Sunday, June 17, 2018

இதயம் பார்க்கிறது

ஜெய்சங்கரின் 100ஆவது  படம். ஜகந்நாதன் இயக்கம்; 1974 வெளியீடு. அளவிட முடியாத அளவுக்குப் போர். சோ தோன்றும் சில நகைச்சுவைக் காட்சிகள் மட்டுமே படத்தில் ஓரளவுக்கு நன்றாக உள்ளன. சோவுக்குப் புரோக்கர் பரமசிவம் என்ற பாத்திரம். கௌரவ வேடம்; மனோரமா ஜோடி.

ஜெய்சங்கர்-ஜெயசித்ரா காதலர்கள். ஜெயசித்ரா வெளிநாட்டுக்குப் படிக்க சென்று விடுகிறார். ஒரு விபத்தில் ஜெய்க்குக் கண்பார்வையும் ஒரு கையும் விளங்காமல் போய் விடுகிறது. ஒரு கொள்ளைக்கார கும்பலிடம் மாட்டிக்கொள்ளும் ஜெய் எப்படி மீண்டார் என்பதே கதை. தேங்காய் சீனிவாசனும் ஸ்ரீகாந்தும் வில்லன்கள். மேஜர் சுந்தர்ராஜன், நீலு போன்றோரும் படத்தில் உண்டு.

No comments:

Post a Comment