Sunday, July 29, 2018

நாடகமே உலகம்

கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் 18 மே 1979யில் வெளிவந்த இப்படம் எப்படி படத்தை மோசமாக எடுக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக விளங்கும் படமாகும். பெரிய இயக்குனர்கள் - பெரிய நடிகர்கள் - ஆனால் ஏன்  இப்படி ஒரு படம்?

கோடீஸ்வரர் சுந்தர்ராஜன்- எம்.என்.ராஜம் தம்பதியுடைய மகள்  கே.ஆர்.விஜயா இளகிய மனம் படைத்தவர். ஏழைகளுக்கு அள்ளித் தருபவர். ஒரு லட்சம் செலவழித்து தம்மிடம் வேலை பார்க்கும் ஜெயமாலினிக்குத் திருமணம் செய்து வைக்கிறார். அதனால் கோபம் கொள்ளும் சுந்தர்ராஜன் பெண்ணை வீட்டை விட்டு அனுப்பி விடுகிறார். அதே சமயம் தாம் அவருடைய சொந்தப் பெண் இல்லை என்ற உண்மையும் விஜயாவுக்குத் தெரிகிறது. தாம் உதவிய ஜெயமாலினி வீட்டிலேயே தங்குகிறார். அவர் வில்லன் நம்பியாருடன் சேர்ந்து கொண்டும் தம்முடைய கணவரான சரத்பாபுவைக் கொல்ல முயல்கிறார். அதை ஹீரோ மோகன்பாபு உதவியுடன் விஜயா தடுக்கிறார். இது தான் கதை. சோ ரத்தன் என்ற பெயரில் சேட் நம்பியாரின் வேலைக்காரராக வருகிறார். நகைச்சுவை சுத்தமாக எடுபடவில்லை. அவர் தோன்றும் காட்சிகளும் குறைவு.

மனோரமா, சி.ஐ.டி.சகுந்தலா, வெண்ணிறாடை நிர்மலா போன்றோரும் படத்தில் நடித்துள்ளனர். 

No comments:

Post a Comment