Friday, February 9, 2018

பொன்னூஞ்சல்

சி.வி.ராஜேந்திரன் இயக்கத்தில் 15 ஜூன் 1973யில் வெளியான இப்படத்தில் சிங்காரம் என்ற அசட்டுக் கேரக்டர் சோவுக்கு. தங்கவேலு அப்பா; மனோரமா ஜோடி; வில்லனாக வரும் நம்பியாரின் கையாளாக இருந்து கடைசியில் நாயகனுக்கு உதவும் கதாபாத்திரம். நகைச்சுவை சொல்லும் படியாக இல்லை; பல காட்சிகள் சுத்த அசடு வடிதல். சோ தவிர்த்திருக்க வேண்டிய படமிது.

சிவாஜி ஹீரோ. எஸ்.வி. சுப்பையாவுடைய  மகன். மாமன் சஹஸ்ரநாமத்துடைய மகளான உஷா நந்தினியைக் காதலிக்கிறார். எல்லாம் கை கூடி திருமணம் நடக்கும் சமயத்தில் சுப்பையா பழைய பகையை மனத்தில் வைத்துக்கொண்டு வர தட்சிணை கேட்கிறார். அதைத் தர முடியாததால் இரண்டு குடும்பங்களுக்குமிடையே இடைவெளி விழுகிறது. நம்பியார் செய்யும் சதியால் முத்துராமனைத் திருமண செய்து கொள்கிறார் நாயகி. அவர்கள் வழக்கப்படி நாத்தனாரே தாலி கட்ட வேண்டும். அந்தத் தாலி சிவாஜி வாங்கியது எனத் தெரிந்தவுடன் சிவாஜியே நாயகியை மணந்தவர் என எல்லாரும் ஒப்புக் கொள்கின்றனர். க்ளைமாக்சில் நம்பியாரை முத்துராமன் கொலை செய்து விடுகிறார். காந்திமதி, வி. கோபாலகிருஷ்ணன், சி.ஐ.டி. சகுந்தலா, உசிலை மணி போன்றோரும் நடித்துள்ளனர்.

சுமாரான படம். நம்ப முடியாத திருமண சடங்குகள். ஆகாயப் பந்தலிலே பாடல் மட்டும் சூப்பர். பல நடிகர்கள் இருந்தும் சக்தி கிருஷ்ணசாமியின் வசனம் இருந்தும் படம் ரசிக்கும்படியாக எடுக்கப்படவில்லை. 

No comments:

Post a Comment