1974யில் எம்.கிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் சோவுக்குக் கௌரவ வேடம். ஹுசைனி என்ற கைதி; நாயகனுக்கு உதவி செய்து அவர் சிறையில் இருந்து தப்பிக்க உதவுகிறார். நகைச்சுவை என்று பெரிதாக எதுவும் இல்லை. சோ மட்டுமில்லை; இப்படத்தில் ரவிசந்திரன், விஜயகுமாரி, மனோரமா, அசோகன், தேங்காய் சீனிவாசன், சுருளி ராஜன் எனப் பலருக்கும் கௌரவ வேடங்கள்.
ஏ.வி.எம்.ராஜன் ஒரு சிறிய தகராறில் அடுத்த வீட்டுக்காரரான கண்ணனைக் கொலை செய்து தலை மறைவாகிவிடுகிறார். அவருடைய மனைவி விஜயகுமாரி இறந்து விட, அவருடைய பெண் குழந்தை ஏழை தேங்காய் சீனிவாசனிடம் வளர்கிறாள். அவருடைய நண்பனான எம்.ஆர்.ஆர். வாசு தாம் அப்பெண்ணை வளர்ப்பதாகப் பொய் சொல்லி ராஜனைக் கொள்ளையிட வைத்து அவ்வப்போது பணம் பறிக்கிறார். ஒரு கட்டத்தில் தம்முடைய மகளைப் பார்க்க ராஜன் வர, அவரைப் போலீசில் மாட்டி விடுகிறார் வாசு. சிறையிலிருந்து தப்பிக்கும் ராஜன் தம்முடைய மகளான ஜெயா வீட்டில் மறைந்து இருக்கிறார். போலீசாரின் உதவியோடு ராஜனைச் சுடுகிறார். ராஜன் மகள் மடியில் உயிர் விடுகிறார். அவர் உயிர் விடும் தருணத்திலேயே மகளுக்கு உண்மை தெரிகிறது.
ஏ.வி.எம்.ராஜன் ஒரு சிறிய தகராறில் அடுத்த வீட்டுக்காரரான கண்ணனைக் கொலை செய்து தலை மறைவாகிவிடுகிறார். அவருடைய மனைவி விஜயகுமாரி இறந்து விட, அவருடைய பெண் குழந்தை ஏழை தேங்காய் சீனிவாசனிடம் வளர்கிறாள். அவருடைய நண்பனான எம்.ஆர்.ஆர். வாசு தாம் அப்பெண்ணை வளர்ப்பதாகப் பொய் சொல்லி ராஜனைக் கொள்ளையிட வைத்து அவ்வப்போது பணம் பறிக்கிறார். ஒரு கட்டத்தில் தம்முடைய மகளைப் பார்க்க ராஜன் வர, அவரைப் போலீசில் மாட்டி விடுகிறார் வாசு. சிறையிலிருந்து தப்பிக்கும் ராஜன் தம்முடைய மகளான ஜெயா வீட்டில் மறைந்து இருக்கிறார். போலீசாரின் உதவியோடு ராஜனைச் சுடுகிறார். ராஜன் மகள் மடியில் உயிர் விடுகிறார். அவர் உயிர் விடும் தருணத்திலேயே மகளுக்கு உண்மை தெரிகிறது.
No comments:
Post a Comment