Showing posts with label Drama. Show all posts
Showing posts with label Drama. Show all posts

Sunday, January 6, 2019

1980களில் சோ

1950களில் சோவின் நாடகப் பிரவேசம் நடந்தது. 1960களில்  அவர் மிகப் பெரிய நாடக ஆசிரியராக அறியப்பட்டார். அவருடைய திரைப்படப் பிரவேசமும் நடந்தது. 1970களில் அவர் மேலும் சில நாடகங்களை எழுதினார். பல்வேறு படங்களில் நடித்தார்.

1980களில் சோவின் நாடகங்கள்

1) சாத்திரம் சொன்னதில்லை  - 1980
2) நேர்மை உறங்கும் நேரம்  - 1981


1980களில் சோவின் திரைப்படங்கள் 


1) கழுகு 
வெளியான தேதி - 6 மார்ச் 1981
இயக்குனர்  - எஸ்.பி.முத்துராமன்
நாயகன் - ரஜினிகாந்த்
நாயகி - ரதி
கதாபாத்திரம் பெயர் - ராமசாமி
ஜோடி - கிடையாது 


2) துணைவி  
வெளியான தேதி - ஏப்ரல் 1981
இயக்குனர்  - வலம்புரி சோமநாதன்
நாயகன் - சிவகுமார் 
நாயகி - சுஜாதா
கதாபாத்திரம் பெயர் - கிடையாது 
ஜோடி - எம்.என்.ராஜம் 


3) கடவுளின் தீர்ப்பு   
வெளியான தேதி - ஜூலை 1981
இயக்குனர்  - விந்தன்
நாயகன் - விஜயபாபு
நாயகி - சங்கீதா 
கதாபாத்திரம் பெயர் - சங்கரன் ஐயர்
ஜோடி - எம்.பானுமதி 
மேற்குறிப்பு - சோ குணச்சித்திர வேடத்தில் வருகிறார்

4) வடைமாலை   
வெளியான தேதி - 12 மார்ச் 1982
இயக்குனர்  - வாலி, மருத்திரா
நாயகன் - ஸ்ரீகாந்த்
நாயகி - தெரியவில்லை 
கதாபாத்திரம் பெயர் - தெரியவில்லை
ஜோடி - தெரியவில்லை  


5) நம்பினால் நம்புங்கள்    
வெளியான தேதி - 1982
இயக்குனர்  - எம். எஸ். கோபிநாத்
நாயகன் - சிவகுமார்
நாயகி - சரிதா
கதாபாத்திரம் பெயர் - தெரியவில்லை
ஜோடி - தெரியவில்லை  


6) சாட்டை இல்லாத பம்பரம்    
வெளியான தேதி - மே 1983
இயக்குனர்  - ஈரோடு முருகேஷ்
நாயகன் - சிவகுமார்
நாயகி - சரிதா
கதாபாத்திரம் பெயர் - தர்மலிங்கம்
ஜோடி - கிடையாது 
மேற்குறிப்பு - சோ வில்லன் வேடத்தில் வருகிறார்


7) அடுத்த வாரிசு     
வெளியான தேதி - 7 ஜூலை 1983
இயக்குனர்  - எஸ்.பி.முத்துராமன்
நாயகன் - ரஜினிகாந்த்
நாயகி - ஸ்ரீதேவி
கதாபாத்திரம் பெயர் - ராமன்
ஜோடி - கிடையாது 

8) நான் மகான் அல்ல     
வெளியான தேதி - 14 ஜனவரி 1984
இயக்குனர்  - எஸ்.பி.முத்துராமன்
நாயகன் - ரஜினிகாந்த்
நாயகி - ராதா 
கதாபாத்திரம் பெயர் - ஹரி சந்திர ரெட்டி
ஜோடி - கிடையாது 


9) உள்ளம் உருகுதடி      
வெளியான தேதி - 18 மே  1984
இயக்குனர்  - ஈரோடு என். முருகேஷ் 
நாயகன் - சுரேஷ்
நாயகி - விஜி 
கதாபாத்திரம் பெயர் - தெரியவில்லை  
ஜோடி - தெரியவில்லை  


10) தலையணை மந்திரம்      
வெளியான தேதி - 15 ஆகஸ்ட் 1984
இயக்குனர்  - என். வெங்கடேஷ் 
நாயகன் - பாண்டியன்
நாயகி - சுலக்ஷனா  
கதாபாத்திரம் பெயர் - தெரியவில்லை  
ஜோடி - தெரியவில்லை  


11) நவக்கிரக நாயகி 
வெளியான தேதி - 28 பிப்ரவரி 1985
இயக்குனர்  - கே.சங்கர் 
நாயகன் - விஜயகாந்த், பாண்டியன், சுரேஷ்
நாயகி - கே.ஆர்.விஜயா, நளினி, விஜி
கதாபாத்திரம் பெயர் - நாரதர்
ஜோடி - கிடையாது 


12) புதிய தீர்ப்பு  
வெளியான தேதி - 1985
இயக்குனர்  - சி.வி.ராஜேந்திரன்
நாயகன் - விஜயகாந்த்
நாயகி - அம்பிகா
கதாபாத்திரம் பெயர் - கிடையாது 
ஜோடி - கிடையாது 


13) கண்ணத் தொறக்கணும் சாமி   
வெளியான தேதி - 14 ஏப்ரல் 1986
இயக்குனர்  - ஆர்.கோவிந்தராஜ்
நாயகன் - சிவகுமார்
நாயகி - ஜீவிதா
கதாபாத்திரம் பெயர் - வேணு  
ஜோடி - ரஜனி

14) இனிய உறவு பூத்தது    
வெளியான தேதி - 1987
இயக்குனர்  - ஸ்ரீதர் 
நாயகன் - சுரேஷ்
நாயகி - நதியா  
கதாபாத்திரம் பெயர் - தெரியவில்லை  
ஜோடி - தெரியவில்லை  


15) சின்னக்  குயில் பாடுது     
வெளியான தேதி - 1 மே 1987
இயக்குனர்  - பி.மாதவன்
நாயகன் - சிவகுமார், பாக்யராஜ் 
நாயகி - அம்பிகா, இளவரசி
கதாபாத்திரம் பெயர் - ராமசாமி
ஜோடி - கிடையாது 


16) ஆனந்த் 
வெளியான தேதி - 7 ஆகஸ்ட் 1987
இயக்குனர்  - சி.வி.ராஜேந்திரன்
நாயகன் - பிரபு 
நாயகி - ராதா
கதாபாத்திரம் பெயர் - கிடையாது 
ஜோடி - செளகார் ஜானகி


17) மனிதன்     
வெளியான தேதி - 21 அக்டோபர் 1987
இயக்குனர்  - எஸ்.பி.முத்துராமன்
நாயகன் - ரஜினிகாந்த்
நாயகி - ரூபிணி
கதாபாத்திரம் பெயர் - புரோக்கர் பொன்னம்பலம்
ஜோடி - கிடையாது 


18) குரு சிஷ்யன்
வெளியான தேதி - 13 ஏப்ரல் 1988
இயக்குனர்  - எஸ்.பி.முத்துராமன்
நாயகன் - ரஜினிகாந்த், பிரபு 
நாயகி - சீதா, கெளதமி 
கதாபாத்திரம் பெயர் - கிடையாது 
ஜோடி - கிடையாது 



1980களின் நாடகங்கள் மற்றும் திரைப்படங்களின் எண்ணிக்கை

எழுதிய நாடகங்கள் - 2
நடித்த நாடகங்கள் - 2
இயக்கிய நாடகங்கள் - 2
நடித்த திரைப்படங்கள் - 18
சீரியஸ் கதாபாத்திரத்தில் நடித்த படங்கள் - 2
சண்டைக்காட்சிகளில் நடித்த படங்கள் - 1
நாயகனாக நடித்த படங்கள் - 0
வில்லனாக நடித்த படங்கள் - 1
கௌரவ வேடத்தில் நடித்த படங்கள் - 0
எழுதிய படங்கள் -0
இயக்கிய படங்கள் - 0
சோ நாடகம் படமாக்கப்பட்டது -0
இரட்டை வேடங்களில் நடித்த படங்கள் -0
புராணப் பாத்திரத்தில் நடித்த படங்கள் - 1

சோ நடித்த படங்களின் நாயகர்கள் 

ரஜினிகாந்த் 5 படங்கள் 
சிவகுமார் 5 படங்கள்
சுரேஷ் - 3 படங்கள்
விஜயகாந்த் - 2 படங்கள்
பிரபு - 2 படங்கள்
பாண்டியன் 2 படங்கள்
பாக்யராஜ்  - 1 படம்
 ஸ்ரீகாந்த் - 1 படம்
விஜயபாபு 1 படம்


சோ நடித்த படங்களின் நாயகியர் 


சரிதா 2 படங்கள்
அம்பிகா- 2 படங்கள்
ராதா  2 படங்கள்
விஜி - 2 படங்கள்
ரதி 1 படம்
ஸ்ரீதேவி 1 படம்
சுஜாதா- 1 படம்
சங்கீதா- 1 படம்
சீதா- 1 படம்
கெளதமி- 1 படம்
சுலக்ஷனா  - 1 படம்
கே.ஆர்.விஜயா- 1 படம்
நளினி- 1 படம்
ஜீவிதா- 1 படம்
நதியா  - 1 படம்
இளவரசி - 1 படம்
ரூபிணி - 1 படம்


