Monday, August 14, 2017

சிநேகிதி

1970யில் வெளியான இப்படம் ஜி.ராமகிருஷ்ணன் இயக்கியது. சுமாரான படம். திரைக்கதை குளறுபடி. பல காட்சிகள் உணர்ச்சிகரமாக நடிக்க வேண்டிய காட்சிகளை நடிகர்கள் கோட்டை விட்டு விடுகின்றனர். க்ளைமாக்ஸ் காதில் பெரிய பூ சுற்றல் வேலை. 

சோ சுருளிராஜனுக்கு மகனாகவும் மனோரமாவுடைய காதலனாகவும் வருகிறார். நகைச்சுவைக் காட்சிகள் மட்டும் படத்தில் நன்றாக உள்ளன. சோவுடைய டிரேட் மார்க் அரசியல் வசனங்கள் இல்லை என்றாலும்  அவருடைய நகைச்சுவை ரசிக்கும்படியாகவே உள்ளது. 

பணக்கார பாரதி ஏழை சரோஜாதேவியைத் தன்னுடன் சிறு வயதிலிருந்தே வைத்துக் கொள்கிறார். இருவருமே தாய் தந்தை அற்றவர்கள். எஸ்.வி.சகஸ்ரநாமம் மேனேஜர் மற்றும் கார்டியன். அவர் செய்த குளறுபடியால் அவருடைய மகன் ரவிசந்திரனுடைய நண்பர் ஜெமினி கணேசன் சரோஜாதேவி என நினைத்து பாரதியைத் திருமணம் செய்து கொள்கிறார். இல்லறத்தில் ஈடுபாடு இல்லாமல் குடிக்கிறர். அவரைத் திருத்த சரோஜா அவரை விரும்புவதைப் போல நடிக்கிறார். இதற்கிடையே பாரதியின் மரணம், ரவிசந்திரனின் ஒரு தலைக்காதல், கடைசி காட்சிகளில் அர்த்தமின்றி மர்மப் படம் போல சில காட்சிகள் எனப் படம் நீள்கிறது.


No comments:

Post a Comment