விவேகா ஃபைன் ஆர்ட்ஸில் பிசியாக இருந்து கொண்டே சோ ஒய்.ஜி.பி.யின்
நாடகங்களிலும் நடித்து வந்தார். பட்டு
எழுதிய ஒய்.ஜி.பி.யின் "பெற்றால் தான் பிள்ளையா" என்ற நாடகத்தில் மாடசாமி
என்ற கதாபாத்திரத்தில் சோ புகுந்து விளையாடினார். அந்த நாடகத்தின் வெற்றி டைரக்டர்
பீம்சிங்கையும் நடிகர் திலகம் சிவாஜியையும் அதைத் திரைப்படமாக எடுக்க வைத்தது. மாடசாமி
என்ற கதாபாத்திரத்தில் சோ தான் நடிக்க வேண்டும் என பிடிவாதமாக இருந்து அதை நடத்தியும்
காட்டினார் சிவாஜி. இப்படித்தான் சோவுடைய சினிமா பிரவேசம் நடந்தது. அந்தப் படத்தின் பெயர் "பார் மகளே பார்".
நாடகம் மேடையேறிய ஆண்டு 1961. திரைப்படம் வெளிவந்த ஆண்டு 1963.
சோ எழுதி இயக்கி நடித்த நாடகங்கள் பல இருந்தாலும் அவர் வேறொருவர் எழுதிய நாடகத்தில் நடித்த சிறு வேடமே அவரை சினிமாவுக்குக் கொண்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment