Sunday, December 10, 2017

வந்தாளே மகராசி

மனோரமாவுக்கும் சச்சுவுக்கும் இதுவரை ஜோடியாக நடித்து வந்த சோ ஜெயலலிதாவுடன் ஜோடி சேர்ந்த படம். ஜம்பு என்ற கதாபாத்திரத்தில் சண்டைக்கார அக்காளுக்குப் பயந்த அப்பாவியாக வருகிறார். சிறிய வேடம்; ஓஹோ என்று சொல்லும்படியான காமெடி இல்லை; ஆனால் நிறைவாகச் செய்துள்ளார்.

14 ஏப்ரல் 1973யில் வெளியான இப்படத்தை கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கியுள்ளார்.

எம்.என்.ராஜம் எதிர் நாயகி. அவருக்கும் ஜெயலலிதாவுக்கும் தான் படம் முழுக்க ஸ்கோப். ஜெய்சங்கர் உட்பட மற்ற எல்லாருக்கும் படத்தில் அவ்வளவாக காட்சிகள் இல்லை.

பணக்காரரான வி.எஸ்.ராகவன் சபல புத்தியில் இளவயது ராஜத்தைத் திருமணம் செய்து கொள்கிறார். தந்தைக்காக புஷ்பலதா சொத்தைத் தியாகம் செய்கிறார். ராஜமும் அவருடைய அம்மாவும் (சி.கே.சரஸ்வதி) எல்லாருடனும் சண்டை பிடித்து தங்கள் கட்டுப்பாட்டுக்குள் சொத்தை வைத்துக் கொள்கின்றனர். கணவனை இழந்து வரும் புஷ்பலதாவையும் அவருடைய குழந்தைகளையும் ராஜம் படுத்துகிறார். ஒரு சிறு சண்டை காரணமாக அப்பாவியான ஜெயலலிதாவைத் தம்முடைய தம்பியான சோவுக்குத் திருமணம் செய்து வீட்டுக்கு அழைத்து வந்து கொடுமைப்படுத்துகிறார். அதைத் தாங்க முடியாத பக்கத்து வீட்டு ஜெய்சங்கர் கில்லாடியான இன்னொரு ஜெயலலிதாவை ஆள் மாறாட்டம் செய்கிறார். இந்த ஜெயா எப்படி ராஜத்தை வழிக்குக் கொண்டு வந்து நல்லவர்கள் அனைவரையும் காப்பாற்றினார் என்பதே மீதி கதை.

No comments:

Post a Comment