Saturday, July 14, 2018

சோ சிறு வேடங்களில் நடித்த சில நாடகங்கள்

விவேகா பைன் ஆர்ட்ஸ் நாடகங்களிலும் சினிமாவிலும் பிசியாக இருந்த சமயத்திலும் சோ சிறு வேடங்களில் மற்றவர்கள் எழுதிய நாடகங்களிலும் நடித்து வந்தார். 

ஒய்.ஜி.பியின்  "அண்டர் செகரட்டரி " என்ற நாடகத்தில் சோ மனம் போனவாறு வசனங்கள் பேச, மற்ற நடிகர்கள் திணறுவர். ஆனால் பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்த ஜெயலலிதாவோ அசராமல் உடனுக்குடன் பதில் வசனம் பேசி நடிப்பாராம். 1964யில் மேடையேறிய நாடகம் இது. 

"தி ஹோல் ட்ரூத்" என்ற ஆங்கில நாடகத்தில் வில்லன் சோ ஜெயலலிதாவைக் கழுத்தை நெரிக்கும்படி ஒரு காட்சி. சோவுடைய கண்களைப் பார்த்து ஜெயலலிதா சிரித்து விட, அக்காட்சியில் சோ அவருடைய முகத்தைப் பார்க்காதவாறு காட்சி மாற்றி அமைக்கப்பட்டது.

ஜெயலலிதாவின் முதல் நாயகனும் வில்லனும் சோவே.

"டீ ஹவுஸ் ஆப் தி ஆகஸ்ட் மூன்" என்ற ஆங்கில நாடகத்தில் அமெரிக்க சோல்ஜராக சோவும், ஜப்பானியப் பெண்ணாக ஜெயலலிதாவும் நடித்தனர். இது விவேகா பைன் ஆர்ட்ஸின் நாடகம். 1969யில் மேடையேறியது.

1962யில் "சொல்லித் தெரிவதில்லை" என்ற நாடகம் ஜெ.முத்துசாமி எழுதி பாலசந்தர் இயக்கினார். அதில் அம்பி, நீலு, நாணி, சோ ஆகியோர் நடித்தனர். நாணியுடன்  தோன்றுகிற காட்சியில் திடீரென சோ திக்க ஆரம்பிக்க, அதை எதிர்பார்க்காத நாணி ஏன் திக்குகிறாய் எனக் கேட்டார். டைப்பாய்டு வந்து விட்டதால் திக்குவதாகச் சோ சொன்னார். கடைசிக் காட்சியில் திக்காமல் சோ பேசினார். ஏன் திக்கவில்லை என நாணி கேட்க, மீண்டும் டைப்பாய்டு வந்து திக்குவது நின்று விட்டது எனச் சோ ஒரு போடு போட்டார். ஆடியன்சிடமிருந்து நல்ல அப்லாஸ். இதை முதலில்  சற்றும் விரும்பாத பாலசந்தர், இது நன்றாக வந்ததால் அதை நாடகத்தின் காட்சியாக மாற்றினார். 

No comments:

Post a Comment