9 செப்டம்பர் 1979யில் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் வெளியான இப்படம் இன்றளவிலும் ரஜினியின் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்த படமாகப் போற்றப்படுகிறது. நம்ப முடியாத, மிகவும் வேகமான கடைசி 10-15 நிமிடங்களைத் தவிர்த்தால் படம் நன்றாகவே உள்ளது. சோ அழகேசன் என்ற பெயரில் பத்திரிகையாளராகவும் ரஜினியின் நண்பனாகவும் வருகிறார். இவர் இவருடைய அக்மார்க் அரசியல் வசனங்களை அவ்வப்போது பேசுகிறார். ஆனால் அவருக்கு நகைச்சுவை வேடமில்லை; குணச்சித்திர வேடம். நிறைவாகச் செய்துள்ளார்.
ஆறு வயதில் தந்தை இறந்ததிலிருந்து குடும்பத்தைத் தாங்கிப் பிடிக்கிறார் ரஜினிகாந்த். காதல் தோல்வி, பணக் கஷ்டம், தாயின் மரணம் இவற்றுக்கிடையே தம்பி தங்கையைப் படிக்க வைக்கிறார். பெரும் பணக்காரனாகும் தம்பியும், பணக்காரனைத் திருமணம் செய்து கொள்ளும் தங்கையும் இவரைப் புறக்கணிக்கிறார்கள். வேலை இழக்கிறார். மனைவி படாபட் ஜெயலட்சுமியை நெருப்பில் பறிகொடுக்கிறார். வறுமையில் குடும்பமே தத்தளிக்கிறது. பின் கதை எழுதி பிரபலமாகி, பத்திரிகை தொடங்கி பணக்காரராகி, அவார்ட் வாங்குகிறார். அப்போது இவருடைய உடன் பிறப்புகள் சொந்தம் கொண்டாடுகின்றனர்.
பாடல்களும் அருமை. நடிகர்கள் அனைவரும் நிறைவாக நடித்துள்ளனர். தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன், ஜெயா, சங்கீதா, எல்.ஐ.சி. நரசிம்மன் எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே படத்தில் உள்ளது. நகைச்சுவைக் காட்சிகள் இல்லை; ஆனால் அது குறையாகத் தெரியவில்லை.
ஆறு வயதில் தந்தை இறந்ததிலிருந்து குடும்பத்தைத் தாங்கிப் பிடிக்கிறார் ரஜினிகாந்த். காதல் தோல்வி, பணக் கஷ்டம், தாயின் மரணம் இவற்றுக்கிடையே தம்பி தங்கையைப் படிக்க வைக்கிறார். பெரும் பணக்காரனாகும் தம்பியும், பணக்காரனைத் திருமணம் செய்து கொள்ளும் தங்கையும் இவரைப் புறக்கணிக்கிறார்கள். வேலை இழக்கிறார். மனைவி படாபட் ஜெயலட்சுமியை நெருப்பில் பறிகொடுக்கிறார். வறுமையில் குடும்பமே தத்தளிக்கிறது. பின் கதை எழுதி பிரபலமாகி, பத்திரிகை தொடங்கி பணக்காரராகி, அவார்ட் வாங்குகிறார். அப்போது இவருடைய உடன் பிறப்புகள் சொந்தம் கொண்டாடுகின்றனர்.
பாடல்களும் அருமை. நடிகர்கள் அனைவரும் நிறைவாக நடித்துள்ளனர். தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன், ஜெயா, சங்கீதா, எல்.ஐ.சி. நரசிம்மன் எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே படத்தில் உள்ளது. நகைச்சுவைக் காட்சிகள் இல்லை; ஆனால் அது குறையாகத் தெரியவில்லை.