சோ நடித்த படங்களின் இயக்குனர்கள்


எஸ்.பி.முத்துராமன்5 படங்கள்
ஈரோடு முருகேஷ் 2 படங்கள்
சி.வி.ராஜேந்திரன் 2 படங்கள்
விந்தன் 1 படம்
வலம்புரி சோமநாதன் 1 படம்
வாலி 1 படம்
மருத்திரா 1 படம்
எம். எஸ். கோபிநாத் 1 படம்
என். வெங்கடேஷ் - 1 படம்
ஸ்ரீதர்  - 1 படம்
பி. மாதவன் - 1 படம்
கே.சங்கர் 1 படம்
ஆர்.கோவிந்தராஜ் 1 படம்

சோவுடன் ஜோடியாக நடித்தவர்கள் 


எம்.பானுமதி 1 படம்
எம்.என்.ராஜம் 1 படம்
ரஜனி1 படம்
செளகார் ஜானகி - 1 படம்

சோ நடித்த படங்கள் எண்ணிக்கை வருடவாரியாக 


1980 - 0
1981 - 3
1982 - 2
1983 - 2
1984 - 3
1985 - 2
1986 - 1
1987 - 4
1988 - 1
1989 - 0

Friday, December 14, 2018

நேர்மை உறங்கும் நேரம்

சோ எழுதிய, இயக்கிய கடைசி நாடகம். 1981யில் மேடையேறியது. முகமது பின் துக்ளக்கைப் போல, முழு அரசியல் நாடகம். 2001யில் ஏதாவது ஒரு மாநிலத்தில் இப்படியும் நடக்கலாம் என்ற கற்பனையில் எழுதப்பட்ட நாடகம். அவருடைய கற்பனை பல முறை உண்மையாகிவிட்டது. 2001க்கு முன்பாகவே இந்நாடகத்தில் சொல்லப்படும் பல சம்பவங்கள் நடந்துள்ளன. துரதிர்ஷ்டவசமாக இப்போதும் அவ்வாறே நடக்கின்றன. இதுவும் சோவின் காலத்தால் அழியாத நாடகமாகிவிட்டது.

சிங்காரம் என்கிற ஆளுங்கட்சித் தலைவராக, துணை முதல்வராக சோ பேசும் வசனங்கள் அகதளம். அவருக்குச் சளைக்காமல் முதலமைச்சர் வேடத்தில் வரும் நீலு. முரடனாக அம்பி. மூவரும்  சென்னைத் தமிழில் வெளுத்து வாங்குகிறார்கள். யாராவது கிட்டத்தட்ட அழிந்து விட்ட சென்னைத் தமிழை ஆராய்ச்சி செய்ய வேண்டுமானால் சோவுடைய நாடகங்களை ஆய்வுக்குப் பயன்படுத்தலாம். அவற்றில் இந்த நாடகத்துக்குச் சிறப்பான இடம் உண்டு.

முதல்வர் மின்சாரம் தாக்கி இறந்து போக, அதை மற்றவர்களிடம் இருந்து மறைக்கிறார் சிங்காரம். முதல்வரைப் போலவே தோற்றம் கொண்ட ராஜு என்ற ஆசாமியைப் பழக்கி ஆள் மாறாட்டம் செய்கிறார். சின்னையன் என்கிற முரடன் நடுவில் புகுந்து ராஜூவை மிரட்டி, ஒரு எம்.எல்.ஏ. ஆகி விடுகிறான். அவன் நல்ல பெருமாள் என்கிற கல்லூரிப் பேராசிரியரை முதல்வருக்கு அறிமுகப்படுத்துகிறான். அந்த படித்தவரின் ஆலோசனைகள் மூலம் நாட்டுக்கு சில நல்ல திட்டங்களை அறிவிக்கிறார் முதல்வர். அதைப் பிடிக்காத சிங்காரம் ஆட்சியைக் கவிழ்க்க முயல்கிறார். பணத்தால் எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்குகிறார் முதல்வர். ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள முயலும் போது, தாமே முதல்வராக வேண்டும் எனச் சொல்லி எதிர்க்கட்சித் தலைவர் கவிழ்த்து விடுகிறார். ஆட்சியைக் கலைக்க ஆளுநரிடம் பரிந்துரைக்க எண்ணும் முதல்வர், தேர்தலில் நின்று வெற்றி பெற்றால் கல்லூரி ஆசிரியரை முதல்வராகப் பதவி ஏற்று நாட்டுக்கு நல்லது செய்யச் சொல்கிறார். ஆலோசனைகள் மட்டுமே சொல்லிப் பழகி விட்ட அந்த மேதாவி, செயலில் இறங்க தயங்குகிறார்; முதல்வராகும் யோசனையை ஏற்க மறுக்கிறார். அவரைத் திட்டித் தீர்க்கும் முதல்வர் சிங்காரத்திடமே சரணடைகிறார். இருவரும் மீண்டும் இணைகின்றனர். நேர்மை நீண்ட உறக்கம் கொள்கிறது.

டீக்கடையில் அரசியல் வெட்டிப்  பேச்சு பேசுபவர்கள், அரசியல்வாதிகளைத் திட்டித் தீர்த்து அவர்கள் நேரில் வந்தால் வளைந்து கொடுப்பவர்கள், நேர்மையாக இருந்து அரசியலில் சேர்ந்தவுடன் பணத்தாசை கொள்பவர்கள், தினம் பேப்பர் படித்துக் கொண்டு எதற்கெடுத்தாலும் நாடு உருப்படாது எனச் சாபமிடுபவர்கள், யார் ஆட்சி செய்கிறார்கள் என்ற சிந்தனை கூட இல்லாமல் பணம் வாங்கிக் கொண்டு ஓட்டு போடுபவர்கள் என நாம் தினம் தினம் சந்திக்கும் பல மனிதர்களை இந்நாடகத்தில் பாத்திரங்களாக்கி உள்ளார் சோ.

போலியான கடவுள் மறுப்புக் கொள்கை, கடல் நீரைக் குடிநீர் ஆக்கும் திட்டம், கள்ளச் சாராயப் பிரச்சினை, தாய்க்குலம், உடன் பிறப்பு போன்ற வாசகங்கள், குதிரைப் பந்தைய ஒழிப்பு எனச் சகலத்தையும் கிண்டலடிக்கிறார் ஆசிரியர்.

நியாயமாக, இந்நாடகத்தில் வரும் ஒவ்வொரு வசனமுமே ரசிக்கத்தக்கது. ஆனால் எல்லாவற்றையுமே இங்கே தொகுக்க முடியாது என்பதால் சிலவற்றை மட்டும் குறிப்பிடுகிறேன்.

ஒரு தொழிலதிபர் அரசியல்வாதியைப் பார்த்து பேசும் வசனங்கள் - "என்ன சார் இது? உங்க வீட்ல நாலு பேர் இருக்காங்க. ரெண்டு ஃபிரிட்ஜ் தான் இருக்குங்கிறீங்க. எப்படி சமாளிக்கிறீங்க? சிம்பிளா இருக்கலாம். அதுக்கு ஒரு லிமிட் இல்லை? ரெண்டே ரெண்டு ஃபிரிட்ஜ் வைச்சுக்கிட்டு சாமியார் மாதிரியா இருக்கறது? "

ஒரு கட்சிக்காரரைப் பார்த்து - "உன் கட்சி பத்திரிகை  தானே? படிக்கிறேன் கேள். புலியே புறப்படு! சிங்கமே ஓடி வா! காளையே எழுந்திரு! இவங்க மனுஷனுக்கு நடத்தலை பத்திரிகை."

"எவனுக்கு ஓட்டு போட்டாலும் வேஸ்ட். இவனுக்கெல்லாம் ஓட்டு போடறதை விட குப்பைத் தொட்டியில் போடலாம். அதாவது ஆட்சிக்கு வந்து நம்மளை தொந்தரவு பண்ணாது."

"கடவுள் நம்பிக்கை இல்லாத சி.எம்.யா நீ. இப்படி முருகா முருகான்னு சொல்லக்கூடாது. அதெல்லாம் பாத்ரூம்லே ரகசியமாச் சொல்லிக்கணும். பப்ளிக் எதிரிலே தாய்தான் தெய்வம்."

"விஞ்ஞானிகள் மாநாடு நேத்து நடந்தது இல்லே? நான்தான் தலைமை வகிச்சேன்...என்னா பேசறதுன்னே புரியலை...கடைசியிலே விஞ்ஞானிங்க சேவை நாட்டுக்குத் தேவை...திருவள்ளுவரே ஒரு விஞ்ஞானிதான்னேன்  திருவள்ளுவரைப் பத்தி நாம என்ன சொன்னாலும் ஓ.கே. தான். திருவள்ளுவர்னா எல்லாரும்  உடனே பயந்து போய் கப்புனு வாயைப் பொத்திக்கிறானுங்க. ஏதோ போனாப் போகுதுன்னு திருவள்ளுவரோடு விட்டேன். விஞ்ஞானிகள் தெருக்கூத்து நடத்தி, அறிவை வளர்க்க வேணும்னு சொல்லலாமான்னு பார்த்தேன்."

