மார்ச் 4, 1977யில் வெளியான இப்படம் மிகச் சிறந்த நகைச்சுவைக் குடும்பச் சித்திரம். இது ஒரு மேடை நாடகம்; எஸ்.ஏ. கண்ணன் இயக்கத்தில் படமாக்கப்பட்டது.
ஒரு காட்சி கூட சலிப்படைய வைக்காத படம். பெரிய நட்சத்திரக் கூட்டமே படத்தில் உண்டு. எல்லாருமே தங்கள் பாத்திரம் அறிந்து அருமையாக நடித்துள்ளனர். அசடு வழியாமல், அடிதடி இல்லாமல், யாரையும் கிண்டலடிக்காமல் சிரிக்க வைக்க முயற்சித்து அதில் வெற்றியும் அடைந்துள்ளனர். அதே சமயத்தில் படம் சிந்திக்கவும் வைக்கிறது.
மேஜர் சுந்தர்ராஜன் பண்டரி பாய் தம்பதியரின் மகள் கே.ஆர்.விஜயா. அவருடைய கணவர் சோ. பாலு என்ற அப்பாவி வேடம். வீட்டோடு மாப்பிள்ளை. அவர் செய்யும் அப்பாவித்தனமான வேலைகள் நம்முடைய வயிற்றை நோக அடிக்கின்றன. அவருடைய வழக்கமான அரசியல் வசனங்கள் இல்லை என்றாலும் அவரை இப்படத்தில் ரசிக்க முடிகிறது.
விஜயாவுடைய தம்பியாக ஒய்.ஜி.மகேந்திரன். அவர் சங்கீதாவைத் திருமணம் செய்து கொள்கிறார். அவருக்குத் தனிக் குடித்தனம் போக ஆசை. மனைவியைத் தூண்டி, வீட்டாருடன் சண்டை மூட்ட வைக்கும் அவருடைய முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிகின்றன. கடைசியில் அவர் விரும்பியபடி தனிக் குடித்தனம் இருக்கிறார். ஆனால் அதில் இருக்கும் சிரமங்கள் அவரைத் திருத்தி மீண்டும் குடும்பத்துடன் இணைய வைக்கிறது.
காத்தாடி ராமமூர்த்தி, வி.கே.ராமசாமி, ஒய்.ஜி.பார்த்தசாரதி போன்றோரும் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஒரு காட்சி கூட சலிப்படைய வைக்காத படம். பெரிய நட்சத்திரக் கூட்டமே படத்தில் உண்டு. எல்லாருமே தங்கள் பாத்திரம் அறிந்து அருமையாக நடித்துள்ளனர். அசடு வழியாமல், அடிதடி இல்லாமல், யாரையும் கிண்டலடிக்காமல் சிரிக்க வைக்க முயற்சித்து அதில் வெற்றியும் அடைந்துள்ளனர். அதே சமயத்தில் படம் சிந்திக்கவும் வைக்கிறது.
மேஜர் சுந்தர்ராஜன் பண்டரி பாய் தம்பதியரின் மகள் கே.ஆர்.விஜயா. அவருடைய கணவர் சோ. பாலு என்ற அப்பாவி வேடம். வீட்டோடு மாப்பிள்ளை. அவர் செய்யும் அப்பாவித்தனமான வேலைகள் நம்முடைய வயிற்றை நோக அடிக்கின்றன. அவருடைய வழக்கமான அரசியல் வசனங்கள் இல்லை என்றாலும் அவரை இப்படத்தில் ரசிக்க முடிகிறது.
விஜயாவுடைய தம்பியாக ஒய்.ஜி.மகேந்திரன். அவர் சங்கீதாவைத் திருமணம் செய்து கொள்கிறார். அவருக்குத் தனிக் குடித்தனம் போக ஆசை. மனைவியைத் தூண்டி, வீட்டாருடன் சண்டை மூட்ட வைக்கும் அவருடைய முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிகின்றன. கடைசியில் அவர் விரும்பியபடி தனிக் குடித்தனம் இருக்கிறார். ஆனால் அதில் இருக்கும் சிரமங்கள் அவரைத் திருத்தி மீண்டும் குடும்பத்துடன் இணைய வைக்கிறது.
காத்தாடி ராமமூர்த்தி, வி.கே.ராமசாமி, ஒய்.ஜி.பார்த்தசாரதி போன்றோரும் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
No comments:
Post a Comment