சில
எம்.ஜி.ஆர். படங்கள்
எல்லோருக்கும் பிடிக்கும். சில எம்.ஜி.ஆர். படங்கள் அவருடைய
ரசிகர்களுக்கு மட்டும் பிடிக்கும்.
இப்படம் அவருடைய ரசிகர்களுக்கும் பிடித்திருக்காது
என நினைத்தேன். ஆனால் இப்படம் ஒரு
சூப்பர் ஹிட் படம் என்பதை
அறிந்து அதிசயப்பட்டேன். ஒன்று இரண்டு பாடல்களைத்
தவிர படத்தில் ரசிப்பதற்கு எதுவுமில்லை. இது முழுக்க முழுக்க
தி.மு.க. அரசு
கொள்கை பிரசார படம். அண்ணாவின்
மேடைப் பேச்சு, கலைஞரின் காட்சிகள்,
போதாததற்கு எம்.ஜி.ஆர்.
நடிகர் எம்.ஜி.ஆராகவே
இன்னொரு வேடத்தில் தோன்றி தி.மு.க. கொள்கைகளைப் பரப்புகிறார்.
1970 அக்டோபரில் வெளிவந்த
இப்படத்தை முரசொலி மாறன் எழுதியுள்ளார்.
தயாரிப்பும் அவரே. இயக்கம் கிருஷ்ணன்-பஞ்சு. கலைஞர் ஆட்சிக்
கொள்கையை விளக்க மாறன் தயாரித்த
இப்படத்தில், பிற்காலத்தில் கொள்கையில் மாறுபாடு கொண்ட எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, சோ
ஆகியோர் நடித்துள்ளனர்.
எம்.ஜி.ஆர். லாரி
டிரைவர். ஆனால் பெரிய வீட்டில்
நல்ல வசதியுடன் வாழ்கிறார். சென்னை சூட்டிலும் கோட்டு
சூட்டு போட்டுக் கொண்டு அலைகிறார். என்ன
லாஜிக்கோ?
எம்.ஜி.ஆருடைய கண்
பார்வையற்ற தங்கையான புஷ்பலதாவை மானபங்க படுத்தும் ஏ.வி.எம்.ராஜன்
மனம் திருந்தி அவரையே மணந்து கொள்கிறார்.
கொள்ளைக் கூட்டத்திடம் மாட்டிக்கொண்டு அவர் அவதிப்பட, திருட்டுப்
பட்டத்தைத் தாம் சுமந்து கொண்டு
உண்மையான குற்றவாளிகளைப் போலீசிடம் பிடித்துக் கொடுக்கிறார் எம்.ஜி.ஆர்.
இதுதான் கதையின் சுருக்கம்.
இப்படத்தில்
எம்.ஜி.ஆர். கதா
காலட்சேபம் செய்வதாக வரும் காட்சி இந்தியர்களை
எதற்கும் லாயக்கற்றவர்கள் என பறைசாற்றுகிறது. சென்சார்
இதை எப்படி அனுமதித்தனர்?
லாறி
என்ற கதாபாத்திரத்தில் எம்.ஜி.ஆரின்
நண்பராகவும், லாரி க்ளீனராகவும் சோ
வருகிறார். தேங்காய் சீனிவாசனுடன் கூட்டு சேர்ந்து கொண்டு,
மனோரமாவை ஜோடியாக வைத்துக் கொண்டு
நம்மைச் சிரிக்க வைக்க முயற்சிக்கிறார்.
சோ தவிர்த்திருக்க வேண்டிய படம் இது.
அசோகன்,
மனோகர், வீ.எஸ். ராகவன்
போன்ற நடிகர்களும் இப்படத்தில் உண்டு.
No comments:
Post a Comment