ப.நீலகண்டன் இயக்கிய இப்படம் 9 டிசம்பர் 1971யில் வெளியானது. எம்.ஜி.ஆர். நாயகன்; ஜெயலலிதா நாயகி. முத்துராமனும் நம்பியாரும் வில்லன்கள். பண்டரிபாய், அசோகன், வி.கே.ராமசாமி ஆகியோருடன் சோவும் நடித்துள்ளார். பணக்கார அசோகனிடம் வேலை செய்பவராக வருகிறார் சோ. அவருடைய கேரக்டர் பெயர் சிகாமணி. அவரும் வி.கே.ஆரும் சேர்ந்து ஓரளவு நகைச்சுவையாக நடித்துள்ளனர். ஆனால் இருவருக்குமே அவ்வளவாக வாய்ப்பு இல்லை.
குழந்தைகளாக இருக்கும் போது பிரிந்த சகோதரர்களான எம்.ஜி.ஆரும் முத்துராமனும் பெரியவர்கள் ஆனவுடன் ஒன்று சேர்வதே கதை. இருவரும் ஜெயலலிதாவைக் காதலிப்பதும் அதனால் அவர்களுக்குள் பகை ஏற்படுவதும், பின் வழக்கம் போல் எம்.ஜி.ஆர். வெல்வதும் முத்துராமன் மனம் திருந்துவதுமாக கதை முடிகிறது.
குழந்தைகளாக இருக்கும் போது பிரிந்த சகோதரர்களான எம்.ஜி.ஆரும் முத்துராமனும் பெரியவர்கள் ஆனவுடன் ஒன்று சேர்வதே கதை. இருவரும் ஜெயலலிதாவைக் காதலிப்பதும் அதனால் அவர்களுக்குள் பகை ஏற்படுவதும், பின் வழக்கம் போல் எம்.ஜி.ஆர். வெல்வதும் முத்துராமன் மனம் திருந்துவதுமாக கதை முடிகிறது.
No comments:
Post a Comment