Saturday, December 8, 2018

ஜட்ஜ்மென்ட் ரிஸர்வ்ட்

சோ எழுதி இயக்கிய நல்ல நாடகங்களில் ஒன்று. 1977யில் மேடையேறியது. இதை அவருடைய ஆகச் சிறந்த நாடகம் எனச் சொல்ல முடியாது.

ஓர் ஆண் ஒரு பெண்ணைக் கற்பழித்து விடுகிறான். அவனுக்குத் தண்டனை வாங்கித் தர ஒரு சமூகச் சேவகி, ஒரு கல்லூரிப் பேராசிரியர், ஒரு பத்திரிகை ஆசிரியர், ஒரு சினிமா டைரக்டர்  ஆகியோர் முயல்கிறார்கள். அவர்கள் நாடும் வக்கீல் அந்த ஆண் சில ஆண்டுகளுக்கு முன் தம்முடைய பெண்ணின் மானத்தைக் காத்தவன் என்பதால் அவன் இத்தவற்றைச் செய்திருக்க மாட்டான் என நம்புகிறான். ஆனால் அந்த ஆளே குற்றம் செய்ததை ஒப்புக் கொள்கிறான்.

வக்கீலுடைய மகள் குடும்ப மானம் பறி போகும் என்பதால் தந்தை பேச்சைக் கேட்டு குற்றம் சாட்டப்பட்டவனுக்கு ஆதரவாக சாட்சி சொல்ல மறுத்து விடுகிறாள். அதனால் மனம் வெறுத்துப் போகிறான்  வக்கீல். தவறு செய்திருந்தாலும் அந்த ஆசாமியைக் காப்பாற்ற தீர்மானிக்கும் வக்கீல் சமூகம், பத்திரிகை, சினிமா போன்றவற்றின் மீது பழி சுமத்தி அவனை விடுவிக்க முடிவு செய்கிறான்.

வக்கீல் பிறகு அப்படிச் செய்வது சரியாக இருக்காது எனத் தீர்மானிக்கிறான். இதற்கிடையே குற்றம் சாட்டப்பட்டவனே குற்றத்தை ஒப்புக் கொண்டு தண்டனை வாங்குகிறான்.

ராஜ்ய சபா எம்.பி. சீட்டுக்காகச்  சமூகச் சேவை செய்வதாகக் காட்டிக் கொள்கிறாள். இந்தக் கதையை எழுதி பிரசுரித்துப் பணம் பண்ணுகிறார் பத்திரிகையாளர். சினிமா இயக்குனர் இக்கதையைப் படமாக்கி பல லட்சங்கள் சம்பாதிக்கிறார். இப்படி எல்லாருமே பணம் அல்லது பதவிக்காக அப்பெண்ணுக்கு உதவுவதைப் போல நடிக்கிறார்கள். யாருமே அப்பெண்ணின் கதி என்ன என்பதை யோசித்துக் கூட பார்ப்பதில்லை. குற்றம் செய்தவன் பணம் வாங்கிக் கொண்டே (சினிமா இயக்குனரிடமிருந்து) குற்றத்தை ஒப்புக் கொள்கிகிறான். அவன் தப்பித்துக் கொண்டால் கதையில் சாரம் இருக்காது என இயக்குனருக்குப் பயம்.

வக்கீல் குமாஸ்தா ஜெகதீஷாக சோ. நக்கல் பிடித்த கேரக்டர். தம்முடைய நகைச்சுவையான ஆனால் கூரிய வசனங்களால் மற்ற கதாபாத்திரங்களின் அவலங்களைச் சாடுகிறார். இந்த நாடகத்தின் மிகப் பெரிய பலமே சோ பேசும் வசனங்கள். போலியான சமூகச் சேவகர்கள், மற்றவர்களின் துன்பத்தை வெட்கமோ பரிதாபமோ இல்லாமல் பணம் செய்யும் கதாசிரியர்கள் மற்றும் சினிமாக்காரர்கள், தம்முடைய மகன் மாட்டிக் கொண்டாலும் பரவாயில்லை தம்முடைய பெயர் கெடக் கூடாது என நினைக்கும் தந்தைமார்கள் எனப் பலதரப்பட்டவர்களையும் சோ இந்நாடகத்தின் மூலம் சாடுகிறார்.

ஆனால் மற்ற பாத்திரங்கள் பேசும் வசனங்கள் சொல்லும்படியாக இல்லை. குறிப்பாக குற்றம் செய்தவனுடைய தந்தை மற்றும் கல்லூரிப் பேராசிரியர் ஆகியோருடைய பாத்திரங்கள் சரியாக அமைக்கப் படவில்லை.

எத்தனை உண்மைச் சம்பவங்கள் கதைகளாகவும் சினிமாவாகவும் வருகின்றன. அவற்றை எழுதுபவர்களுக்கும்  இயக்குபவர்களுக்கும் அச் சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றி அக்கறை இல்லை என்பதே நிதர்சனம். அதைப் போல பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களே காசை வாங்கிக் கொண்டு, அவர்களுடைய கதையை விற்பதையும்  பார்க்கிறோம். 40 ஆண்டுகளுக்குப் பிறகும் சோ எழுதிய இந்நாடககத்தில் சுட்டி காட்டப்பட்டுள்ள அவலங்கள் இச்சமூகத்தில் இருப்பது வேதனைக்கும் வெட்கத்துக்கும் உரியவை.

Thursday, November 29, 2018

சாதல் இல்லையேல் காதல்

வரிக்கு வரி வார்த்தைக்கு வார்த்தை நகைச்சுவைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்துச் சோ எழுதிய நாடகம் இது. இவருடைய மற்றைய நாடகங்களில் உள்ள சமூகச் சீர்திருத்தக் கருத்தோ, அரசியல் நையாண்டியோ இதில் கிடையாது. லாஜிக் எதுவும் பார்க்காமல் வயிறு குலுங்கச் சிரிக்க வேண்டுமென்றால் இந்நாடகத்தைப் படிக்கலாம்.

இந்த நாடகத்தைக் கல்கி இதழில் தொடர்கதையாகச் சோ எழுதினார். 1964யில் இதை இவர் எழுதியிருக்கக் கூடும் என நினைக்கிறேன். முக்கியமாக, இந்த நாடகத்தை சோ மேடையேற்றவேயில்லை. பல வருடங்களுக்குப் பிறகு எஸ்.வி.சேகர் இதை மேடையேற்றினார்.

நாகராஜன் என்ற கல்லூரி மாணவன் மனம் போன போக்கில் எதையோ கிறுக்க, அதைப் பெரிய கவிதை என நம்பும் மாலதி என்ற மாணவி அவனைக் காதலிக்கிறாள். இரண்டு மாதங்களில் பத்தாயிரம் ரூபாய் சம்பாதித்துக் கொடுத்தால் மட்டுமே பெண்ணைக் கொடுப்பேன் என மாலதியுடைய சிற்றப்பா நிபந்தனை விதிக்கிறார்.

நாகராஜனுடைய நண்பன் சுரேஷ் அவனைத் தன்னுடன் பம்பாய்க்கு அழைத்துப் போகிறான். நாகராஜன் இறந்து விட்டதாக பொய்யான விளம்பரம் கொடுத்து, அவனை அவனுடைய தம்பியாக நடிக்க வைக்கிறான். இப்படி ஆள் மாறாட்டம் செய்து பணத்தைச் சம்பாதிக்க அவர்கள் செய்யும் முயற்சியும், அதனால் ஏற்படும் குழப்பங்களும், நாகராஜன் தான் சொன்ன பொய்யால் தான் உயிருடன் இருப்பதை நிரூபிக்கப் போராடுவது எனக் கதை நீளுகிறது. முழுவதும் காமெடி கலாட்டா.

கல்லூரி மாணவர்களின் செய்கைகள், கவிஞர்கள் எதையோ கிறுக்கி கவிதை எனச் சாதிப்பது, இளைஞர்களின் வெளிநாட்டு நாகரீக மோகம், இப்படி பல விஷயங்களையும் தமக்கே உரிய நகைச்சுவையுடன் விளாசித் தள்ளுகிறார் சோ.

Tuesday, November 13, 2018

சாத்திரம் சொன்னதில்லை

சோவின் தலை சிறந்த நாடங்களில் ஒன்று. 1980யில் மேடையேறிய நாடகம்.

இது அரசியல் நாடகம் இல்லை. ஜாதி ஏற்றத் தாழ்வைப் பற்றிய சமூகப் பிரச்சினையின் அடிப்படையில் எழுதப்பட்ட நாடகம்.

