Saturday, February 25, 2017

சந்திரபாபு டைரக்ஷனில் சோ

சோவுடைய ஐந்தாவது படம் 'தட்டுங்கள் திறக்கப்படும்'. சிறிய வேடம் - மூன்று காட்சிகளில் மட்டும் தோன்றுகிறார். இன்சூரன்ஸ் ஏஜெண்டாக ராகவன் என்ற கதாபாத்திரம். டைரக்ஷன் சந்திரபாபு. 17 ஜூன் 1966யில் இப்படம் வெளியானது.

சாவித்திரி, கே. ஆர். விஜயா, மனோகர், சந்திரபாபு  போன்றோர் முக்கிய வேடங்களில் நடித்திருப்பார்கள்.

இப்படத்தில் தான் நடிகை ஷோபா குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார்.

.வி.எம்ராஜன், வி.கே.ராமசாமி, ரங்காராவ், தங்கவேலு, எம்.ஆர். ராதா, மனோரமா, எம்.ஆர்.ஆர்.வாசு எனப் பலரும் ஓரிரு காட்சிகளில் தலை காட்டுகின்றனர்.

சந்திரபாபு மிகவும் எதிர்பார்த்த படம் - துரதிர்ஷ்ட வசமாக ஓடவில்லை. படத்தில் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் என எதுவும் ரசிக்கும்படி இல்லை. மிகையான நடிப்பு. சோ தோன்றும் காட்சிகளில் மட்டுமே சிறிதளவு கலகலப்பு காணப்படுகிறது.


படத்தின் கதை...வாய் பேச முடியாத அனாதையான சந்திரபாபு ஏழையான சாவித்ரிக்கும் அவருடைய பெண் குழந்தைக்கும் அடைக்கலம் தருகிறார். அவரைக் கைவிட்டவர் தம்முடைய முதலாளியான மனோகர் என்பதை அறிகிறார். இதற்கிடையே பணத்துக்காக தம்முடைய மனைவியான கே.ஆர். விஜயாவை மனோகர் கொலை செய்து பழியைச் சந்திரபாபு மீது சுமத்துகிறார். சந்திரபாபு சிறை செல்கிறார். ஆசை வார்த்தை காட்டி சாவித்ரியுடன் மீண்டும் இணையும் மனோகர் இன்சூரன்ஸ் பணத்துக்காக இறந்து விட்டதாக நாடகம் ஆட, சில திருப்பங்களுக்குப் பின் அவருடைய குழந்தையால் கொல்லப்படுகிறார். 

No comments:

Post a Comment