Showing posts with label Direction. Show all posts
Showing posts with label Direction. Show all posts

Friday, January 25, 2019

சோ நடித்த திரைப்படங்கள்

1963

1) பார் மகளே பார்

1970

2) நடு இரவில் (1966யில் முடிந்து தாமதமாக வெளிவந்தது)

1966

3) தட்டுங்கள் திறக்கப்படும்
4) மறக்க முடியுமா?
5) தேன் மழை

1967
6) மனம் ஒரு குரங்கு
7) ஆலயம்
8) நினைவில் நின்றவள்
9) பெண் என்றால் பெண்
10) நான் யார் தெரியுமா?
11) கற்பூரம்

1968
12) கலாட்டா கல்யாணம்
13) நீலகிரி எக்ஸ்பிரஸ்
14) கண்ணன் என் காதலன்
15) பொம்மலாட்டம்
16) குழந்தைக்காக
17) கணவன்
18) டெல்லி மாப்பிள்ளை
19) ஒளி விளக்கு
20) லட்சுமி கல்யாணம்

1969
21) மகிழம்பூ
22) உலகம் இவ்வளவு தான்
23) அடிமைப் பெண்
24) ஆயிரம் பொய்
25) நிறை குடம்
26) கன்னிப் பெண்
27) அன்னையும் பிதாவும்
28) ஐந்து லட்சம்

1970
29) எங்க மாமா
30) மாட்டுக்கார வேலன்
31) தரிசனம்  
32) விளையாட்டுப் பிள்ளை 
33) என் அண்ணன்
34) தேடி வந்த மாப்பிள்ளை
35) சிநேகிதி
36) எங்கள் தங்கம்

1971
37) குமரிக் கோட்டம்
38) அருணோதயம்
39) முகமது பின் துக்ளக்
40) ரிக்ஷாக்காரன்  
41) சூதாட்டம்
42) தேரோட்டம்
43) யானை வளர்த்த வானம்பாடி மகன்
44) நீரும் நெருப்பும்
45) ஒரு தாய் மக்கள்

1972
46) சங்கே முழங்கு
47) மிஸ்டர் சம்பத்
48) புகுந்த வீடு
49) தெய்வ சங்கல்பம்
50) தவப் புதல்வன்
51) உனக்கும் எனக்கும்
52) தாய்க்கு ஒரு பிள்ளை
53) ஆசீர்வாதம்

1973
54) அலைகள்       
55) வாயாடி 
56) பெத்த மனம் பித்து
57) நல்ல முடிவு 
58) பிரார்த்தனை
59) கங்கா கௌரி  
60) வந்தாளே மகராசி
61) அன்புச் சகோதரர்கள்
62) காசி யாத்திரை
63) பொன்னூஞ்சல்
64) சூரியகாந்தி     
65) மலை நாட்டு மங்கை
66) வீட்டுக்கு வந்த மருமகள்    
67) வாக்குறுதி      
68) பொன்வண்டு      
69) ஸ்கூல் மாஸ்டர்   
70) பிள்ளை செல்வம்
71) மல்லிகைப் பூ
72) மனிதரில் மாணிக்கம்
73) ஷண்முகப்  ப்ரியா

1974
74) கல்யாணமாம் கல்யாணம்       
75) சிவகாமியின் செல்வன்
76) தங்கப் பதக்கம் 
77) ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு 
78) ஒரே சாட்சி    
79) ரோஷக்காரி  
80) மகளுக்காக
81) இதயம் பார்க்கிறது 
82) ஸ்ரீ தேவி கருமாரி அம்மன் 
83) தாய்ப் பாசம்

1975
84) சினிமாப் பைத்தியம்       
85) உங்க வீட்டுக் கல்யாணம்
86) சொந்தங்கள் வாழ்க 
87) பிஞ்சு மனம் 
88) அவன்தான் மனிதன்    
89) மேல் நாட்டு மருமகள்
90) தேன் சிந்துதே வானம்
91) யாருக்கும் வெட்கமில்லை    
92) உறவு சொல்ல ஒருவன்
93) பணம் பத்தும் செய்யும்
94) ஆண் பிள்ளை சிங்கம்
95) அந்தரங்கம்
96) அவளுக்கு ஆயிரம் கண்கள்

1976
97) உண்மையே உன் விலை என்ன?       
98) மேயர் மீனாட்சி
99) பேரும் புகழும் 
100) தாய் வீட்டு சீதனம் 
101) ரோஜாவின் ராஜா 

1977
102) அவன் ஒரு சரித்திரம்       
103) தனிக் குடித்தனம்
104) உன்னை சுற்றும் உலகம்
105) பலப் பரீட்சை 
106) ராசி நல்ல ராசி

1978
107) வாழ்த்துங்கள்                       
108) அவள் ஒரு அதிசயம் 
109) அன்னப்பூரணி
110) சக்கப்  போடு போடு ராசா 
111) இறைவன் கொடுத்த வரம் 
112) கருணை உள்ளம் 
   

1979
113) வேலும் மயிலும் துணை       
114) நாடகமே உலகம்
115) ஆறிலிருந்து அறுபது வரை 

1981
116) கழுகு        
117) துணைவி  

118) கடவுளின் தீர்ப்பு 

1982
119) வடைமாலை   
120) நம்பினால் நம்புங்கள்



1983
121) சாட்டை இல்லாத பம்பரம்    
122) அடுத்த வாரிசு

1984
123) நான் மகான் அல்ல
124) உள்ளம் உருகுதடி

125) தலையணை மந்திரம்  

1985
126) நவக்கிரக நாயகி

127) புதிய தீர்ப்பு

1986
128) கண்ணத் தொறக்கணும் சாமி


1987
129) இனிய உறவு பூத்தது

130) சின்னக்  குயில் பாடுது
131) ஆனந்த் 
132) மனிதன்     

1988
133) குரு சிஷ்யன்

1990
134) பாலம்  
135) உலகம் பிறந்தது எனக்காக
136) அதிசயப் பிறவி

1998
137) காதலா காதலா



சோ நடித்த படங்கள் எண்ணிக்கை வருடவாரியாக 

1963 - 1
1966 - 4
1967 - 6
1968 - 9
1969 - 8
1970 - 8
1971 - 9
1972 - 8
1973 - 20
1974 - 10
1975 - 13
1976 - 5
1977 - 5
1978 - 6
1979 - 3
1980 - 0
1981 - 3
1982 - 2
1983 - 2
1984 - 3
1985 - 2
1986 - 1
1987 - 4
1988 - 1
1989 - 0
1990 - 3
1998 - 1

Sunday, January 20, 2019

சோ இயக்கிய திரைப்படங்கள்

1971

1) முகமது பின் துக்ளக்

1972

2) மிஸ்டர் சம்பத்

1975

3) யாருக்கும் வெட்கமில்லை

1976

4) உண்மையே உன் விலை என்ன? 


சோ இயக்கிய படங்கள் எண்ணிக்கை வருடவாரியாக 

1971 - 1
1972 - 1
1975 - 1
1976 - 1

Friday, December 14, 2018

நேர்மை உறங்கும் நேரம்

சோ எழுதிய, இயக்கிய கடைசி நாடகம். 1981யில் மேடையேறியது. முகமது பின் துக்ளக்கைப் போல, முழு அரசியல் நாடகம். 2001யில் ஏதாவது ஒரு மாநிலத்தில் இப்படியும் நடக்கலாம் என்ற கற்பனையில் எழுதப்பட்ட நாடகம். அவருடைய கற்பனை பல முறை உண்மையாகிவிட்டது. 2001க்கு முன்பாகவே இந்நாடகத்தில் சொல்லப்படும் பல சம்பவங்கள் நடந்துள்ளன. துரதிர்ஷ்டவசமாக இப்போதும் அவ்வாறே நடக்கின்றன. இதுவும் சோவின் காலத்தால் அழியாத நாடகமாகிவிட்டது.

சிங்காரம் என்கிற ஆளுங்கட்சித் தலைவராக, துணை முதல்வராக சோ பேசும் வசனங்கள் அகதளம். அவருக்குச் சளைக்காமல் முதலமைச்சர் வேடத்தில் வரும் நீலு. முரடனாக அம்பி. மூவரும்  சென்னைத் தமிழில் வெளுத்து வாங்குகிறார்கள். யாராவது கிட்டத்தட்ட அழிந்து விட்ட சென்னைத் தமிழை ஆராய்ச்சி செய்ய வேண்டுமானால் சோவுடைய நாடகங்களை ஆய்வுக்குப் பயன்படுத்தலாம். அவற்றில் இந்த நாடகத்துக்குச் சிறப்பான இடம் உண்டு.

முதல்வர் மின்சாரம் தாக்கி இறந்து போக, அதை மற்றவர்களிடம் இருந்து மறைக்கிறார் சிங்காரம். முதல்வரைப் போலவே தோற்றம் கொண்ட ராஜு என்ற ஆசாமியைப் பழக்கி ஆள் மாறாட்டம் செய்கிறார். சின்னையன் என்கிற முரடன் நடுவில் புகுந்து ராஜூவை மிரட்டி, ஒரு எம்.எல்.ஏ. ஆகி விடுகிறான். அவன் நல்ல பெருமாள் என்கிற கல்லூரிப் பேராசிரியரை முதல்வருக்கு அறிமுகப்படுத்துகிறான். அந்த படித்தவரின் ஆலோசனைகள் மூலம் நாட்டுக்கு சில நல்ல திட்டங்களை அறிவிக்கிறார் முதல்வர். அதைப் பிடிக்காத சிங்காரம் ஆட்சியைக் கவிழ்க்க முயல்கிறார். பணத்தால் எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்குகிறார் முதல்வர். ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள முயலும் போது, தாமே முதல்வராக வேண்டும் எனச் சொல்லி எதிர்க்கட்சித் தலைவர் கவிழ்த்து விடுகிறார். ஆட்சியைக் கலைக்க ஆளுநரிடம் பரிந்துரைக்க எண்ணும் முதல்வர், தேர்தலில் நின்று வெற்றி பெற்றால் கல்லூரி ஆசிரியரை முதல்வராகப் பதவி ஏற்று நாட்டுக்கு நல்லது செய்யச் சொல்கிறார். ஆலோசனைகள் மட்டுமே சொல்லிப் பழகி விட்ட அந்த மேதாவி, செயலில் இறங்க தயங்குகிறார்; முதல்வராகும் யோசனையை ஏற்க மறுக்கிறார். அவரைத் திட்டித் தீர்க்கும் முதல்வர் சிங்காரத்திடமே சரணடைகிறார். இருவரும் மீண்டும் இணைகின்றனர். நேர்மை நீண்ட உறக்கம் கொள்கிறது.

டீக்கடையில் அரசியல் வெட்டிப்  பேச்சு பேசுபவர்கள், அரசியல்வாதிகளைத் திட்டித் தீர்த்து அவர்கள் நேரில் வந்தால் வளைந்து கொடுப்பவர்கள், நேர்மையாக இருந்து அரசியலில் சேர்ந்தவுடன் பணத்தாசை கொள்பவர்கள், தினம் பேப்பர் படித்துக் கொண்டு எதற்கெடுத்தாலும் நாடு உருப்படாது எனச் சாபமிடுபவர்கள், யார் ஆட்சி செய்கிறார்கள் என்ற சிந்தனை கூட இல்லாமல் பணம் வாங்கிக் கொண்டு ஓட்டு போடுபவர்கள் என நாம் தினம் தினம் சந்திக்கும் பல மனிதர்களை இந்நாடகத்தில் பாத்திரங்களாக்கி உள்ளார் சோ.

போலியான கடவுள் மறுப்புக் கொள்கை, கடல் நீரைக் குடிநீர் ஆக்கும் திட்டம், கள்ளச் சாராயப் பிரச்சினை, தாய்க்குலம், உடன் பிறப்பு போன்ற வாசகங்கள், குதிரைப் பந்தைய ஒழிப்பு எனச் சகலத்தையும் கிண்டலடிக்கிறார் ஆசிரியர்.

நியாயமாக, இந்நாடகத்தில் வரும் ஒவ்வொரு வசனமுமே ரசிக்கத்தக்கது. ஆனால் எல்லாவற்றையுமே இங்கே தொகுக்க முடியாது என்பதால் சிலவற்றை மட்டும் குறிப்பிடுகிறேன்.

ஒரு தொழிலதிபர் அரசியல்வாதியைப் பார்த்து பேசும் வசனங்கள் - "என்ன சார் இது? உங்க வீட்ல நாலு பேர் இருக்காங்க. ரெண்டு ஃபிரிட்ஜ் தான் இருக்குங்கிறீங்க. எப்படி சமாளிக்கிறீங்க? சிம்பிளா இருக்கலாம். அதுக்கு ஒரு லிமிட் இல்லை? ரெண்டே ரெண்டு ஃபிரிட்ஜ் வைச்சுக்கிட்டு சாமியார் மாதிரியா இருக்கறது? "

ஒரு கட்சிக்காரரைப் பார்த்து - "உன் கட்சி பத்திரிகை  தானே? படிக்கிறேன் கேள். புலியே புறப்படு! சிங்கமே ஓடி வா! காளையே எழுந்திரு! இவங்க மனுஷனுக்கு நடத்தலை பத்திரிகை."

"எவனுக்கு ஓட்டு போட்டாலும் வேஸ்ட். இவனுக்கெல்லாம் ஓட்டு போடறதை விட குப்பைத் தொட்டியில் போடலாம். அதாவது ஆட்சிக்கு வந்து நம்மளை தொந்தரவு பண்ணாது."

"கடவுள் நம்பிக்கை இல்லாத சி.எம்.யா நீ. இப்படி முருகா முருகான்னு சொல்லக்கூடாது. அதெல்லாம் பாத்ரூம்லே ரகசியமாச் சொல்லிக்கணும். பப்ளிக் எதிரிலே தாய்தான் தெய்வம்."

"விஞ்ஞானிகள் மாநாடு நேத்து நடந்தது இல்லே? நான்தான் தலைமை வகிச்சேன்...என்னா பேசறதுன்னே புரியலை...கடைசியிலே விஞ்ஞானிங்க சேவை நாட்டுக்குத் தேவை...திருவள்ளுவரே ஒரு விஞ்ஞானிதான்னேன்  திருவள்ளுவரைப் பத்தி நாம என்ன சொன்னாலும் ஓ.கே. தான். திருவள்ளுவர்னா எல்லாரும்  உடனே பயந்து போய் கப்புனு வாயைப் பொத்திக்கிறானுங்க. ஏதோ போனாப் போகுதுன்னு திருவள்ளுவரோடு விட்டேன். விஞ்ஞானிகள் தெருக்கூத்து நடத்தி, அறிவை வளர்க்க வேணும்னு சொல்லலாமான்னு பார்த்தேன்."

