சோ நடித்த முதல் புராணப் படமிது. பி.ஆர். பந்துலு இயக்கத்தில் 14 ஏப்ரல் 1973யில் வெளியான படம். சோ நாரதராக நடித்துள்ளார். அரசியல் வசனங்களை மறைமுகமாகப் புகுத்தி நையாண்டி செய்கிறார். ரசிக்கும்படியான நடிப்பு. ஒரு பாட்டில் இவருக்குச் சீர்காழி கோவிந்தராஜன் குரல் கொடுத்துள்ளார்.
சோ, மனோரமா, ஜெயலலிதா, ஜெயந்தி போன்றோர் நிறைவாக நடித்திருந்தாலும் சோ தோன்றும் காட்சிகளைத் தவிர மற்ற இடங்கள் ரசிக்கும்படியாக இல்லை. பல புராண கதைகளின் கலவை தான் இப்படத்தின் கதை. சிரிக்கும்படியான தோற்றத்தில் நவக்கிரகங்கள், தொந்தியுடன் சிவன் (ஜெமினி கணேசன்), வாடி போடி எனச் சண்டையிட்டுக் கொள்ளும் கங்கா - கௌரி, பயந்த சுபாவத்தில் கௌரி, போக்கிரித்தனமான கங்கா எனப் படம் முழுவதுமே அபத்தங்கள்.
ஓ.ஏ.கே. தேவர், அசோகன், சிவகுமார், பூர்ணம் விஸ்வநாதன், சி.கே.சரஸ்வதி, தேங்காய் சீனிவாசன் எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே வீணடிக்கப் பட்டுள்ளது.
சோ, மனோரமா, ஜெயலலிதா, ஜெயந்தி போன்றோர் நிறைவாக நடித்திருந்தாலும் சோ தோன்றும் காட்சிகளைத் தவிர மற்ற இடங்கள் ரசிக்கும்படியாக இல்லை. பல புராண கதைகளின் கலவை தான் இப்படத்தின் கதை. சிரிக்கும்படியான தோற்றத்தில் நவக்கிரகங்கள், தொந்தியுடன் சிவன் (ஜெமினி கணேசன்), வாடி போடி எனச் சண்டையிட்டுக் கொள்ளும் கங்கா - கௌரி, பயந்த சுபாவத்தில் கௌரி, போக்கிரித்தனமான கங்கா எனப் படம் முழுவதுமே அபத்தங்கள்.
ஓ.ஏ.கே. தேவர், அசோகன், சிவகுமார், பூர்ணம் விஸ்வநாதன், சி.கே.சரஸ்வதி, தேங்காய் சீனிவாசன் எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே வீணடிக்கப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment