1 பிப்ரவரி 1970யில் வெளியான இப்படத்தை இயக்கியவர் வி.டி.அரசு. பில்டிங் காண்ட்ராக்டர் நல்லதம்பி என்ற பாத்திரத்தில் சோ தனி காமெடி டிராக்கில் கலக்கியுள்ளார். அவருக்கு ஜோடியாக மனோரமா. தம்முடைய தங்கைக்குச் சங்கீதம் கற்றுத் தர வரும் மனோரமாவைக் காதலித்து மணமுடித்துக் கொள்கிறார் சோ. அதன்பின் எதற்கெடுத்தாலும் பாட்டு பாடும் மனோரமாவைப் பாடாமல் நிறுத்தி வைக்க அவர் படாத பாடு படுவது சூப்பர் காமெடி. மனோரமாவும் போட்டி போட்டு மிகச் சிறப்பாக நடித்துள்ளார். இவர்கள் இருவரும் தனி டிராக்கில் காமெடி செய்வதே படத்தின் மிகப் பெரிய பலம்.
ஏ.வி.எம்.ராஜன் இரட்டை வேடத்தில் வருகிறார். பெரும் பணக்காரரான அவர், தம்முடைய கவனமின்மையாலும் நடத்தையாலும் பணம் நஷ்டப்பட்டு அவதிப்படுகிறார். இரவோடு இரவாக வீட்டை விட்டு வெளியேறுகிறார். அவருடைய நண்பனான இன்னொரு ராஜன் அவர் இடத்தில் வந்து, நொடிந்து போன வணிகத்தை நிலை நிறுத்தி, ஊதாரித்தனமாகச் செலவழிக்கும் குடும்பத்தினரைத் திருத்தி, தங்கைக்குத் திருமணமும் செய்து வைக்கிறார். ஓடிப் போன ராஜன் திரும்பி வருகிறார் - மனம் திருந்துகிறார்.
புஷ்பலதா ராஜனுக்கு ஜோடியாகவம், ஸ்ரீகாந்த் அவருக்குத் தம்பியாகவும் நடித்துள்ளனர்.
ஏ.வி.எம்.ராஜன் இரட்டை வேடத்தில் வருகிறார். பெரும் பணக்காரரான அவர், தம்முடைய கவனமின்மையாலும் நடத்தையாலும் பணம் நஷ்டப்பட்டு அவதிப்படுகிறார். இரவோடு இரவாக வீட்டை விட்டு வெளியேறுகிறார். அவருடைய நண்பனான இன்னொரு ராஜன் அவர் இடத்தில் வந்து, நொடிந்து போன வணிகத்தை நிலை நிறுத்தி, ஊதாரித்தனமாகச் செலவழிக்கும் குடும்பத்தினரைத் திருத்தி, தங்கைக்குத் திருமணமும் செய்து வைக்கிறார். ஓடிப் போன ராஜன் திரும்பி வருகிறார் - மனம் திருந்துகிறார்.
புஷ்பலதா ராஜனுக்கு ஜோடியாகவம், ஸ்ரீகாந்த் அவருக்குத் தம்பியாகவும் நடித்துள்ளனர்.
No comments:
Post a Comment