Saturday, December 8, 2018

ஜட்ஜ்மென்ட் ரிஸர்வ்ட்

சோ எழுதி இயக்கிய நல்ல நாடகங்களில் ஒன்று. 1977யில் மேடையேறியது. இதை அவருடைய ஆகச் சிறந்த நாடகம் எனச் சொல்ல முடியாது.

ஓர் ஆண் ஒரு பெண்ணைக் கற்பழித்து விடுகிறான். அவனுக்குத் தண்டனை வாங்கித் தர ஒரு சமூகச் சேவகி, ஒரு கல்லூரிப் பேராசிரியர், ஒரு பத்திரிகை ஆசிரியர், ஒரு சினிமா டைரக்டர்  ஆகியோர் முயல்கிறார்கள். அவர்கள் நாடும் வக்கீல் அந்த ஆண் சில ஆண்டுகளுக்கு முன் தம்முடைய பெண்ணின் மானத்தைக் காத்தவன் என்பதால் அவன் இத்தவற்றைச் செய்திருக்க மாட்டான் என நம்புகிறான். ஆனால் அந்த ஆளே குற்றம் செய்ததை ஒப்புக் கொள்கிறான்.

வக்கீலுடைய மகள் குடும்ப மானம் பறி போகும் என்பதால் தந்தை பேச்சைக் கேட்டு குற்றம் சாட்டப்பட்டவனுக்கு ஆதரவாக சாட்சி சொல்ல மறுத்து விடுகிறாள். அதனால் மனம் வெறுத்துப் போகிறான்  வக்கீல். தவறு செய்திருந்தாலும் அந்த ஆசாமியைக் காப்பாற்ற தீர்மானிக்கும் வக்கீல் சமூகம், பத்திரிகை, சினிமா போன்றவற்றின் மீது பழி சுமத்தி அவனை விடுவிக்க முடிவு செய்கிறான்.

வக்கீல் பிறகு அப்படிச் செய்வது சரியாக இருக்காது எனத் தீர்மானிக்கிறான். இதற்கிடையே குற்றம் சாட்டப்பட்டவனே குற்றத்தை ஒப்புக் கொண்டு தண்டனை வாங்குகிறான்.

ராஜ்ய சபா எம்.பி. சீட்டுக்காகச்  சமூகச் சேவை செய்வதாகக் காட்டிக் கொள்கிறாள். இந்தக் கதையை எழுதி பிரசுரித்துப் பணம் பண்ணுகிறார் பத்திரிகையாளர். சினிமா இயக்குனர் இக்கதையைப் படமாக்கி பல லட்சங்கள் சம்பாதிக்கிறார். இப்படி எல்லாருமே பணம் அல்லது பதவிக்காக அப்பெண்ணுக்கு உதவுவதைப் போல நடிக்கிறார்கள். யாருமே அப்பெண்ணின் கதி என்ன என்பதை யோசித்துக் கூட பார்ப்பதில்லை. குற்றம் செய்தவன் பணம் வாங்கிக் கொண்டே (சினிமா இயக்குனரிடமிருந்து) குற்றத்தை ஒப்புக் கொள்கிகிறான். அவன் தப்பித்துக் கொண்டால் கதையில் சாரம் இருக்காது என இயக்குனருக்குப் பயம்.

வக்கீல் குமாஸ்தா ஜெகதீஷாக சோ. நக்கல் பிடித்த கேரக்டர். தம்முடைய நகைச்சுவையான ஆனால் கூரிய வசனங்களால் மற்ற கதாபாத்திரங்களின் அவலங்களைச் சாடுகிறார். இந்த நாடகத்தின் மிகப் பெரிய பலமே சோ பேசும் வசனங்கள். போலியான சமூகச் சேவகர்கள், மற்றவர்களின் துன்பத்தை வெட்கமோ பரிதாபமோ இல்லாமல் பணம் செய்யும் கதாசிரியர்கள் மற்றும் சினிமாக்காரர்கள், தம்முடைய மகன் மாட்டிக் கொண்டாலும் பரவாயில்லை தம்முடைய பெயர் கெடக் கூடாது என நினைக்கும் தந்தைமார்கள் எனப் பலதரப்பட்டவர்களையும் சோ இந்நாடகத்தின் மூலம் சாடுகிறார்.

ஆனால் மற்ற பாத்திரங்கள் பேசும் வசனங்கள் சொல்லும்படியாக இல்லை. குறிப்பாக குற்றம் செய்தவனுடைய தந்தை மற்றும் கல்லூரிப் பேராசிரியர் ஆகியோருடைய பாத்திரங்கள் சரியாக அமைக்கப் படவில்லை.

எத்தனை உண்மைச் சம்பவங்கள் கதைகளாகவும் சினிமாவாகவும் வருகின்றன. அவற்றை எழுதுபவர்களுக்கும்  இயக்குபவர்களுக்கும் அச் சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றி அக்கறை இல்லை என்பதே நிதர்சனம். அதைப் போல பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களே காசை வாங்கிக் கொண்டு, அவர்களுடைய கதையை விற்பதையும்  பார்க்கிறோம். 40 ஆண்டுகளுக்குப் பிறகும் சோ எழுதிய இந்நாடககத்தில் சுட்டி காட்டப்பட்டுள்ள அவலங்கள் இச்சமூகத்தில் இருப்பது வேதனைக்கும் வெட்கத்துக்கும் உரியவை.

Tuesday, November 13, 2018

சாத்திரம் சொன்னதில்லை

சோவின் தலை சிறந்த நாடங்களில் ஒன்று. 1980யில் மேடையேறிய நாடகம்.

இது அரசியல் நாடகம் இல்லை. ஜாதி ஏற்றத் தாழ்வைப் பற்றிய சமூகப் பிரச்சினையின் அடிப்படையில் எழுதப்பட்ட நாடகம்.

சாரியார் என்ற பிராமணர் ஜாதிப் பாகுபாடு கூடாது என எல்லோருக்கும் சொல்லி வருவார். ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பையனும், வேறொரு வகுப்பைச் சேர்ந்த பெண்ணும் காதலிக்கும் போது, அவர்களைச் சேர்த்து வைக்க இருவருடைய பெற்றோர்களுடனும் பேசிவிட்டு வருவார். இவரைச் சோதிக்க வேண்டும் என நினைக்கும் டாக்டர் ஒருவர், இவருடைய மகனும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவனும் ஒரே நாளில் ஒரே மருத்துவ மனையில் பிறந்த உண்மையை வைத்துக் கொண்டு, இரண்டு குழந்தைகளும் மாறி விட்டதாகக் கதை கட்டிவிடுவார். அதை உண்மை என நம்பும் சாரியார் அதுவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய தம்முடைய மக்கு மகனை வைய ஆரம்பிப்பார். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவனைக் கொண்டாடுவார். ஒரு கட்டத்தில் அந்தத் திருமணம் நின்று விட, மனம் மகிழ்வார்; தம்முடைய மகன் இல்லை என அவர் நம்பும் தம்முடைய மகனுக்கே, அப்பெண்ணை மணமுடிக்க சம்மதிப்பார். அவர் பேசிய தர்ம நியாயங்கள் அவருடைய செய்கையில் இருக்காது. நியாய தர்மங்கள் பேசுபவர்கள் தமக்கு என்று வந்தால் வேறு விதத்தில் நடந்து கொள்வார்கள் என்பதே நாடகத்தின் மையக் கருத்து. கடைசியில், அந்த தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவன் இறந்து விட, அவன் தம்முடைய மகன் இல்லை என்ற உண்மை தெரிந்தும், அவனுக்காகக் காரியங்கள் செய்வார் மனம் திருந்திய சாரியார். 

