Tuesday, June 12, 2018

ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு

ரா. சங்கரன் இயக்கத்தில் 1974யில் வெளியான இப்படத்தில் சிவகுமார், ஜெயசித்ரா, வி.எஸ்.ராகவன், ஸ்ரீகாந்த் போன்றோருடன் சோவும் நடித்துள்ளார். பரந்தாமன் என்ற கேரக்டர். படமும் நகைச்சுவையும் சுமார் ரகம். அவ்வப்போது அண்ணா அண்ணா எனக் கூப்பிட்டு தி.மு.க.வைத் தாக்குகிறார். டெல்லி குமார் அறிமுகம் இப்படத்தில். அவர் சோவுடைய அண்ணன். மனோரமா ஜோடி. சுருளி ராஜன் மகன்.

கதை, திரைக்கதை, வசனம் எல்லாமே சுமார் ரகம் இப்படத்தில். பணக்கார டெல்லி குமாருடைய இறந்து போன தம்பி மகள் ஜெயசித்ரா. அவருடைய செல்ல மகள். அவருக்கு இன்னொரு தம்பியான சோ குடும்பத்தையும், தங்கையான பண்டரி பாயையும் பிடிக்காது. பண்டரிபாயுடைய மகன் சிவகுமார் ஜெயசித்ராவைக் காதலிக்கிறார். ஒரு விபத்தில் அவர் கண் பார்வை பறி போக, அவரை குமாரின் எதிர்ப்பை மீறித் திருமணம் செய்து கொள்கிறார் ஜெயசித்ரா. அதனால் குமாருடன் அவருக்குப் பேச்சு வார்த்தை நின்று விடுகிறது.

கடன் தொல்லையால் சோ தலை மறைவாகிவிட, அவருடைய குடும்பம் குமார் வீட்டில் தஞ்சம் புகுகிறது. ஒரு கட்டத்தில் சில காரணங்களால் தாம் இறந்து விட்டதாகவும் முதலில் யாருக்குக் குழந்தை பிறக்கிறதோ அவர்களுக்கே தமது சொத்து என அவர் உயில் எழுத, சுருளியும், வயதான மனோரமாவும் முதலில் குழந்தை பெற போட்டி போடுகின்றனர். கடைசியில் சிவகுமார் கண் பார்வை கிடைக்க, அவர்களே உத்தமர்கள் என குமார் உணர, படம் முடிகிறது.

No comments:

Post a Comment