Tuesday, November 22, 2016

சோ எழுதிய முதல் நாடகம்

கூத்தபிரான் மனஸ்தாபம் கொண்டு  நாடகம் எழுத மறுத்து விட, விவேகா ஃபைன்  ஆர்ட்ஸுக்கு கதை எழுத ஆளில்லை.

முன்பொரு சமயம் ஒய்.ஜி.பி.யின் நாடகத்தைப் பார்த்து ஒரே நாளில் ஒரு நாடகத்தை எழுதி ஒய்.ஜி.பி.யிடமே சோ கொடுத்திருந்தார்ஒய்.ஜி.பி. அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அந்த காகிதங்களும் தொலைந்து விட்டன. அந்த பழைய கதையை அடிப்படையாக வைத்து சோ ஒரு புது நாடகம் எழுதினார். தலைப்பு ஆங்கிலத்தில் – “If I get it”. இது நடந்த வருடம் 1957.

முதல் வருடத்திலேயே 50 முறை மேடை ஏறிச் சக்கை போடு போட்ட நாடகம். இந்த நாடகத்தின் கதை என்னவென தெரியவில்லை. ஆனால் ஒரு சுவையான சம்பவம். இந்த நாடகத்தில் இரண்டு போலீஸ்காரர்கள் கதாபாத்திரங்கள் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாகியிருந்தது. ஒரு முறை நாடகத்துக்கு தலைமை ஏற்ற வந்திருந்த ஒரு போலீஸ் மேலதிகாரி இதைப் பற்றி விமர்சிக்க, மேடையிலேயே சோ அவருக்கு பதிலடி கொடுத்தார்.


இளமையில் தாம் அதிகப் பிரசங்கித்தனமாக நடந்து கொண்டதாக பிற்காலத்தில் சோவே குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இதற்கு முன்பாகவே சோ எழுத ஆரம்பித்து விட்டார்.

அம்பி, நீலு, நானி, விஆர். சீனிவாசன், முத்து, ராதாகிருஷ்ணன் எல்லோரும் சேர்ந்து யங்மேன்ஸ் ஃபைன் ஆர்ட்ஸ் என்கிற குழுவை ஆரம்பித்திருந்தார்கள். அவர்களுக்காக சோ எழுதிக் கொடுத்த முதல் நாடகத்தின் பெயர் - கோரக் கொலை-  20 நிமிட நாடகம். எந்த வருடம் எனச் சரியாகத் தெரியவில்லை.

டாக்டர் வேஷதாரி என்கிற ஒரு மணி நேர நாடகத்தை சோ எழுதிக் கொடுக்க (1956), அதற்குப்  பல கல்லூரிகளுக்கிடையில் நடந்த போட்டியில் முதல் பரிசு கிடைத்தது.

அதற்குப் பிறகு கல்லூரியை விட்டு வெளியே வந்த நண்பர்கள், தாங்கள் படித்த விவேகானந்தா கல்லூரியின் நினைவாக "விவேகா ஃபைன் ஆர்ட்ஸ்' என்று குழுவின் பெயரை மாற்றிவிட்டார்கள்.

இந்த இரு நாடகங்களுக்குப் பிறகு சோ கல்லூரிப் போட்டிக்கென்று இல்லமால் முழு நீள நாடகமாக எழுதிய முதல் நாடகம் தான் If I get it.

No comments:

Post a Comment