Monday, November 12, 2018

சட்டம் தலை குனியட்டும்

1972யில் மேடையேறிய இந்நாடகம் சோவின் சிறந்த அரசியல் நாடகங்களில் ஒன்று.

"ஒவ்வொரு எலெக்ஷன் நடக்கும் போதும் என் தொகுதியிலே போட்டி போடற எல்லாக் கட்சிக்காரர்களையும் பார்க்கும் போது எனக்கு ஒரு நிம்மதி வருது. எல்லாக் கட்சி கேண்டிடேட்சைப் பத்தியும் யோசிப்பேன். என்ன ஆனாலும் சரி இத்தனை பேர்லே ஒரே ஒரு ஆள்தானே ஜெயிக்க முடியும், எம்.பி. ஆக முடியும். பார்த்துக்கலாம்னு ஒரு நிம்மதி. அத்தனை கேண்டிடேட்சும் ஜெயிக்கற மாதிரி ஒரு சிஸ்டம் இருந்தா என்னை மாதிரி பொது மக்கள் கதி என்ன?"

இப்படி பல கூர்மையான யோசிக்க வைக்கக் கூடிய வசனங்கள். இந்த நாடகத்தின் மிகப் பெரிய பலம் இப்படிப்பட்ட வசனங்களே.

லட்சுமிபதி என்ற வக்கீல் பணம் இருப்பவன் (அரசியல்வாதி), பணமில்லாதவன் ஆகியோருக்கு இடையே சட்டத்தில் பாரபட்சம் இருக்கக் கூடாது. ஓர் ஏழை சந்தர்ப்ப வசத்தால் செய்த குற்றங்களுக்கு விரைவாகத் தண்டனை தீர்ப்பகிறது. ஆனால் ஓர் அரசியல்வாதி செய்த குற்றங்களுக்கு அவர் மீது விசாரணைக் கமிஷன் மட்டுமே வருகிறது. அதை அவர் எவ்வளவு தாமதப்படுத்த முடியுமோ, அவ்வளவு தாமதப்படுத்துகிறார். ஓர் இடைத் தேர்தலிலும் ஜெயித்து விடுகிறார். நேர்மையான லட்சுமிபதியையும் சாலை விபத்தில் கொன்று விடுகிறார். இத்தகையான சம்பவங்களால் சட்டமே தலை குனிய வேண்டும் என்பதே கதை முடிவு.

லட்சுமிபதியின் கதாபாத்திரம் இன்னும் சற்று கனமாக அமைத்திருக்கலாம். வந்தே மாதரம் வக்கீலைப் போல அலட்சியமாக நடந்து கொள்பவராக இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். அவரே புகழுக்காக முன்பு அந்த அரசியல்வாதிக்கு  ஆஜராவது அவருடைய கதா பாத்திரத்தை முழுமையாக நாம் ஆதரிப்பதைத் தடுக்கிறது. 

Tuesday, November 6, 2018

வந்தே மாதரம்

மஹாத்மா காந்தி, கௌடில்யர், சார்லஸ் டிக்கன்ஸ், பாரதியார், ஆர்யா என்னும் பாஷ்யம் ஆகியோருக்கும் சோ எழுதி இயக்கிய வந்தே மாதரம் என்ற இந்த நாடகத்துக்கும் தொடர்பு உண்டு. அது என்ன எனத் தெரிந்து கொள்ள மேலே படிக்கவும்.

1975யில் மேடையேறிய இந்நாடகம் அதற்கு முன்பாகத் துக்ளக் இதழில் தொடர்கதையாக வெளி வந்தது. ஒவ்வொரு அத்தியாயத்தின் முன்னுரையில் கௌடில்யரின் அர்த்த சாஸ்திரத்திலிருந்து சம்ஸ்க்ருத வாக்கியங்களும் அதன் மொழிபெயர்ப்பும் இடம் பெறும். அவை அந்த அத்தியாயத்துக்குப் பொருத்தமானதாக இருக்கும். இதில் வேடிக்கை என்னவென்றால் அந்த வாக்கியங்கள் எதுவுமே கௌடில்யருடையது இல்லை. எல்லாமே சோவின் வார்த்தைகள். அதை தொடர் முடிந்தவுடன் சோ வெளியிட்டார். தாம் சொல்லும் நல்ல விஷயங்களை யாரும் ஏற்றுக் கொள்ளாததால் கௌடில்யர் பெயரில் வெளியிட்டதாக தம்முடைய பாணியில் எழுதியிருந்தார். இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் பல மாதங்களாக வெளிவந்த இந்தத் தொடர் முடியும் வரை இதைப் படித்தவர்கள் யாரும் இந்த வாக்கியங்கள் அர்த்த சாஸ்திரத்தில் கிடையாது என்பதை அறியவில்லை.

பாஸ்கரன் என்ற மிகவும் திமிர் பிடித்த ஆனால் மேதாவியான பாரிஸ்டர் வேடத்தில் சோ. குடிகாரர்; யாரையும் சிறிது கூட மதிக்காதவர்; பணத்தாசை இல்லாதவர்; நல்லவர் எனப் பல கலவைக்குணம் கொண்டவர். சார்லஸ் டிக்கன்ஸின் "டேல் ஆ ஃப் டூ சிட்டீஸ்" என்ற கதையில் தோன்றும் ஸிட்னி கார்ட்டன் என்ற பாத்திரத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதே இந்தப் பாத்திரம்.

ஆர்யா என்ற பாஷ்யம் ஒரு விடுதலைப் போராட்ட வீரர். அவர் தீவிரவாதியாக இருந்து காந்தியவாதியாக மாறியவர். அவருடன் சோவுக்கு நட்பு இருந்தது. அவர் கொடுத்த சில தகவல்களின் அடிப்படையில் விடுதலைப் போராட்டம் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தின் சில இடங்களும், சம்பவங்களும் இந்தக் கதையில் அமைக்கப்பட்டுள்ளன. கதையின் நாயகனும் அவனுடைய நண்பர்களும் முதலில் தீவிரவாதிகளாக இருந்து காந்தியவாதிகளாக மாறுவதும் கவனிக்கத் தகுந்தது. நாயகனுடைய நண்பன் பெயரும் பாஷ்யம்.

கதா நாயகன் சுந்தரம், பாஷ்யம் மற்றும் தமிழ் வாத்தியார் சம்பந்த மூர்த்தி ஆகியோர் பாரதியாரைக் கடற்கரையில் சந்திக்கின்றனர். அவர் மூலம் மேலும் உத்வேகம் அடைவதாக ஓர்  அத்தியாயம். இப்படியாக பாரதியாரையும் தம்முடைய கதையில் ஒரு பாத்திரமாகி விட்டார் சோ.

1910களின் கடைசியில் நகரும் கதைக்களம். ஜனார்த்தனம் என்ற நேர்மையான  போலீஸ் அதிகரியுடைய மகன் சுந்தரம், தன்னுடைய கல்லூரியில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்குப் பிறகு ஆங்கிலேயர்களுக்கு எதிராகக் கிளம்புகிறான். அதை விரும்பாத அவனுடைய தந்தை அவனைத் தடுத்துப் பார்க்கிறார்; கைது செய்ய முயற்சிக்கிறார்; ஆனால் ஒரு கட்டத்தில் ஆங்கிலேயரின் நன்றிக்கெட்டத் தனத்தால் தற்கொலை செய்து கொள்கிறார்.

 சுந்தரத்துடைய காதலி சுமதி. அவள் மீது ஒரு சமயத்தில் மையல் கொள்ளும் புகழ் பெற்ற குடிகார, திமிர் பிடித்த வக்கீல் பாஸ்கரன் ஒரு முறை ஒரு வழக்கிலிருந்து சுந்தரத்தைக் காப்பாற்றுகிறான்.

