1970 ஆண்டு, 14 ஜனவரியில் வெளியான
எம்.ஜி.ஆரின். வெற்றிப்
படமிது. ஏ.எல்.நாராயணன்
எழுத்தில், ப.நீலகண்டன் இயக்கிய
படம்.
எம்.ஜி.ஆர். இரு
வேடத்தில் நடித்த இப்படத்தில் முழுக்க
முழுக்க அவருடைய ஆதிக்கம் தான்.
ஜெயலலிதா, லட்சுமி, சோ, சச்சு எல்லாருக்கும்
வாய்ப்பு மிகவும் குறைவு. வி.கே.ஆருக்கும் அசோகனுக்கும் ஓரளவு
ஸ்கோப்.
வழக்கமான
மசாலா படம். லாஜிக் பார்க்காமலிருந்தால்
படம் ரசிக்கும்படி உள்ளது. எம்.ஜி.ஆர் தந்தையை அசோகன்
கொன்று விட, அந்த உண்மையை
வி.கே.ஆர் மூலம்
அறியும் எம்.ஜி.ஆர்.
அசோகனைப் பிடிக்க போகும் முயற்சியில்
அவரிடம் அகப்பட்டு விடுகிறார். இன்னொரு எம்.ஜி.ஆர். - மாட்டுக்கார வேலன்
- அவரை மீட்டெடுத்து வில்லனை போலீசில் ஒப்படைக்கிறார்.
இது தான் கதையின் ஒன்
லைன்.
சோ
லட்சுமியுடைய அண்ணனாகவும், அசோகனுடைய மகனாகவும் வருகிறார். இவருடைய பாத்திரப் பெயர்
சுந்தரம். சச்சு ஜோடி. நகைச்சுவைக்
காட்சிகள் நன்றாக இருந்தாலும் ஹை
லைட்டாக எதுவுமில்லை.
No comments:
Post a Comment