத்திரத்தை ஒரு நாளைக்கு மட்டும் ஏற்று நடித்துப் பிளந்து கட்டினாராம்.


No comments:

Post a Comment