சுந்தரமும் நண்பர்களும் குண்டு வைத்து ரயிலைக் கவிழ்க்கின்றனர். அதில் ஆங்கிலேயர்கள் பயணிப்பார்கள் என்பது அவர்களுடைய அனுமானம். ஆனால் இந்தியர்கள் பயணிக்கின்றனர். ரயில் கவிழ்ந்து அவர்கள் அனைவரும் மரணமடைகிறார்கள். சுந்தரம் கைதாகிறான். சுமதிக்காக பாஸ்கரன் சுந்தரத்தை விடுவிக்க வாதாடுகிறான். ஆனால் சுந்தரத்தின் ஒத்துழைப்பு இல்லாததால் கேஸ் தோற்று விடுகிறது. முடிவில் சுந்தரத்துக்குப் பதிலாகத் தானே ஆள் மாறாட்டத்தில் சிறை புகுந்து தூக்கு மேடை செல்கிறான் பாஸ்கரன்.

கதையில் இவர்களைத் தவிர பல சுவாரசியமானப் பாத்திரங்களும் உண்டு. ஆங்கிலேயரிடமும் பழகி, சுதந்திரத் தியாகிகளிடமும் பழகி, அங்கிருந்து விஷயங்களை இங்கே கசியவிடும் கலகலப்பான பத்திரிகையாளர் வேணு, அரைகுறை ஆங்கிலத்தில் பேசி நம்மை வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் காண்டிராக்டர் வஜ்ரவேலு போன்றோர் அவர்களில் முக்கியமானவர்கள்.

பாஸ்கரன் மிகவும் சக்திவாய்ந்த பாத்திரம். கேலி, கிண்டல், நையாண்டி, அலட்சியம், திமிர், குடித்ததால் வரும் தள்ளாட்டம், மற்றவர்களை மரியாதை இன்றிப் பேசுதல் என மிகவும் ரசிக்கத்தக்க வேடம். சோவைத் தவிர யாராலும் நடித்திருக்க முடியாது.

தொடர்கதைக்கும் நாடகத்துக்கும் சில வித்தியாசங்கள் உள்ளன. கதையில் பாஸ்கரனும் சுந்தரமும் ஓரளவுக்குப் பார்க்க ஒரே மாதிரி இருக்கிறார்கள்; அதனாலேயே கடைசியில் சிறையில் ஆள் மாறாட்டம் செய்ய முடிகிறது. ஆனால் நாடகத்தில் அப்படி வரவில்லை. நாடகத்தில் பாஸ்கரன் தமிழ் ஆசிரியரிடம் மட்டும் மரியாதையுடன் பேசுகிறான்; இலவச பள்ளிக்கூடம் நடத்த பண உதவி செய்கிறான்; அது மூலக் கதையில் இல்லாதது. நாடகத்தில் தன்னைத் தீயிட்டுக் கொளுத்திக் கொள்கிறான் பாஸ்கரன்; அதனால் போலீசுக்கு யார் இறந்தது எனத் தெரியவில்லை. ஆனால் மூலக்கதையிலோ ஆள் மாறாட்டம் செய்து சுந்தரத்தின் இடத்தில் பாஸ்கரன் தூக்கில் தொங்குகிறான்.

இந்த மேடை நாடகம் திரைக்கதையில் விரிவாக்கம் செய்யப்பட்டு தொலைக்காட்சித் தொடராக 80களில் வந்தது. நாடகமும், தொலைக்காட்சித் தொடரும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.

நாடகத்தின், குறிப்பாக பாஸ்கரன் பேசும் வசனங்கள் மிகவும் அருமை. உதாரணத்துக்குச் சில -

"உங்களை மாதிரி ஆசாமிகளை விட குடி எவ்வளவோ பெட்டர். குடி உடம்பைத்தான் கெடுக்கும். உங்கள மாதிரி ஆசாமிங்க குடியையே கெடுப்பிங்க."

"மூளையை மறந்து காரியம் பண்ணா அதுக்கு தலையை மறைச்சுதான் ஆகணும்."

"உட்காருங்களேண்டா...தரைதான் விசாலமா இருக்கே...என்ன சாப்பிடறீங்க? குடிக்க விஸ்கியா பிராண்டியா?"

"வெள்ளைக்காரங்களை விட மோசமானவங்க இங்கே நிறைய பேர் இருக்காங்க...நாடு சுதந்திரம் அடைஞ்சா நான் சொல்றது புரியும்."

"யாருக்குமே இடம் கொடுக்காதவங்களுக்காகத் தான் இந்த சமூகம் இடம் கொடுக்கும்."

"ஒரு தேசப் பக்தனுக்கு தேசத்துக்காக உயிர் விடுவது முக்கியமா? அல்லது தேசத்துக்காக உழைப்பது முக்கியமா? தேசத்திடமிருந்தே விடுதலை வாங்கி சென்று விடுவது முக்கியமா? அல்லது தேசத்துக்கே விடுதலை வாங்கித் தர உழைப்பது முக்கியமா?"



Saturday, July 14, 2018

உண்மையே உன் விலை என்ன? திரைப்படம்

1974யில் மேடையேற்றப்பட்ட "உண்மையே உன் விலை என்ன" என்ற நாடகத்தின் படமாக்கம். 30 ஏப்ரல் 1976யில் வெளியானது. கதை-வசனம்-இயக்கம் சோ.

ஒரு பாதிரியார்; அவரிடம் பாவ மன்னிப்பு கோர ஒருவன் வருகிறான். ஒரு பெண்ணின் கற்பைக் காப்பாற்ற அவன் செய்த கொலை தவறில்லை எனக் கருதும் பாதிரியார் அவனை மறைத்து வைக்கிறார். ஆனால் எப்போதும் உண்மை மட்டுமே பேசுகிறார்; அதனால் போலீசில் மாட்டிக் கொள்கிறார். அவரை விடுவிக்க ஒரு வக்கீல் வருகிறார். பொய் பேச மறுத்து, அந்த வக்கீலுக்கும் பெரிதாகப் பாதிரியார் ஒத்துழைக்கவில்லை. இந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக உண்மை என்ன என்பதற்கு சில சாட்சிகளும் ஆவணங்களும் கிடைக்கின்றன. கொல்லப்பட்டவனுடைய தந்தை அரசியல்வாதி. அவர் எல்லாரையும் விலை பேசி உண்மையை வாங்கி விடுகிறார். பாதிரியாருக்கு உதவியாக இருந்த வக்கீல், நண்பர், பாதிக்கப்பட்ட பெண் என எல்லாருமே விலை போகிறார்கள். ஆனால் கடைசியில் வேறு ரூபத்தில் உண்மை வெளிவருகிறது. அதை ஊருக்கு எல்லாம் தெரிய வாய்த்து அரசியல்வாதியின் கையால் இறந்து போகிறார் பாதிரியார்.

மேலே கொடுக்கப்பட்டது தான்  நாடகத்தின் மூலக்கதை. படத்தில் சில மாற்றங்கள். அரசியல்வாதிக்குப் பதிலாக பெரும் பணக்காரர். பத்திரிகையாசிரியர், அவருடைய மகள், பத்திரிகை நிருபர் எனச் சில புதிய பாத்திரங்கள். அந்த இரண்டு பாத்திரங்களும் பாதிரியாருக்கு உதவியாக வருகின்றனர். வக்கீலுடைய மகனை ஏன் பணக்காரரால் விலைக்கு வாங்க முடியவில்லை என்பதிலும் சில மாற்றங்கள். அவருடைய காதலியாக பத்திரிகையாசிரியர் மகள். இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். அதுவும் நாடகத்தில் கிடையாது. இதைத்தவிர க்ளைமாக்ஸும் சில மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளது. கோர்ட்டில் பாதிரியார் சுடப்படுகிறார், நாடகத்தில் வருவதைப் போல சர்ச்சில் அன்று.

