Wednesday, December 7, 2016

சம்பவாமி யுகே யுகே

மஹா விஷ்ணு ஊழலை ஒழிக்க மனிதனாக அவதரிக்கிறார். ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பின் அவர் அவதாரம் என்பதை அவருக்கு நாரதர் உணர்த்துகிறார். அப்போதிருந்து கடவுளும் ஊழலை ஒழிக்கப் படாத பாடு படுகிறார். ஆனால் கடைசி வரை அவரால் அதை ஒழிக்க முடியவில்லை; மாறாக அவருக்குப் பைத்தியக்காரப் பட்டம்தான் கிடைக்கிறது.

பீதாம்பரம் என்ற கேரக்டரில் சென்னை தமிழ் பேசி சோ கலக்குவார். கான்ட்ராக்டரின் செகரக்டரி - ஊழலின் மொத்த உருவம். நடுவில் கொலை செய்யப்படுகிறார். அந்தப் பழி கடவுள் மீது விழுவது தான் கதையின் கடைசிப் பகுதிகள்.

எப்போதுமே பகவத் கீதை பேசும் கேரக்டர் தாம் செய்யும் தவறுகளுக்கு ஏதாவது காரணங்கள் கண்டு பிடிப்பது அல்லது எல்லாவற்றையும் கடவுளைக் காரணம் காட்டுவது, ஒரு கட்டத்தில் கடவுளே ஊழலுக்கு எதிராக வெல்ல முடியாமல் நடந்த தவறுக்கு ஏதோ காரணம் கண்டுபிடித்து சமாதானம் அடைவது, அலுவலக  அதிகாரி, வேலை செய்யாத அரசு அலுவலர்கள், ஆபிஸ் பைல்களை விற்று காசாக்கும் பியூன், ஊழல் வாதிகளிடமே தம் சாமர்த்தியத்தால் உள் குத்து மூலம் சம்பாதிக்கும் சோ கேரக்டர் எனப் பல சுவாரசியமான பாத்திரங்களும் சம்பவங்களும் இந்நாடகத்தில் உண்டு.


பக்தவத்சலம் முதல்வராக இருந்த போது மேடை ஏற்றப்பட்ட நாடகம். முதலில் லைசன்ஸ் கொடுக்க அரசு மறுத்து அதன் பின் சோ கோர்ட் போய் நியாயம் நிலை நாட்டி எந்த வசனத்தையும் கட் செய்யாமல் மேடை ஏற்றினார்.

No comments:

Post a Comment