28 பிப்ரவரி 1985யில் வியட்நாம் வீடு சுந்தரம் எழுதி, கே.சங்கர் இயக்கிய இப்படத்தில் சோவுக்கு மிக முக்கியமான வேடம். படத்தில் பல கிளைக் கதைகள். ஒவ்வொரு கிளைக் கதையிலும் தோன்றும் ஒரே பாத்திரம் சோ நடித்த நாரதர் பாத்திரம் மட்டுமே. சோவுக்கு கிண்டலாக வசனம் பேசவும் மறைமுகமாக அக்கால அரசியலைத் தாக்கவும் நல்ல வாய்ப்பு; நன்றாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார். அவர் தோன்றும் காட்சிகள் மட்டுமே படத்தின் பலம். மற்றபடி படத்தில் சொல்லும்படி ஒன்றும் இல்லை. நவகிரகங்களின் அருமையையும், அவர்களின் நாயகியான அம்மனின் அருமையும் போற்றும் படம்.
படத்தில் பல நட்சத்திரப் பட்டாளங்கள். கே.ஆர்.விஜயா, வி.கோபாலகிருஷ்ணன், விஜயகாந்த், ஸ்ரீ காந்த், பாண்டியன், சுரேஷ், மேஜர் சுந்தர்ராஜன், மனோகர், நளினி, சிவசந்திரன், விஜி,அனுராதா, வெண்ணிறாடை மூர்த்தி என அளவிட முடியாத நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.
படத்தில் பல நட்சத்திரப் பட்டாளங்கள். கே.ஆர்.விஜயா, வி.கோபாலகிருஷ்ணன், விஜயகாந்த், ஸ்ரீ காந்த், பாண்டியன், சுரேஷ், மேஜர் சுந்தர்ராஜன், மனோகர், நளினி, சிவசந்திரன், விஜி,அனுராதா, வெண்ணிறாடை மூர்த்தி என அளவிட முடியாத நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.