பாதிரியாராக முத்துராமன். அமைதியான முகம்; சாந்தமான நடிப்பு. அப்படியே ஒரு உண்மையான பாதிரியைப் பார்ப்பதைப் போலவே உள்ளது. வில்லனாக அசோகன். வக்கீலாக சோ. சத்தியநாராயணா எனப் பெயர். தெலுங்கும் தமிழும் கலந்து பேசுகிறார்; நம்மை வயிறு நோக அடிக்கிறார். அவருடைய மனைவியாக சுகுமாரியும் மகனாக ஸ்ரீகாந்தும் நடித்துள்ளனர். பாதிக்கப்படும் பெண்ணாக சி.ஐ.டி.சகுந்தலாவும் அவருடைய கணவராக தேங்காய் சீனிவாசனும். கொலை செய்யும் டிரைவராக விஜயகுமார், பத்திரிகை ஆசிரியர் நீலு, அவருடைய மகள் பத்மப்ரியா, முக்கிய பாத்திரத்தில் நிருபராக மனோரமா, விஜயகுமாருக்கு அடைக்கலம் கொடுக்கும் முருகன் பக்தராக வி.கே.ராமசாமி என எல்லா நடிகர்களும் நிறைவாக நடித்துள்ளனர்.

நாடகத்தின் பாணியில் இருந்தாலும் நல்ல படம். 

Saturday, July 7, 2018

யாருக்கும் வெட்கமில்லை

13 ஜூன் 1975யில் வெளியான இப்படத்தை எழுதி இயக்கியவர் சோ. இதே பெயரில் மேடையேறிய இவருடைய நாடகத்தின் படமாக்கமே இது. இதில், சிவகுமார், ஜெயலலிதாவுடன் சோவும் நடித்திருந்தார். இப்படத்தைப் பார்க்கும் வாய்ப்பு இன்னும் எனக்குக் கிடைக்கவில்லை. 

Thursday, April 5, 2018

யாருக்கும் வெட்கமில்லை

"A woman cannot become a prostitute, all by herself. For becoming a prostitute, a woman requires the cooperation of several men. This society creates a prostitue, and then condemns its own creation."

"Confusion can come only to persons who are capable of thinking. Persons who refuse to think, will never get confused. Our society is not confused; it is never confused; never."

மேலே நான் கொடுத்த வசனங்கள் சாம்பிளுக்கு மட்டுமே. இதைப் போல பல கூர்மையான வசனங்கள் - முக்கியமாக சமூகச் சீர்கேடுகளைப் பற்றி - அரசியலைப் பற்றியல்ல. அரசியலுக்கே சோ முக்கியத்துவம் கொடுக்கிறார் எனச் சொல்பவர்கள் இந்நாடகத்தைப் பார்க்க வேண்டும். 1973யில் மேடையேறிய இந்நாடகம் சோ எழுதி இயக்கிய சிறந்த நாடகங்களில் ஒன்று.

ஒரு கயவனால் ஏமாற்றப்பட்டு, சந்தர்ப்ப வசத்தால் விபச்சாரியாகும் ஒரு பெண்ணை முதல் கேசுக்காக அலையும் வக்கீல் ஒருவன் பெயிலில் எடுத்து, தன்னுடைய வீட்டில் தற்காலிகமாக வசிக்க வைக்கிறான். அவளை ஏமாற்றிய கயவன் அந்த வக்கீலுடைய அண்ணன்தான் என்ற உண்மை பிறகே தெரிகிறது. இந்தப் பெண் யார் என்பதை அறிந்தவுடன், அந்த வீட்டார் அவளிடம் நடந்து கொள்ளும் முறை, அவளிடம் தகாத முறையில் நடந்து கொள்ளும் ஆண்கள் என கதை போகிறது. ஒரு விபச்சாரியை உருவாக்கும் ஆண்கள், மனத்தால் தூய்மையில்லாத ஆண்கள் எப்படி அவளை மட்டும் குற்றம் சொல்ல முடியும், ஏன் ஆண்கள் தவறுக்குத் தண்டிக்கப் படவில்லை என நாடகம் அலசுகிறது. குற்றம் செய்யாதவர் யாராவது இருந்தால் விபச்சாரி மீது கல்லெறியவும் எனச் சொன்ன ஏசு நாதரின் கூற்றைப் பிரதிபலிக்கும் நாடகம்.

இந்நாடகத்தில் ராவுத்தர் என்ற வேடத்தில் சோ வருகிறார். நாயகிக்கு வக்காலத்து வாங்கி அவள் சார்பாக பேசி, நியாயத்தை நிலைநாட்ட முயலும் கதாபாத்திரம். ஆனை மணாளன் என்ற அரசியல்வாதியாக நீலு; அவர் தோன்றும் காட்சிகளில் மட்டும் சில அரசியல் வசனங்கள் வருகின்றன. 

Saturday, October 21, 2017

மிஸ்டர் சம்பத்

சோ இயக்கிய படம். ஆர்.கே.நாராயணின் நாவலைத் தழுவி எழுதப்பட்ட கதை. திரைக்கதை வசனமும் சோவுடையவை. இப்படம் 13 ஏப்ரல் 1972யில் வெளியானது.


மற்றவர்களை ஏமாற்றியே வாழும் சோவும், மிகவும் நல்லவரான மேஜர் சுந்தர்ராஜனும் தத்தம் வழியே சிறந்தது எனச் சவாலிட்டுக் கொள்கிறார்கள். ஒரு வருடம் கழித்து தங்கள் தங்கள் வழியிலேயே பயணித்து வாழ்க்கையில் யார் முன்னேறுகிறார்கள் என்பதைப் பார்ப்பதே அந்தச் சவால்.

ஜிப்பா கண்ணாடி அணிந்து கொண்டு, ஒரு வெத்தலைப் பாக்குப் பெட்டியைக் கையில் வைத்துக் கொண்டு, நக்கலாக அனைவரின் பலவீனத்தையும் அறிந்து கொண்டு ஏமாற்றுபவராகக் கலக்கியுள்ளார் சோ. மனோரமா அவருக்கு ஜோடி.

முத்துராமன், ஜெயா, நீலு, பூர்ணம் விஸ்வநாதன், மாலி, வெண்ணிறாடை மூர்த்தி, சுகுமாரி, செந்தாமரை ஆகியோரும் நடித்துள்ளனர். எம்.எஸ்.விஸ்வநாதன் ஒரு காட்சியில் தோன்றுகிறார்.

வசனங்களும் சோவுடைய அட்டகாசமான நடிப்பும் நாடகப் பாணியில் அமைந்த இப்படத்தின் மிகப் பெரிய பலம். நடிகர்கள் அனைவரும் நிறைவாக நடித்துள்ளனர். 

