ஒரே
படத்துடன் நடிப்பதை நிறுத்தி விடுவது சோவின் திட்டம். ஆனால், வீணை எஸ். பாலசந்தர் வற்புறுத்தலால்
ஒரு படத்தில் நடித்தார். படத்தின் பெயர் "நடு இரவில்". பைனான்ஸ் பிரச்சினையால்
படம் ஐந்து வருடங்கள் கழித்து 1970யில் தான் வெளிவந்தது.
சில
லாஜிக் பிரச்சினைகள் இருந்தாலும், மொத்தத்தில் இந்தப் படம் ரசிக்கத்தகுந்த திரில்லர்.
இத்தனை ஆண்டுகள் கழித்துப் பார்க்கும் போதும் நன்றாக உள்ளது.
பணக்கார
மேஜர் சுந்தர்ராஜன் மற்றும் அவருடைய மனநிலை பாதிக்கப்பட்ட மனைவி பண்டரி பாய் ஒரு தீவுக்குள்
பெரிய மாளிகையில் வாழ்கின்றனர். நிறைய வேலையாட்கள் உண்டு. அவர்களுடைய குடும்ப டாக்டர்
வீணை பாலசந்தர் சுந்தர்ராஜன் சில நாட்களில் இறந்து விடுவார் என அவரிடமே சொல்லி விடுகிறார்.
தமக்குப் பிறகு தமது மனைவியை யார் பார்த்துக் கொள்ளப் போகிறார் என மனம் உடைந்து விடுவார்
மேஜர்.
பண்டரி
பாயைக் காதல் திருமணம் செய்து கொண்டவர் மேஜர். அதைப் பிடிக்காத அவருடைய சொந்தக்காரர்கள்
தாக்கியதால்தான் பண்டரி பாய்க்கு மனநிலை பாதிக்கப்பட்டது. அதனால் அவர்களைத் தம்மிடம்
நெருங்க விடாமல் இத்தனை ஆண்டுகள் கழித்திருப்பார் மேஜர். நல்லது செய்வதாக நினைத்துக்
கொண்டு அந்தச் சொந்தக்காரர்களை எல்லாம் இந்தத் தீவுக்கு வரவழைத்து விடுவார் வீணை பாலசந்தர்.
இது மேஜருக்குப் பிடிக்காது.
வி.
கோபால கிருஷ்ணன், வி. எஸ். ராகவன், அவருடைய மகள் சௌகார் ஜானகி உட்பட பலர் அந்த மாளிகையில்
தங்கியிருப்பார்கள். எல்லாரையும் வெறுக்கும் பண்டரி பாய் ஜானகியிடம் மட்டும் அன்பு
செலுத்துவார்.
இதன்
மத்தியில் ஒவ்வொருவராக அந்த மாளிகையில் மரணம் அடைவர். போலீஸை வரவழைக்க மேஜர் விடமாட்டார்.
கடைசியில் பண்டரி பாயும் கொல்லப்படுவார். மனம் வெறுத்துப் போகும் மேஜர் தம்முடைய சொத்து
எந்த சொந்தக்காரர்களுக்கும் போகக் கூடாது என்பதில் மிகவும் குறியாக இருப்பார். அதனால்
ஜானகி பெயரில் தமது சொத்து அனைத்தையும் எழுதி வைக்கத் தீர்மானித்திருப்பார்.
வீல்
சேரில் இருக்கும் ஊனமானவரான ராகவனையும் ஒரு சில நாட்களுக்குப் பிறகு ஜானகியையும் யாரோ
கொலை செய்ய முயல்வார்கள். வீணை பாலச்சந்தர்தான் கொலைகாரன் என எல்லோரும் நம்பும்படி
கொலைகாரனின் நடை உடை இருக்கும். மேஜர் சரியான நேரத்தில் துப்பாக்கியால் கொலைகாரனைச்
சுட்டுவிடுவார். அவன் ராகவன் என்ற உண்மை அப்போது தான் எல்லாருக்கும் தெரியும். சொத்துக்கு
ஆசைப்பட்டு எல்லாக் கொலைகளையும் அவர்தான் செய்து இருப்பார். ஜானகி ஒரு நர்ஸ் - அவர்
மகள் இல்லை என்ற உண்மையும் கடைசியில்தான் தெரியும்.
இப்படத்தில்
சோவுக்கு மிகச் சிறிய பாத்திரம். சர்வர் மௌஸ் என்ற பெயரில் சில காட்சிகளில் நகைச் சுவையை
வெளிப்படுத்துவார்.
இப்படத்தில்
எல்லோரும் நன்றாக நடித்து இருப்பார்கள். வீணை பாலசந்தர் மட்டும் கொஞ்சம் ஓவர் ஆக்டிங்.
No comments:
Post a Comment