சாரியார் என்ற பிராமணர் ஜாதிப் பாகுபாடு கூடாது என எல்லோருக்கும் சொல்லி வருவார். ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பையனும், வேறொரு வகுப்பைச் சேர்ந்த பெண்ணும் காதலிக்கும் போது, அவர்களைச் சேர்த்து வைக்க இருவருடைய பெற்றோர்களுடனும் பேசிவிட்டு வருவார். இவரைச் சோதிக்க வேண்டும் என நினைக்கும் டாக்டர் ஒருவர், இவருடைய மகனும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவனும் ஒரே நாளில் ஒரே மருத்துவ மனையில் பிறந்த உண்மையை வைத்துக் கொண்டு, இரண்டு குழந்தைகளும் மாறி விட்டதாகக் கதை கட்டிவிடுவார். அதை உண்மை என நம்பும் சாரியார் அதுவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய தம்முடைய மக்கு மகனை வைய ஆரம்பிப்பார். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவனைக் கொண்டாடுவார். ஒரு கட்டத்தில் அந்தத் திருமணம் நின்று விட, மனம் மகிழ்வார்; தம்முடைய மகன் இல்லை என அவர் நம்பும் தம்முடைய மகனுக்கே, அப்பெண்ணை மணமுடிக்க சம்மதிப்பார். அவர் பேசிய தர்ம நியாயங்கள் அவருடைய செய்கையில் இருக்காது. நியாய தர்மங்கள் பேசுபவர்கள் தமக்கு என்று வந்தால் வேறு விதத்தில் நடந்து கொள்வார்கள் என்பதே நாடகத்தின் மையக் கருத்து. கடைசியில், அந்த தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவன் இறந்து விட, அவன் தம்முடைய மகன் இல்லை என்ற உண்மை தெரிந்தும், அவனுக்காகக் காரியங்கள் செய்வார் மனம் திருந்திய சாரியார். 

Monday, November 12, 2018

சட்டம் தலை குனியட்டும்

1972யில் மேடையேறிய இந்நாடகம் சோவின் சிறந்த அரசியல் நாடகங்களில் ஒன்று.

"ஒவ்வொரு எலெக்ஷன் நடக்கும் போதும் என் தொகுதியிலே போட்டி போடற எல்லாக் கட்சிக்காரர்களையும் பார்க்கும் போது எனக்கு ஒரு நிம்மதி வருது. எல்லாக் கட்சி கேண்டிடேட்சைப் பத்தியும் யோசிப்பேன். என்ன ஆனாலும் சரி இத்தனை பேர்லே ஒரே ஒரு ஆள்தானே ஜெயிக்க முடியும், எம்.பி. ஆக முடியும். பார்த்துக்கலாம்னு ஒரு நிம்மதி. அத்தனை கேண்டிடேட்சும் ஜெயிக்கற மாதிரி ஒரு சிஸ்டம் இருந்தா என்னை மாதிரி பொது மக்கள் கதி என்ன?"

இப்படி பல கூர்மையான யோசிக்க வைக்கக் கூடிய வசனங்கள். இந்த நாடகத்தின் மிகப் பெரிய பலம் இப்படிப்பட்ட வசனங்களே.

லட்சுமிபதி என்ற வக்கீல் பணம் இருப்பவன் (அரசியல்வாதி), பணமில்லாதவன் ஆகியோருக்கு இடையே சட்டத்தில் பாரபட்சம் இருக்கக் கூடாது. ஓர் ஏழை சந்தர்ப்ப வசத்தால் செய்த குற்றங்களுக்கு விரைவாகத் தண்டனை தீர்ப்பகிறது. ஆனால் ஓர் அரசியல்வாதி செய்த குற்றங்களுக்கு அவர் மீது விசாரணைக் கமிஷன் மட்டுமே வருகிறது. அதை அவர் எவ்வளவு தாமதப்படுத்த முடியுமோ, அவ்வளவு தாமதப்படுத்துகிறார். ஓர் இடைத் தேர்தலிலும் ஜெயித்து விடுகிறார். நேர்மையான லட்சுமிபதியையும் சாலை விபத்தில் கொன்று விடுகிறார். இத்தகையான சம்பவங்களால் சட்டமே தலை குனிய வேண்டும் என்பதே கதை முடிவு.

லட்சுமிபதியின் கதாபாத்திரம் இன்னும் சற்று கனமாக அமைத்திருக்கலாம். வந்தே மாதரம் வக்கீலைப் போல அலட்சியமாக நடந்து கொள்பவராக இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். அவரே புகழுக்காக முன்பு அந்த அரசியல்வாதிக்கு  ஆஜராவது அவருடைய கதா பாத்திரத்தை முழுமையாக நாம் ஆதரிப்பதைத் தடுக்கிறது. 

Tuesday, November 6, 2018

வந்தே மாதரம்

மஹாத்மா காந்தி, கௌடில்யர், சார்லஸ் டிக்கன்ஸ், பாரதியார், ஆர்யா என்னும் பாஷ்யம் ஆகியோருக்கும் சோ எழுதி இயக்கிய வந்தே மாதரம் என்ற இந்த நாடகத்துக்கும் தொடர்பு உண்டு. அது என்ன எனத் தெரிந்து கொள்ள மேலே படிக்கவும்.

1975யில் மேடையேறிய இந்நாடகம் அதற்கு முன்பாகத் துக்ளக் இதழில் தொடர்கதையாக வெளி வந்தது. ஒவ்வொரு அத்தியாயத்தின் முன்னுரையில் கௌடில்யரின் அர்த்த சாஸ்திரத்திலிருந்து சம்ஸ்க்ருத வாக்கியங்களும் அதன் மொழிபெயர்ப்பும் இடம் பெறும். அவை அந்த அத்தியாயத்துக்குப் பொருத்தமானதாக இருக்கும். இதில் வேடிக்கை என்னவென்றால் அந்த வாக்கியங்கள் எதுவுமே கௌடில்யருடையது இல்லை. எல்லாமே சோவின் வார்த்தைகள். அதை தொடர் முடிந்தவுடன் சோ வெளியிட்டார். தாம் சொல்லும் நல்ல விஷயங்களை யாரும் ஏற்றுக் கொள்ளாததால் கௌடில்யர் பெயரில் வெளியிட்டதாக தம்முடைய பாணியில் எழுதியிருந்தார். இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் பல மாதங்களாக வெளிவந்த இந்தத் தொடர் முடியும் வரை இதைப் படித்தவர்கள் யாரும் இந்த வாக்கியங்கள் அர்த்த சாஸ்திரத்தில் கிடையாது என்பதை அறியவில்லை.

பாஸ்கரன் என்ற மிகவும் திமிர் பிடித்த ஆனால் மேதாவியான பாரிஸ்டர் வேடத்தில் சோ. குடிகாரர்; யாரையும் சிறிது கூட மதிக்காதவர்; பணத்தாசை இல்லாதவர்; நல்லவர் எனப் பல கலவைக்குணம் கொண்டவர். சார்லஸ் டிக்கன்ஸின் "டேல் ஆ ஃப் டூ சிட்டீஸ்" என்ற கதையில் தோன்றும் ஸிட்னி கார்ட்டன் என்ற பாத்திரத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதே இந்தப் பாத்திரம்.

ஆர்யா என்ற பாஷ்யம் ஒரு விடுதலைப் போராட்ட வீரர். அவர் தீவிரவாதியாக இருந்து காந்தியவாதியாக மாறியவர். அவருடன் சோவுக்கு நட்பு இருந்தது. அவர் கொடுத்த சில தகவல்களின் அடிப்படையில் விடுதலைப் போராட்டம் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தின் சில இடங்களும், சம்பவங்களும் இந்தக் கதையில் அமைக்கப்பட்டுள்ளன. கதையின் நாயகனும் அவனுடைய நண்பர்களும் முதலில் தீவிரவாதிகளாக இருந்து காந்தியவாதிகளாக மாறுவதும் கவனிக்கத் தகுந்தது. நாயகனுடைய நண்பன் பெயரும் பாஷ்யம்.

கதா நாயகன் சுந்தரம், பாஷ்யம் மற்றும் தமிழ் வாத்தியார் சம்பந்த மூர்த்தி ஆகியோர் பாரதியாரைக் கடற்கரையில் சந்திக்கின்றனர். அவர் மூலம் மேலும் உத்வேகம் அடைவதாக ஓர்  அத்தியாயம். இப்படியாக பாரதியாரையும் தம்முடைய கதையில் ஒரு பாத்திரமாகி விட்டார் சோ.

1910களின் கடைசியில் நகரும் கதைக்களம். ஜனார்த்தனம் என்ற நேர்மையான  போலீஸ் அதிகரியுடைய மகன் சுந்தரம், தன்னுடைய கல்லூரியில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்குப் பிறகு ஆங்கிலேயர்களுக்கு எதிராகக் கிளம்புகிறான். அதை விரும்பாத அவனுடைய தந்தை அவனைத் தடுத்துப் பார்க்கிறார்; கைது செய்ய முயற்சிக்கிறார்; ஆனால் ஒரு கட்டத்தில் ஆங்கிலேயரின் நன்றிக்கெட்டத் தனத்தால் தற்கொலை செய்து கொள்கிறார்.

 சுந்தரத்துடைய காதலி சுமதி. அவள் மீது ஒரு சமயத்தில் மையல் கொள்ளும் புகழ் பெற்ற குடிகார, திமிர் பிடித்த வக்கீல் பாஸ்கரன் ஒரு முறை ஒரு வழக்கிலிருந்து சுந்தரத்தைக் காப்பாற்றுகிறான்.

சுந்தரமும் நண்பர்களும் குண்டு வைத்து ரயிலைக் கவிழ்க்கின்றனர். அதில் ஆங்கிலேயர்கள் பயணிப்பார்கள் என்பது அவர்களுடைய அனுமானம். ஆனால் இந்தியர்கள் பயணிக்கின்றனர். ரயில் கவிழ்ந்து அவர்கள் அனைவரும் மரணமடைகிறார்கள். சுந்தரம் கைதாகிறான். சுமதிக்காக பாஸ்கரன் சுந்தரத்தை விடுவிக்க வாதாடுகிறான். ஆனால் சுந்தரத்தின் ஒத்துழைப்பு இல்லாததால் கேஸ் தோற்று விடுகிறது. முடிவில் சுந்தரத்துக்குப் பதிலாகத் தானே ஆள் மாறாட்டத்தில் சிறை புகுந்து தூக்கு மேடை செல்கிறான் பாஸ்கரன்.

கதையில் இவர்களைத் தவிர பல சுவாரசியமானப் பாத்திரங்களும் உண்டு. ஆங்கிலேயரிடமும் பழகி, சுதந்திரத் தியாகிகளிடமும் பழகி, அங்கிருந்து விஷயங்களை இங்கே கசியவிடும் கலகலப்பான பத்திரிகையாளர் வேணு, அரைகுறை ஆங்கிலத்தில் பேசி நம்மை வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் காண்டிராக்டர் வஜ்ரவேலு போன்றோர் அவர்களில் முக்கியமானவர்கள்.

பாஸ்கரன் மிகவும் சக்திவாய்ந்த பாத்திரம். கேலி, கிண்டல், நையாண்டி, அலட்சியம், திமிர், குடித்ததால் வரும் தள்ளாட்டம், மற்றவர்களை மரியாதை இன்றிப் பேசுதல் என மிகவும் ரசிக்கத்தக்க வேடம். சோவைத் தவிர யாராலும் நடித்திருக்க முடியாது.

தொடர்கதைக்கும் நாடகத்துக்கும் சில வித்தியாசங்கள் உள்ளன. கதையில் பாஸ்கரனும் சுந்தரமும் ஓரளவுக்குப் பார்க்க ஒரே மாதிரி இருக்கிறார்கள்; அதனாலேயே கடைசியில் சிறையில் ஆள் மாறாட்டம் செய்ய முடிகிறது. ஆனால் நாடகத்தில் அப்படி வரவில்லை. நாடகத்தில் பாஸ்கரன் தமிழ் ஆசிரியரிடம் மட்டும் மரியாதையுடன் பேசுகிறான்; இலவச பள்ளிக்கூடம் நடத்த பண உதவி செய்கிறான்; அது மூலக் கதையில் இல்லாதது. நாடகத்தில் தன்னைத் தீயிட்டுக் கொளுத்திக் கொள்கிறான் பாஸ்கரன்; அதனால் போலீசுக்கு யார் இறந்தது எனத் தெரியவில்லை. ஆனால் மூலக்கதையிலோ ஆள் மாறாட்டம் செய்து சுந்தரத்தின் இடத்தில் பாஸ்கரன் தூக்கில் தொங்குகிறான்.

இந்த மேடை நாடகம் திரைக்கதையில் விரிவாக்கம் செய்யப்பட்டு தொலைக்காட்சித் தொடராக 80களில் வந்தது. நாடகமும், தொலைக்காட்சித் தொடரும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.

நாடகத்தின், குறிப்பாக பாஸ்கரன் பேசும் வசனங்கள் மிகவும் அருமை. உதாரணத்துக்குச் சில -

"உங்களை மாதிரி ஆசாமிகளை விட குடி எவ்வளவோ பெட்டர். குடி உடம்பைத்தான் கெடுக்கும். உங்கள மாதிரி ஆசாமிங்க குடியையே கெடுப்பிங்க."

"மூளையை மறந்து காரியம் பண்ணா அதுக்கு தலையை மறைச்சுதான் ஆகணும்."

"உட்காருங்களேண்டா...தரைதான் விசாலமா இருக்கே...என்ன சாப்பிடறீங்க? குடிக்க விஸ்கியா பிராண்டியா?"

"வெள்ளைக்காரங்களை விட மோசமானவங்க இங்கே நிறைய பேர் இருக்காங்க...நாடு சுதந்திரம் அடைஞ்சா நான் சொல்றது புரியும்."

"யாருக்குமே இடம் கொடுக்காதவங்களுக்காகத் தான் இந்த சமூகம் இடம் கொடுக்கும்."

"ஒரு தேசப் பக்தனுக்கு தேசத்துக்காக உயிர் விடுவது முக்கியமா? அல்லது தேசத்துக்காக உழைப்பது முக்கியமா? தேசத்திடமிருந்தே விடுதலை வாங்கி சென்று விடுவது முக்கியமா? அல்லது தேசத்துக்கே விடுதலை வாங்கித் தர உழைப்பது முக்கியமா?"



Saturday, July 14, 2018

சோ சிறு வேடங்களில் நடித்த சில நாடகங்கள்

விவேகா பைன் ஆர்ட்ஸ் நாடகங்களிலும் சினிமாவிலும் பிசியாக இருந்த சமயத்திலும் சோ சிறு வேடங்களில் மற்றவர்கள் எழுதிய நாடகங்களிலும் நடித்து வந்தார். 

ஒய்.ஜி.பியின்  "அண்டர் செகரட்டரி " என்ற நாடகத்தில் சோ மனம் போனவாறு வசனங்கள் பேச, மற்ற நடிகர்கள் திணறுவர். ஆனால் பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்த ஜெயலலிதாவோ அசராமல் உடனுக்குடன் பதில் வசனம் பேசி நடிப்பாராம். 1964யில் மேடையேறிய நாடகம் இது. 

"தி ஹோல் ட்ரூத்" என்ற ஆங்கில நாடகத்தில் வில்லன் சோ ஜெயலலிதாவைக் கழுத்தை நெரிக்கும்படி ஒரு காட்சி. சோவுடைய கண்களைப் பார்த்து ஜெயலலிதா சிரித்து விட, அக்காட்சியில் சோ அவருடைய முகத்தைப் பார்க்காதவாறு காட்சி மாற்றி அமைக்கப்பட்டது.

ஜெயலலிதாவின் முதல் நாயகனும் வில்லனும் சோவே.

"டீ ஹவுஸ் ஆப் தி ஆகஸ்ட் மூன்" என்ற ஆங்கில நாடகத்தில் அமெரிக்க சோல்ஜராக சோவும், ஜப்பானியப் பெண்ணாக ஜெயலலிதாவும் நடித்தனர். இது விவேகா பைன் ஆர்ட்ஸின் நாடகம். 1969யில் மேடையேறியது.

1962யில் "சொல்லித் தெரிவதில்லை" என்ற நாடகம் ஜெ.முத்துசாமி எழுதி பாலசந்தர் இயக்கினார். அதில் அம்பி, நீலு, நாணி, சோ ஆகியோர் நடித்தனர். நாணியுடன்  தோன்றுகிற காட்சியில் திடீரென சோ திக்க ஆரம்பிக்க, அதை எதிர்பார்க்காத நாணி ஏன் திக்குகிறாய் எனக் கேட்டார். டைப்பாய்டு வந்து விட்டதால் திக்குவதாகச் சோ சொன்னார். கடைசிக் காட்சியில் திக்காமல் சோ பேசினார். ஏன் திக்கவில்லை என நாணி கேட்க, மீண்டும் டைப்பாய்டு வந்து திக்குவது நின்று விட்டது எனச் சோ ஒரு போடு போட்டார். ஆடியன்சிடமிருந்து நல்ல அப்லாஸ். இதை முதலில்  சற்றும் விரும்பாத பாலசந்தர், இது நன்றாக வந்ததால் அதை நாடகத்தின் காட்சியாக மாற்றினார். 

பெற்றால் தான் பிள்ளையா?

விவேகா ஃபைன் ஆர்ட்ஸில் பிசியாக இருந்து கொண்டே சோ ஒய்.ஜி.பி.யின் நாடகங்களிலும் நடித்து வந்தார். பட்டு எழுதிய ஒய்.ஜி.பி.யின் "பெற்றால் தான் பிள்ளையா" என்ற நாடகத்தில் மாடசாமி என்ற கதாபாத்திரத்தில் சோ புகுந்து விளையாடினார். அந்த நாடகத்தின் வெற்றி டைரக்டர் பீம்சிங்கையும் நடிகர் திலகம் சிவாஜியையும் அதைத் திரைப்படமாக எடுக்க வைத்தது. மாடசாமி என்ற கதாபாத்திரத்தில் சோ தான் நடிக்க வேண்டும் என பிடிவாதமாக இருந்து அதை நடத்தியும் காட்டினார் சிவாஜி. இப்படித்தான் சோவுடைய சினிமா பிரவேசம் நடந்தது. அந்தப் படத்தின் பெயர் "பார் மகளே பார்".

நாடகம் மேடையேறிய ஆண்டு 1961. திரைப்படம் வெளிவந்த ஆண்டு 1963. 

சோ எழுதி இயக்கி நடித்த நாடகங்கள் பல இருந்தாலும் அவர் வேறொருவர் எழுதிய நாடகத்தில் நடித்த சிறு வேடமே அவரை சினிமாவுக்குக் கொண்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

Friday, June 22, 2018

உண்மையே உன் விலை என்ன?

சோ என்றால் எல்லாருக்கும் அவருடைய துக்ளக் இதழும், அரசியல் நையாண்டி விமர்சனங்களும், புகழ் பெற்ற "முகமது பின் துக்ளக்"  நாடகமுமே நினைவுக்கு வரும். ஆனால் அவர் அரசியல் சார்பில்லாத சிறந்த நாடகங்களையும் எழுதியுள்ளார். அதற்குச் சிறந்த உதாரணம் "உண்மையே உன் விலை என்ன?". இத்தனைக்கும் இந்த நாடகம் 1974யில், அவர் அரசியலில் மிகவும் ஆழ்ந்து ஈடுபட்டிருந்த காலத்தில் மேடையேறிய நாடகம். ஆனால் இதில் பெயருக்குக் கூட அரசியல் விமர்சனம் இல்லை.

இந்த நாடகம் நமது சிந்தனையைத் தூண்ட கூடியது. உண்மையை விலைக்கு வாங்க முடியுமா? முடியலாம். ஆனால் எல்லாரையுமே பணத்தால் வாங்க முடியுமா? தேவையில்லை. உண்மையின் விலை பணமாக இருக்க வேண்டிய அவசியமில்லை; அது பதவியாகவோ, வேலை வாய்ப்பாகவோ ஏன் மத நம்பிக்கையாகக் கூட இருக்க முடியும். ஒவ்வொருவரைப் பொறுத்து, உண்மையின் விலை மாறுபடலாம். அது தான் இந்த நாடகத்தின் சாராம்சம். ஆனால் முடிவில் உண்மையின் விலையாக ஒரு நல்லவர் உயிரை விட்டு, உண்மையை நிலை நாட்டுகிறார்.

ஒரு பாதிரியார்; அவரிடம் பாவ மன்னிப்பு கோர ஒருவன் வருகிறான். ஒரு பெண்ணின் கற்பைக் காப்பாற்ற அவன் செய்த கொலை தவறில்லை எனக் கருதும் பாதிரியார் அவனை மறைத்து வைக்கிறார். ஆனால் எப்போதும் உண்மை மட்டுமே பேசுகிறார்; அதனால் போலீசில் மாட்டிக் கொள்கிறார். அவரை விடுவிக்க ஒரு வக்கீல் வருகிறார். பொய் பேச மறுத்து, அந்த வக்கீலுக்கும் பெரிதாகப் பாதிரியார் ஒத்துழைக்கவில்லை. இந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக உண்மை என்ன என்பதற்கு சில சாட்சிகளும் ஆவணங்களும் கிடைக்கின்றன. கொல்லப்பட்டவனுடைய தந்தை அரசியல்வாதி. அவர் எல்லாரையும் விலை பேசி உண்மையை வாங்கி விடுகிறார். பாதிரியாருக்கு உதவியாக இருந்த வக்கீல், நண்பர், பாதிக்கப்பட்ட பெண் என எல்லாருமே விலை போகிறார்கள். ஆனால் கடைசியில் வேறு ரூபத்தில் உண்மை வெளிவருகிறது. அதை ஊருக்கு எல்லாம் தெரிய வாய்த்து அரசியல்வாதியின் கையால் இறந்து போகிறார் பாதிரியார்.

சோவுடைய காலத்தால் அழியாத படைப்புகளில் இதுவும் ஒன்று. 

Thursday, April 5, 2018

யாருக்கும் வெட்கமில்லை

"A woman cannot become a prostitute, all by herself. For becoming a prostitute, a woman requires the cooperation of several men. This society creates a prostitue, and then condemns its own creation."

"Confusion can come only to persons who are capable of thinking. Persons who refuse to think, will never get confused. Our society is not confused; it is never confused; never."

மேலே நான் கொடுத்த வசனங்கள் சாம்பிளுக்கு மட்டுமே. இதைப் போல பல கூர்மையான வசனங்கள் - முக்கியமாக சமூகச் சீர்கேடுகளைப் பற்றி - அரசியலைப் பற்றியல்ல. அரசியலுக்கே சோ முக்கியத்துவம் கொடுக்கிறார் எனச் சொல்பவர்கள் இந்நாடகத்தைப் பார்க்க வேண்டும். 1973யில் மேடையேறிய இந்நாடகம் சோ எழுதி இயக்கிய சிறந்த நாடகங்களில் ஒன்று.

ஒரு கயவனால் ஏமாற்றப்பட்டு, சந்தர்ப்ப வசத்தால் விபச்சாரியாகும் ஒரு பெண்ணை முதல் கேசுக்காக அலையும் வக்கீல் ஒருவன் பெயிலில் எடுத்து, தன்னுடைய வீட்டில் தற்காலிகமாக வசிக்க வைக்கிறான். அவளை ஏமாற்றிய கயவன் அந்த வக்கீலுடைய அண்ணன்தான் என்ற உண்மை பிறகே தெரிகிறது. இந்தப் பெண் யார் என்பதை அறிந்தவுடன், அந்த வீட்டார் அவளிடம் நடந்து கொள்ளும் முறை, அவளிடம் தகாத முறையில் நடந்து கொள்ளும் ஆண்கள் என கதை போகிறது. ஒரு விபச்சாரியை உருவாக்கும் ஆண்கள், மனத்தால் தூய்மையில்லாத ஆண்கள் எப்படி அவளை மட்டும் குற்றம் சொல்ல முடியும், ஏன் ஆண்கள் தவறுக்குத் தண்டிக்கப் படவில்லை என நாடகம் அலசுகிறது. குற்றம் செய்யாதவர் யாராவது இருந்தால் விபச்சாரி மீது கல்லெறியவும் எனச் சொன்ன ஏசு நாதரின் கூற்றைப் பிரதிபலிக்கும் நாடகம்.

இந்நாடகத்தில் ராவுத்தர் என்ற வேடத்தில் சோ வருகிறார். நாயகிக்கு வக்காலத்து வாங்கி அவள் சார்பாக பேசி, நியாயத்தை நிலைநாட்ட முயலும் கதாபாத்திரம். ஆனை மணாளன் என்ற அரசியல்வாதியாக நீலு; அவர் தோன்றும் காட்சிகளில் மட்டும் சில அரசியல் வசனங்கள் வருகின்றன. 

Sunday, October 8, 2017

உறவுகள் இல்லையடி பாப்பா

சோ எழுதி இயக்கிய இந்நாடகம் 1975யில் முதலில் மேடையேறியது. 1980களின் இறுதியில் தொலைக்காட்சித் தொடராகவும் வெளிவந்தது.

இது அரசியல் நாடகம் இல்லை. பெயருக்குக் கூட அரசியல் பற்றி மறைமுக வசனம் கூட கிடையாது. ஆனால் எப்படி சோவுடைய அரசியல் நாடகங்கள் 50 வருடங்கள் கழித்தும் இன்றைக்கும் ஏற்புடையதாக உள்ளனவோ, அதைப் போல இச் சமூக நாடகமும் இன்றைய காலக்கட்டத்துக்கும் பொருந்தக் கூடியதாக உள்ளது.

புண்ணியகோடி என்ற வயோதிகர் வேடத்தில் சோ. அவருடைய மகனாக நீலு; பேரனாக அம்பி. ஒற்றுமையாக இருக்கும் குடும்பத்தில் ஒரு பானை நிறைய தங்கக் காசுகள் கிடைத்தவுடன் அந்த ஒற்றுமை சீர் குலைகிறது. ஒருவர் மற்றவர் மீது சந்தேகம் கொள்கின்றனர்; பரஸ்பரம் துரோகம் செய்ய முயல்கின்றனர். குடும்பத்தில் நடக்கும் சில சாவுகளும் அலட்சியப்படுத்தப் படுகின்றன. கடைசியில் எல்லாருமே இறக்க, சோ பைத்தியம் பிடித்து அலைவதாக நாடகம் முடிகிறது.


பணத்தாசையின் தீமையையும், அதன் அசுர பலத்தையும் சோ நகைச்சுவையாக அதே சமயத்தில் அழுத்தமாகவும் கூறியுள்ளார்.

Monday, September 25, 2017

இன்பக் கனா ஒன்று கண்டேன்

1971யில் மேடையேறிய இந்நாடகம் சென்னையில் 100 முறைக்கு மேல் மேடையேறியது.

மந்தைவெளி மன்னாரு என்ற கதாபாத்திரம் காணும் பகல் கனவே இந்நாடகத்தின் கதை. ஓர் உலகில் நூறு பேர்; தங்களுக்குள் வேலைகளையும் வசதிகளையும் சரி சமமாகப் பிரித்துக் கொண்டு சமூக வாழ்க்கை வாழ்கின்றனர். அந்த நூறு பேரில் இருவருக்கு மட்டும் கொடுக்க வேலையில்லை. அதனால் அவர்கள் மற்றவர்கள் செய்யும் வேலையைக் கண்காணிக்கும் புது வேலையை உருவாக்குகிறார்கள். யார் அந்தப் பதவியைப் பிடிப்பது என்பதில் இருவருக்கும் போட்டி ஏற்படுகிறது. அது தேர்தலில் போய் முடிகிறது. தேர்தலால் ஊழல் உருவாகிறது. தேர்தல் முடிந்து வென்றவனுக்கு உதவியவர்கள் சில சலுகைககளை எதிர்பார்க்கின்றனர். அத்தகைய ஊழலைக் கண்டு பிடிப்பவர்களுக்கும் சலுகைகள் கிடைக்கின்றன. இப்படியே படிப்படியாக குடியாட்சியின் அனைத்துக் கேடுகளும் அறிமுகமாகி, பணமும் புழக்கத்துக்கு வந்து, அடிதடி கொலை என முடிகிறது.


தேர்தல் முறை ஒரு சமூகத்தை எப்படிச் சீரழிக்கிறது என்பதைச் சோ தமது பாணியில் அழகாகக் காண்பிக்கிறார்.

Saturday, August 12, 2017

1960களில் சோ

1950களில் சோவின் நாடகப் பிரவேசம் நடந்தது. ஆனால் 1960களில் தான் அவர் மிகப் பெரிய நாடக ஆசிரியராக அறியப்பட்டார்.

சோ நடித்த சில நாடகங்கள் 

பெற்றால் தான் பிள்ளையா? - 1961
சொல்லித் தெரிவதில்லை (1962)
அண்டர் செகரட்டரி (Under Secretary) - 1964
தி ஹோல் ட்ரூத் (The Whole Truth)
டீ ஹவுஸ் ஆப் தி ஆகஸ்ட் மூன் (Tea House of the August Moon) - 1969

 1960களில் சோவின் நாடகங்கள்

1) Wait and See - 1961
2) What for? - 1962
3) கோ வாடிஸ் (Quo Vadis?) - 1962
4) Mind is a Monkey - 1963
5) சாதல் இல்லையேல் காதல் - 1964 (சோ எழுதிய நாடகம்; மேடையேற்றவில்லை )
6) சம்பவாமி யுகே யுகே - 1965 (இது சோ இயக்கிய முதல் நாடகம்)
7) Madras by Night - 1966
8) Is God Dead? - 1967
9) சரஸ்வதியின் செல்வன் - 1967
10) முகமது பின் துக்ளக் - 1968

1960களில் சோவின் திரைப்படங்கள் 
1) பார் மகளே பார்
வெளியான தேதி - 12-July-1963
இயக்குனர்  - பீம்சிங்
நாயகன் - சிவாஜி கணேசன்
நாயகி - விஜயகுமாரி;புஷ்பலதா
கதாபாத்திரம் பெயர் - மாடசாமி
ஜோடி - மனோரமா 
மேல் விபரம் - முதல் படம் 


2) நடு இரவில்
வெளியான தேதி - 1970
இயக்குனர்  - வீணை எஸ். பாலசந்தர் 
நாயகன் - மேஜர் சுந்தர்ராஜன் 
நாயகி - சௌகார் ஜானகி 
கதாபாத்திரம் பெயர் - மௌஸ்
ஜோடி -  பெயர் தெரியவில்லை 
மேல் விபரம் - தாமதமாக வெளிவந்தது; இரண்டாவது படம் 


3) தட்டுங்கள் திறக்கப்படும்
வெளியான தேதி - 17 ஜூன் 1966
இயக்குனர்  - சந்திரபாபு
நாயகன் - சந்திரபாபு
நாயகி - சாவித்திரி
கதாபாத்திரம் பெயர் - ராகவன் 
ஜோடி - கிடையாது 


4) மறக்க முடியுமா?
வெளியான தேதி - 12-Aug-1966
இயக்குனர்  - முரசொலி மாறன்
நாயகன் - எஸ்.எஸ்.ஆர்
நாயகி - தேவிகா
கதாபாத்திரம் பெயர் - ரத்னம்
ஜோடி - கிடையாது 
மேல் விபரம் - கலைஞர் வசனம்; சோவுக்கு சண்டைக்காட்சிசீரியஸ் கதாபாத்திரம் 


5) தேன் மழை 
வெளியான தேதி - 23 செப்டம்பர் 1966
இயக்குனர்  - முக்தா சீனிவாசன்
நாயகன் - ஜெமினி கணேசன்
நாயகி - கே.ஆர். விஜயா
கதாபாத்திரம் பெயர் - வாசுசிதம்பரம்
ஜோடி - சச்சு 
மேல் விபரம் - சோ கதை திரைக்கதையில் முதல் படம்; சோ இரட்டை வேடத்தில் முதல் படம் 



6) மனம் ஒரு குரங்கு
வெளியான தேதி - 14 ஜனவரி 1967
இயக்குனர்  - .டி.கிருஷ்ணஸ்வாமி
நாயகன் - .வி.எம்.ராஜன்
நாயகி - கே.ஆர்.விஜயா
கதாபாத்திரம் பெயர் - செல்லப்பா
ஜோடி - பெயர் தெரியவில்லை 
மேல் விபரம் - சோ கதை திரைக்கதைசோவுடைய நாடகம் படமாக்கப்பட்டது


7) ஆலயம்
வெளியான தேதி - 11 ஆகஸ்ட் 1967
இயக்குனர்  - திருமலை-மஹாலிங்கம்
நாயகன் - மேஜர் சுந்தர்ராஜன்
நாயகி - கிடையாது
கதாபாத்திரம் பெயர் - ரவி
ஜோடி - கிடையாது
மேல் விபரம் - கௌரவ வேடத்தில் நடித்த முதல் படமிது 


8) நினைவில் நின்றவள்
வெளியான தேதி - 1-Sep-1967
இயக்குனர்  - முக்தா சீனிவாசன்
நாயகன் - ரவிசந்திரன்
நாயகி - கே.ஆர்.விஜயா
கதாபாத்திரம் பெயர் - மனோதத்துவ டாக்டர் சம்பந்தம்
ஜோடி - மனோரமா  
மேல் விபரம் - சோ திரைக்கதை-வசனம் ;


9) பெண் என்றால் பெண்  
வெளியான தேதி - 7 டிசம்பர் 1967
இயக்குனர்  - ஆரூர்தாஸ்
நாயகன் - ஜெமினி கணேசன்
நாயகி - விஜயகுமாரி, சரோஜா தேவி 
கதாபாத்திரம் பெயர் - தெரியவில்லை
ஜோடி - தெரியவில்லை



10) நான் யார் தெரியுமா?
வெளியான தேதி - 8 டிசம்பர் 1967
இயக்குனர்  - வி.வி.ரமணன் 
நாயகன் - ஜெய்சங்கர்
நாயகி - தெரியவில்லை
கதாபாத்திரம் பெயர் - தெரியவில்லை
ஜோடி - தெரியவில்லை 

11) கற்பூரம்
வெளியான தேதி - 9 டிசம்பர் 1967
இயக்குனர்  - சி.என்.ஷண்முகம்
நாயகன் - .வி.எம்.ராஜன்
நாயகி - புஷ்பலதா
தெரியவில்லைஜோடி - மனோரமா  



12) கலாட்டா கல்யாணம் 
வெளியான தேதி - 12 ஏப்ரல் 1968
இயக்குனர்  - சி.வி.ராஜேந்திரன்
நாயகன் - சிவாஜி கணேசன்
நாயகி - ஜெயலலிதா 
கதாபாத்திரம் பெயர் - விட்டல்
ஜோடி - சச்சு 
மேல் விபரம் - ஜெயலலிதாவுடன் முதல் படம் 







13) நீலகிரி எக்ஸ்பிரஸ்
வெளியான தேதி - 14-ஏப்ரல் -1968
இயக்குனர்  - திருமலை மகாலிங்கம்
நாயகன் - ஜெய்சங்கர்
நாயகி - விஜயலலிதா
கதாபாத்திரம் பெயர் - ராவணன்
ஜோடி - கிடையாது  
மேல் விபரம் - சோ திரைக்கதை-வசனம் 


14) கண்ணன் என் காதலன்
வெளியான தேதி - 25-Apr-1968
இயக்குனர்  - .நீலகண்டன்
நாயகன் - எம்.ஜி.ஆர்
நாயகி - வாணிஸ்ரீ;
ஜெயலலிதா கதாபாத்திரம் பெயர் - பட்டாபி
ஜோடி - பெயர் தெரியவில்லை  
மேல் விபரம் - எம்.ஜி.ஆருடன் இணைந்து சோ நடித்த முதல் படம்



15) பொம்மலாட்டம்
வெளியான தேதி - 31-May-1968
இயக்குனர்  - முக்தா சீனிவாசன்
நாயகன் - ஜெய்சங்கர்
நாயகி - ஜெயலலிதா 
கதாபாத்திரம் பெயர் - ஜாம் பஜார் ஜக்கு
ஜோடி - மனோரமா   
மேல் விபரம் - சோ திரைக்கதை-வசனம்


16) குழந்தைக்காக
வெளியான தேதி - Jun 1968
இயக்குனர்  - பி.மாதவன்
நாயகன் - மேஜர் சுந்தர்ராஜன், ராமதாஸ், மனோகர்
நாயகி - கிடையாது 
கதாபாத்திரம் பெயர் - குடுகுடுப்பைக்காரன்
ஜோடி - கிடையாது   
மேல் விபரம் - சோ கௌரவ வேடம் 


17) கணவன்
வெளியான தேதி - Aug 1968
இயக்குனர்  - .நீலகண்டன்
நாயகன் - எம்.ஜி.ஆர்
நாயகி - ஜெயலலிதா
கதாபாத்திரம் பெயர் - பரதன்
ஜோடி - மனோரமா  
மேல் விபரம் - எம்.ஜி.ஆர். எழுதிய கதை 


18) டெல்லி மாப்பிள்ளை
வெளியான தேதி - 13 Sep 1968
இயக்குனர்  - தேவன்
நாயகன் - ரவிசந்திரன் 
நாயகி - ராஜஸ்ரீ
கதாபாத்திரம் பெயர் - சின்னதம்பி
ஜோடி - சச்சு   




19) ஒளி விளக்கு 
வெளியான தேதி - 20 Sep 1968
இயக்குனர்  - சாணக்யா
நாயகன் - எம்.ஜி.ஆர்
நாயகி - சௌகார் ஜானகிஜெயலலிதா
கதாபாத்திரம் பெயர் - கத்திரி
ஜோடி - கிடையாது  
மேல் விபரம் - சோ நடித்த முதல் வண்ணப்படம்


20) லட்சுமி கல்யாணம்
வெளியான தேதி - Nov 1968
இயக்குனர்  - ஜீ.ஆர். நாதன்
நாயகன் - சிவாஜி கணேசன்
நாயகி - கிடையாது
கதாபாத்திரம் பெயர் - சீனு
ஜோடி - கிடையாது  


21) மகிழம்பூ
வெளியான தேதி - 31 ஜனவரி 1969
இயக்குனர்  - வி.டி.அரசு 
நாயகன் - .வி.எம்ராஜன்
நாயகி - புஷ்பலதா
கதாபாத்திரம் பெயர் - பூங்காவனம்
ஜோடி - மனோரமா  



22) உலகம் இவ்வளவு தான்
வெளியான தேதி - 13 ஏப்ரல் 1969
இயக்குனர்  - வேதாந்தம் ராகவையா
நாயகன் - நாகேஷ்
நாயகி - கிடையாது
கதாபாத்திரம் பெயர் - வரதன்
ஜோடி - மனோரமா  
மேல் விபரம் - சுப்பு ஆறுமுகம் கதை - வசனம் ; நாகேஷ் கதாநாயகன்


23) அடிமைப் பெண்
வெளியான தேதி - May 1969
இயக்குனர்  - கே. சங்கர்
நாயகன் - எம்.ஜி.ஆர்
நாயகி - ஜெயலலிதா
கதாபாத்திரம் பெயர் - மந்திரவாதி
ஜோடி - கிடையாது  



24) ஆயிரம் பொய்
வெளியான தேதி - Jul 1969
இயக்குனர்  - முக்தா சீனிவாசன்
நாயகன் - ஜெய்சங்கர்
நாயகி - வாணிஸ்ரீ
கதாபாத்திரம் பெயர் - முத்து
ஜோடி - மனோரமா  
மேல் விபரம் - சோ கதை-வசனம்


25) நிறை குடம்
வெளியான தேதி - Aug 1969
இயக்குனர்  - முக்தா சீனிவாசன்
நாயகன் - சிவாஜி கணேசன்
நாயகி - வாணிஸ்ரீ
கதாபாத்திரம் பெயர் - கிரி
ஜோடி - மனோரமா  
மேல் விபரம் - திரைக்கதை-வசனம் சோசோ எழுதிய சீரியஸ் கதையிது 



26) கன்னிப் பெண்
வெளியான தேதி - 11 Sep 1969
இயக்குனர்  - ஏ. காசிலிங்கம்
நாயகன் - ஜெய்சங்கர்
நாயகி - வாணிஸ்ரீ, லட்சுமி
கதாபாத்திரம் பெயர் - துரைசாமி
ஜோடி - கிடையாது  


27) அன்னையும் பிதாவும்
வெளியான தேதி - 19 Sep 1969
இயக்குனர்  - கிருஷ்ணன் பஞ்சு
நாயகன் - .வி.எம்ராஜன்
நாயகி - வாணிஸ்ரீ
கதாபாத்திரம் பெயர் - மார்க்கண்டேயன்
ஜோடி - கிடையாது  
மேல் விபரம் - சோ வில்லனாக நடித்த முதல் படமிது


28) ஐந்து லட்சம்
வெளியான தேதி - Nov 1969
இயக்குனர்  - ஜிராமகிருஷ்ணன்
நாயகன் - ஜெமினி கணேசன்
நாயகி - சரோஜா தேவி
கதாபாத்திரம் பெயர் - ரங்கு
ஜோடி - மனோரமா 

1960களின் நாடகங்கள் மற்றும் திரைப்படங்களின் எண்ணிக்கை

எழுதிய நாடகங்கள் - 10
நடித்த நாடகங்கள் - 15க்கு மேல்; எண்ணிக்கை தெரியவில்லை
இயக்கிய நாடகங்கள் - 5
நடித்த திரைப்படங்கள் - 28
சீரியஸ் கதாபாத்திரத்தில் நடித்த படங்கள் - 1
சண்டைக்காட்சிகளில் நடித்த படங்கள் - 2
வில்லனாக நடித்த படங்கள் - 1
கௌரவ வேடத்தில் நடித்த படங்கள் - 2
சோ எழுதிய படங்கள் - 7
சோ நாடகம் படமாக்கப்பட்டது - 1
சோ இரட்டை வேடங்களில் நடித்த படங்கள் - 1

சோ நடித்த படங்களின் நாயகர்கள் 

ஜெய்சங்கர் - 5 படங்கள்
எம்.ஜி.ஆர் - 4 படங்கள்
சிவாஜி - 4 படங்கள்
ஏ.வி.எம்.ராஜன் - 4 படங்கள்
ஜெமினி - 3 படங்கள்
ரவிசந்திரன் - 2 படங்கள்
எஸ்.எஸ்.ஆர். - 1 படம்
நாகேஷ் - 1 படம்
மேஜர் சுந்தர்ராஜன் - 3 படங்கள்
சந்திரபாபு - 1 படம்
ராமதாஸ் - 1 படம்
மனோகர் - 1 படம்


சோ நடித்த படங்களின் நாயகியர் 

ஜெயலலிதா - 5 படங்கள்
வாணிஸ்ரீ - 5 படங்கள்
கே.ஆர். விஜயா - 3 படங்கள்
புஷ்பலதா - 3 படங்கள்
சௌகார் ஜானகி - 1 படம்
தேவிகா - 1 படம்
சாவித்திரி - 1 படம்
விஜயலலிதா - 1 படம்
சரோஜா தேவி - 2 படங்கள்
விஜயகுமாரி - 2 படங்கள்
லட்சுமி - 1 படம்
ராஜஸ்ரீ - 1 படம்

சோ நடித்த படங்களின் இயக்குனர்கள்

முக்தா சீனிவாசன் - 5 படங்கள்
ப.நீலகண்டன் - 2 படங்கள்
திருமலை மகாலிங்கம் - 2 படங்கள்
பீம்சிங் - 1 படம்
வீணை எஸ். பாலசந்தர் - 1 படம்
முரசொலி மாறன் - 1 படம்
சந்திரபாபு - 1 படம்
ஏ.டி.கிருஷ்ணஸ்வாமி - 1 படம்
சி.வி.ராஜேந்திரன் - 1 படம்
பி.மாதவன் - 1 படம்
சாணக்யா - 1 படம்
ஜீ.ஆர். நாதன் - 1 படம்
வேதாந்தம் ராகவையா - 1 படம்
கே. சங்கர் - 1 படம்
கிருஷ்ணன் பஞ்சு - 1 படம்
ஜி. ராமகிருஷ்ணன் - 1 படம்
வி.டி.அரசு - 1 படம்
சி.என்.ஷண்முகம் - 1 படம்
ஏ. காசிலிங்கம் - 1 படம்
வி.வி.ரமணன்  - 1 படம்
தேவன்  - 1 படம்
ஆரூர்தாஸ் - 1 படம்

சோவுடன் ஜோடியாக நடித்தவர்கள் 

மனோரமா - 10 படங்கள்
சச்சு - 3 படங்கள்

சோ நடித்த படங்கள் எண்ணிக்கை வருடவாரியாக 

1963 - 1
1966 - 4
1967 - 6
1968 - 9
1969 - 8