புது முக நடிகையான ஜெயாவைத் தமக்குத் தெரியும் என எல்லாரையும் நம்ப வைத்து, இலவசமாக இருக்க இடமும், சாப்பிட உணவும், நல்ல மரியாதையையும் சாமர்த்தியமாக ஏற்படுத்திக் கொள்கிறார் சோ. பிறகு ஜெயாவையும் நம்ப வைத்து, அவருடைய அக்காவான மனோரமாவை மயக்கி, அவர்களை முத்துராமன் இயக்கும் படத்திலிருந்து விலக வைக்கிறார். தம்மை நம்பி ஏமாறும் பூர்ணம் விஸ்வநாதனையும் மாலியையும் வைத்துப் பணத்தைத் தயாரித்து நஷ்டப்பட வைக்கிறார். கடைசியில் செய்யாத குற்றத்துக்குக் கைதாகிச் சிறை செல்கிறார்.




Sunday, October 8, 2017

உறவுகள் இல்லையடி பாப்பா

சோ எழுதி இயக்கிய இந்நாடகம் 1975யில் முதலில் மேடையேறியது. 1980களின் இறுதியில் தொலைக்காட்சித் தொடராகவும் வெளிவந்தது.

இது அரசியல் நாடகம் இல்லை. பெயருக்குக் கூட அரசியல் பற்றி மறைமுக வசனம் கூட கிடையாது. ஆனால் எப்படி சோவுடைய அரசியல் நாடகங்கள் 50 வருடங்கள் கழித்தும் இன்றைக்கும் ஏற்புடையதாக உள்ளனவோ, அதைப் போல இச் சமூக நாடகமும் இன்றைய காலக்கட்டத்துக்கும் பொருந்தக் கூடியதாக உள்ளது.

புண்ணியகோடி என்ற வயோதிகர் வேடத்தில் சோ. அவருடைய மகனாக நீலு; பேரனாக அம்பி. ஒற்றுமையாக இருக்கும் குடும்பத்தில் ஒரு பானை நிறைய தங்கக் காசுகள் கிடைத்தவுடன் அந்த ஒற்றுமை சீர் குலைகிறது. ஒருவர் மற்றவர் மீது சந்தேகம் கொள்கின்றனர்; பரஸ்பரம் துரோகம் செய்ய முயல்கின்றனர். குடும்பத்தில் நடக்கும் சில சாவுகளும் அலட்சியப்படுத்தப் படுகின்றன. கடைசியில் எல்லாருமே இறக்க, சோ பைத்தியம் பிடித்து அலைவதாக நாடகம் முடிகிறது.


பணத்தாசையின் தீமையையும், அதன் அசுர பலத்தையும் சோ நகைச்சுவையாக அதே சமயத்தில் அழுத்தமாகவும் கூறியுள்ளார்.

Monday, September 25, 2017

இன்பக் கனா ஒன்று கண்டேன்

1971யில் மேடையேறிய இந்நாடகம் சென்னையில் 100 முறைக்கு மேல் மேடையேறியது.

மந்தைவெளி மன்னாரு என்ற கதாபாத்திரம் காணும் பகல் கனவே இந்நாடகத்தின் கதை. ஓர் உலகில் நூறு பேர்; தங்களுக்குள் வேலைகளையும் வசதிகளையும் சரி சமமாகப் பிரித்துக் கொண்டு சமூக வாழ்க்கை வாழ்கின்றனர். அந்த நூறு பேரில் இருவருக்கு மட்டும் கொடுக்க வேலையில்லை. அதனால் அவர்கள் மற்றவர்கள் செய்யும் வேலையைக் கண்காணிக்கும் புது வேலையை உருவாக்குகிறார்கள். யார் அந்தப் பதவியைப் பிடிப்பது என்பதில் இருவருக்கும் போட்டி ஏற்படுகிறது. அது தேர்தலில் போய் முடிகிறது. தேர்தலால் ஊழல் உருவாகிறது. தேர்தல் முடிந்து வென்றவனுக்கு உதவியவர்கள் சில சலுகைககளை எதிர்பார்க்கின்றனர். அத்தகைய ஊழலைக் கண்டு பிடிப்பவர்களுக்கும் சலுகைகள் கிடைக்கின்றன. இப்படியே படிப்படியாக குடியாட்சியின் அனைத்துக் கேடுகளும் அறிமுகமாகி, பணமும் புழக்கத்துக்கு வந்து, அடிதடி கொலை என முடிகிறது.


தேர்தல் முறை ஒரு சமூகத்தை எப்படிச் சீரழிக்கிறது என்பதைச் சோ தமது பாணியில் அழகாகக் காண்பிக்கிறார்.

Thursday, September 7, 2017

முகமது பின் துக்ளக் திரைப்படம்

"முகமது பின் துக்ளக்" திரைப்படத்துக்கு 1971யில் ஆனந்த விகடனில் வந்த விமர்சனம் -

"எதையும் கேலி செய்வதற்கு விஷயத் தெளிவு வேண்டும்; அதையும் நகைச்சுவையோடு கேலி செய்வதற்கு புத்திசாலித்தனம் வேண்டும்; அதுவும், பிறர் மனம் புண்படாமல் கேலி செய்வதற்குப் பக்குவமான அறிவு வேண்டும்; அத்துடன், சிந்தனையையும் தூண்டுவதற்கு தெளிந்த ஞானம் வேண்டும். இவற்றில் நான்காவது வரிசைக்கு வந்து நிற்கிறார் சோ என்பதற்குச் சாட்சி, முகமது பின் துக்ளக். அரசியலைக் கேலி செய்யத் துணிந்தவர்களில் பெரும்பாலோருக்கு ஏதாவது ஒரு குறிப்பிட்ட கட்சியைத்தான் கேலி செய்ய வரும். ஆனால், ஒரு சமுதாயத்தின் பலவீனத்தையே, கட்சிப் பாகுபாடின்றி, முதிர்ந்த ஞானத்துடன் கேலி செய்திருக்கும் சாமர்த்தியத்தால் முகமது பின் துக்ளக் தரத்தில் உயர்ந்து நிற்கிறான்."

1968யில் மேடையேறி பெரும் வெற்றியடைந்த நாடகத்தின் திரைப்பட ஆக்கமே 5 மார்ச் 1971யில் வெளியான இப்படம். இரு பெரும் திராவிடக் கட்சித் தலைவர்கள் இப்படம் வெளி வருவதை முடிந்த வரை தடுத்தனர் எனக் கேள்வி. முதலில் ஒப்புக்கொண்ட சில நடிகர்கள் பின்பு நடிக்க மறுத்தனர். கேமராமேன்கள் தொடர்ந்து மிரட்டப்பட்டு, 26 முறைகள் மாறினார்கள். மனசாட்சிக்குப் பயந்த எம்.எஸ்.விசுவநாதன் யாருக்கும் பணியாமல் இப்படத்துக்கு இசை அமைத்தார்.  

சென்ஸார் சான்றிதழ் வாங்குவதிலும் சிக்கல். பத்தாயிரம் பேர்களைத் தந்தி கொடுக்க செய்து சான்றிதழ் வாங்கினார் சோ. இருந்தாலும் 22 இடங்களில் வெட்டு. தயாரிப்பாளர் வேண்டுகோளால் சோ அதற்கு மட்டும் ஒப்புக் கொண்டார். 

இப்படம் சோ இயக்கிய முதல் படம். இது சோ நாயகனாக நடித்த முதல் படம். படம் முடியும் தறுவாயில் அவருடைய கேரக்டர் வில்லத்தனமாகவும் மாறும். மஹாதேவன் மற்றும் துக்ளக் என இரு வேடங்கள் சோவுக்கு. கதை வசனமும் சோ.

இப்படத்தின் கதை, வசனம், நையாண்டி, நடிகர்களின் நடிப்பு, அரசியல் கருத்து போன்ற அனைத்து விஷயங்களையும் ஏற்கனவே நாடகத்தின் விமர்சனத்தில் எழுதி விட்டேன். அதனால் அவற்றைப் பற்றி மீண்டும் இதில் எழுதப் போவதில்லை.

