26 ஜனவரி
1971யில் வெளியான எம்.ஜி.ஆரின் வெற்றிப் படம்.
ப. நீலகண்டன் இயக்கம். சோவுக்கு முக்கியத்துவம் இல்லாத பாத்திரம். தவிர்த்திருக்க
வேண்டிய படங்களில் ஒன்று.
கதை
வழக்கமான மசாலா கதை. எம்.ஜி.ஆருடைய தந்தையும்
வி.கே.ராமசாமியும் நண்பர்கள்.
பணம் வந்தவுடன் நட்பை மறந்து நண்பனை
அவமானப்படுத்துகிறார் வி.கே.ஆர்.
எம்.ஜி.ஆர் அவரை
மீண்டும் ஏழையாக்கி புத்தி புகட்டுவது தான்
கதை.
வி.கே.ஆருடைய மகளாகவும்,
ஆட்டக்காரியாகவும் இரு வேடங்களில் ஜெயலலிதா.
வில்லனாக மனோகர். எம்.ஜி.ஆருக்கு உதவும் பணக்காரராக
அசோகன். அவருடைய மகளாக லட்சுமி.
சோவுக்கு ஜோடியாக சச்சு. எல்லாரும்
வந்து போகிறார்கள் இந்த வலுவில்லாத கதையில்.
எம்.ஜி.ஆருடைய நண்பனாக
சோ. பாலு என்ற கதாபாத்திரம்.
சில காட்சிகளில் தோன்றி நம்மைச் சிரிக்க
வைக்க முயற்சிக்கிறார். அவ்வளவு தான்.
No comments:
Post a Comment