Saturday, March 10, 2018

மலை நாட்டு மங்கை

இப்படத்தைப் பார்த்தவுடன் எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் நண்பர்களுக்காக சோ நடித்துக் கொடுத்திருப்பாரென்று. இப்படிப்பட்ட மோசமான படங்களைப் பற்றி, பிற்காலத்தில் யோசித்துப் பார்க்கும் போது நாம் நடிக்காமல் இருந்திருக்கலாமோ எனச் சோ நினைத்திருக்கக் கூடும். பி.சுப்ரமணியம் இயக்கத்தில் 3 செப்டம்பர் 1973யில் வெளிவந்த இப்படம் அறுவையோ அறுவை. சோவுக்கு மிகச் சிறிய வேடம். ராமு என்ற டிரைவர் கேரக்டர். 2-3 காட்சிகளில் உளறுகிறார் - ஒரு பெண்ணிடம் வழிகிறார். அவ்வளவு தான். இப்படி ஒரு படம் சோவுக்குத் தேவையா என நினைக்கத் தோன்றுகிறது.

ஜெமினியும் சசிகுமாரும் நாயகர்கள். விஜஸ்ரீ நாயகி. ஆனந்தன் வில்லன். சுருளி ராஜன், வி.எஸ்.ராகவன் போன்றோரும் படத்தில் உண்டு. காட்டு வாசிகளிடம் சாமியார் போல வேஷமிட்டு ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார் கொள்ளைக்காரரான ஆனந்தன். அவருடைய பிடியிலிருந்து காடு எப்படி தப்பியது என்பதே கதை. ஜெமினி காட்டுவாசியாகவும் சசிகுமார் போலீஸாகவும் நடித்துள்ளனர்.  ஜெமினிக்குத் துணையாக ஒரு யானையும், ஆனந்தனுக்குத் துணையாக ஒரு சிங்கமும் வருகின்றன. 

No comments:

Post a Comment