எஸ்.பி.முத்துராமனின் மோசமான படங்களில் இப்படத்துக்கு கண்டிப்பாக இடம் உண்டு. 1975யில் வெளிவந்தது. இதில் சோவுக்கு வில்லன் வேடம். நகைச்சுவை வில்லன் இல்லை. பக்கா வில்லன்.
மிகவும் சுமாரான கதை; அதை விட சுமாரான திரைக்கதை. செந்தாமரை-எம்.என்.ராஜம் தம்பதி மற்றும் அவர்களுடைய பையன் சோ எல்லாரையும் ஏமாற்றி வட்டிக்குப் பணம் கொடுத்து, முதலையே ஏப்பம் விடுபவர்கள். இன்னொரு பையனான சிவகுமார் அப்பாவி; நல்லவர். அவர்களிடம் அகப்பட்டு அவதிப்படும் வேலைக்காரியாக சுஜாதா- அவருடைய கணவர் விஜயகுமார். வரதட்சிணை வாங்கி படாபட் ஜெயலட்சுமியைச் சோ மணந்து கொள்கிறார். சிவகுமாருடைய காதலியான ஸ்ரீப்ரியாவின் தூண்டுதல் பேரில் சிவகுமாரும் ஜெயலட்சுமியும் நாடகங்கள் ஆடி எப்படி குடும்பத்தைத் திருத்துகின்றனர் என்பதே மீதி கதை.
முத்துராமன், ஜுனியர் பாலையா, சுருளிராஜன், வெண்ணிறாடை மூர்த்தி போன்றோரும் படத்தில் உண்டு.
மிகவும் சுமாரான கதை; அதை விட சுமாரான திரைக்கதை. செந்தாமரை-எம்.என்.ராஜம் தம்பதி மற்றும் அவர்களுடைய பையன் சோ எல்லாரையும் ஏமாற்றி வட்டிக்குப் பணம் கொடுத்து, முதலையே ஏப்பம் விடுபவர்கள். இன்னொரு பையனான சிவகுமார் அப்பாவி; நல்லவர். அவர்களிடம் அகப்பட்டு அவதிப்படும் வேலைக்காரியாக சுஜாதா- அவருடைய கணவர் விஜயகுமார். வரதட்சிணை வாங்கி படாபட் ஜெயலட்சுமியைச் சோ மணந்து கொள்கிறார். சிவகுமாருடைய காதலியான ஸ்ரீப்ரியாவின் தூண்டுதல் பேரில் சிவகுமாரும் ஜெயலட்சுமியும் நாடகங்கள் ஆடி எப்படி குடும்பத்தைத் திருத்துகின்றனர் என்பதே மீதி கதை.
முத்துராமன், ஜுனியர் பாலையா, சுருளிராஜன், வெண்ணிறாடை மூர்த்தி போன்றோரும் படத்தில் உண்டு.