Thursday, September 28, 2017

சங்கே முழங்கு

ப.நீலகண்டன் இயக்கம். 4 பிப்ரவரி 1972 யில் வெளியான படம். சோ எம்.ஜி.ஆருடன் இணைந்து நடித்த கடைசிப்  படம். 1968யில் எம்.ஜி.ஆருடன் முதல் படம். மொத்தம் நான்கு வருடங்களே இருவரும் இணைந்து நடித்துள்ளனர். 13 படங்களில் இணைந்துள்ளனர்.

இப்படத்தில் சிந்தாமணி என்ற எம்.ஜி.ஆருடைய நண்பனாக வருகிறார் சோ. மிகச் சில காட்சிகளிலேயே வருகிறார். இதுவும் சோ தவிர்த்திருக்க வேண்டிய படம்.

எம்.ஜி.ஆரும் அவருடைய தங்கையும் அனாதைகள். அவர்களை பணக்காரரான வி.எஸ்.ராகவன் வளர்க்கிறார். அவருடைய மேனேஜர் அசோகன் வக்கீல் வி.கே.ராமசாமியுடன் சேர்ந்து அவரைக் கொன்று விடுகிறார். பழி எம்.ஜி.ஆர். மீது விழுகிறது. அதை அவர் தம்முடைய காதலியான லட்சுமி மற்றும் அவருடைய தந்தை பகவதி உதவியுடன் பொய் என்பதை நிரூபிப்பதே மீதி கதை. வழக்கம் போல காதில் பூவைச் சுற்றும் கதைக்களம்.

No comments:

Post a Comment