Saturday, July 7, 2018

அன்னப்பூரணி


1978யில்  வெளியான இப்படத்தை இயக்கியவர் பஞ்சு-கிருஷ்ணன. 


பணக்காரர் வீட்டில் வளரும் அனாதைப் பெண்ணான கே.ஆர்.விஜயா பெரியவரானவுடன், அக்குடும்பத்தின் ஊதாரிப் பிள்ளையான ஸ்ரீகாந்த் கெட்டுப் போகாமல் காத்து வருகிறார். இதற்கிடையே முத்துராமனைக் கல்யாணம் செய்து கொள்கிறார். வில்லன் மேஜர் சுந்தர்ராஜனால் கணவர் மீது விழும் கொலைப் பழியை எப்படி துடைக்கிறார் என்பது மீதிக் கதை. 

மொத்தத்தில் அலுப்பு தட்டும் கதை, வசனம், நடிப்பு. படத்தின் ஒரே ஆறுதல் சோவுடைய அரசியல் வசனங்கள். அதுவும் காலட்சேபம் செய்கிறேன் என அரசியலையும் சினிமாவையும் தாக்கும் காட்சி பிரமாதம். ஆங்கிலோ இந்தியனான மனோரமா சோவுக்கு ஜோடி; நீலு மாமனார்.


 

No comments:

Post a Comment