நாடகத்தை விட படம் சற்று நீளம். இரண்டு தேவையற்ற பாடல்கள் படத்தில் உண்டு. மகாதேவனும் அவருடைய நண்பனும் ஒரு தேசப் பக்தரின் தூண்டுதலாலேயே துக்ளக்காகவும், இபுன் பதூதாவாகவும் வேடம் போடுவதும், அந்த தேசப் பக்தருடைய பேராசை பிடித்த மகளாக மனோரமாவின் காட்சிகளும் நாடகத்தில் கிடையாது. கடைசியில் இபுன் பதூதா மக்களிடம் கல்லடிப்பட்டு இறக்கும் படி துக்ளக் மக்களைத் தூண்டுவதும் படத்தில் வரும் புது காட்சி. சில வசனங்கள் நாடகத்தில் கிடையாது. ஈ.வெ.ராவைப் பற்றியும் வெங்காயத்தைப் பற்றியும் நாடகத்தில் வரும் வசனங்கள் படத்தில் இல்லை.

நாடகத்தில் நடித்த கேரக்டரிலேயே சோ, சுகுமாரி, அம்பி, நீலு ஆகியோர் நடித்துள்ளார்கள். இபுன் பதூதாவாக பீலிசிவம், ஒரு காட்சியில் வெண்ணிறாடை மூர்த்தி, கனமான பாத்திரத்தில் மனோரமா ஆகியோரும் நடித்துள்ளனர். 

தமிழ்த்  திரைப்பட வரலாற்றில் இது ஒரு வித்தியாசமான தைரியமான முயற்சி. தமிழில் பார்க்க வேண்டிய நூறு படங்களை வரிசைப்படுத்தினால் இப்படத்துக்கு கண்டிப்பாக ஓரிடம் உண்டு.

Friday, August 18, 2017

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?

நாடக உலகத்தில் முதன்முதலாக காலைக் காட்சி வைத்தது விவேகா பைன் ஆர்ட்ஸ் தான். 1970யில் முதலில் மேடையேறிய "என்று தணியும் இந்த சுதந்திர தாகம்" ஒரே நாளில் மூன்று வெவ்வேறு ஆடிட்டோரியத்தில் நான்கு காட்சிகள் நடந்து சாதனை படைத்தது. இக்கால கட்டத்தில், சஃபையர்  தியேட்டரில் ஒரு வருடம் முழுவதும் இந்த நாடகமும் சோவின் ஏனைய நாடகங்கள் மட்டுமே காலைக் காட்சிகளில் இடம்பெற்றன.

"முகமது பின் துக்ளக்கை" விடவும் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்நாடகத்துக்கு பிளாக்கில் டிக்கெட் விற்றன. சிவாஜி கணேசன் இந்நாடகத்தில் வரும் யமன் கேரக்டரில் நடிக்க ஆசைப்பட்டார்.

இந்திரா காந்தியையும், அவருடைய சோஷலிச கொள்கைகளையும் நையாண்டி செய்த இந்நாடகம், அக்கால கட்டத்தில் இந்திராவுடன் கூட்டணியில் இருந்த தி.மு.. தலைவர் கருணாநிதியைக் கோபம் கொள்ள வைத்தது. அவர் சோவைத் தாக்கி "நானே அறிவாளி" என்ற நாடகத்தை எழுதினார் எனக் கேள்வி.

ராஜா அண்ணாமலை மன்றத்தில் ஒரு முறை இந்நாடகம் அரங்கேறியது. அப்போது வேலை நிமித்தமாக சோவால் நேரத்துக்கு வர முடியவில்லை. அதனால் அவர் நடித்த நாரதர் வேடத்தை இன்னொரு நடிகர் ஏற்றார். ஆனால் ரசிகர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. கடைசியில் இரவு 8:30 மணிக்குச் சோவே வந்து நாடகம் திரும்பவும் ஆரம்பிக்கும் வரை எல்லா ரசிகர்களும் பொறுமையாகக் காத்திருந்தனர். நாடகம் முடியும் போது மணி இரவு 11. அது தான் சோவின் சக்தி. யார் ஒப்புக் கொண்டாலும் கொள்ளாவிட்டாலும், நாடக உலகின் முடி சூடா மன்னன் சோதான்.

இந்நாடகத்து எவ்வளவு இடையூறுகள் செய்ய முடியுமோ அத்தனை இடையூறுகளைச் சில காட்சிகள் செய்தன. மேடையில் முட்டை வீசப்பட்டது. அரங்கத்துக்குள் கலாட்டா நடந்தது. ஆனால் அவை எல்லாவற்றையும் மீறி இந்நாடகம் பெரும் வெற்றி பெற்றது.

இந்நாடகம் அந்தக் காலகட்டத்து அரசின் கொள்கைகளைக் கண்டித்து எழுதப்பட்டது என்றாலும் எந்தக் காலகட்டத்திலும் அதை ரசிக்கும்படியும் புரிந்து கொள்ளும்படியும் வைத்திருக்கும் நம் நாட்டு அரசியல்வாதிகளுக்கு நன்றி.

ஓர் அரசியல்வாதி தேவ லோகம் சென்று மக்களாட்சிக் கொள்கையைப் பரப்பி அனைத்து மேலுலக மக்கள் அறிவையும் மயக்கி அவர்களுக்குள் கலகத்தை உண்டு செய்து ஆட்சியைக் கைப்பற்றுவது தான் கதை. ஒரே அரசியல்வாதிகளால் சர்வ வல்லமை படைத்த தேவர்களை ஆட்டி வைக்க முடிகிறதென்றால், இத்தனை அரசியல்வாதிகளும் ஒரு சேர சக்தியில்லாத மக்கள் படும் பாடு அளவிட முடியாத கொடுமை என்பதை உணர்த்தும் நாடகம்.

நாரதராக சோ, அரசியல்வாதி நல்லதம்பியாக அம்பி, யமனாக நீலு - வசனங்கள் தூள்; Cho's satire at his best.

இந்திரனை ஜனாதிபதியாக்கி டம்மி ஆக்குவதன் மூலம் ஜனாதிபதியின் செயல்பாடுகளையும் அவர்களுக்கு இருக்கும் ஏட்டளவு உரிமைகைளையும் சோ கிண்டலடிக்கிறார். யமன் தேர்தலில் நிற்க குபேரன் செலவழிக்கிறான். கடைசியில் குபேரன் சொத்தெல்லாம் போய் குசேலனுக்கு இணையாகிறான். இது தான் சோஷலிசம் எனக் கிண்டலடிக்கிறார் ஆசிரியர். திலோத்தமை ஓரணியிலும், ரம்பை இன்னோர் அணியிலும் தேர்தல் பிரசாரம் செய்வது இக்காலத்து நடிகர்களைப் படம் பிடித்துக் காட்டுகிறது. குபேரன் சொத்தை நல்லதம்பி நாட்டுடமை ஆக்குகிறான்; விஷ்ணுவின் சங்கு, சக்கரத்தையும் அரசிடம் ஒப்படைக்க வேண்டுமென்கிறான்; இது இந்திரா காந்தியின் வங்கிகளை நாட்டுடைமையாக்கியதைச் சாடும் காட்சிகள். கடைசியில் காந்தியே வருகிறார். அவராலும் நாட்டைக் காப்பாற்ற முடியாது என ஆகிறது.


ஒரு காட்சியில் நேரு நாரதரிடம் கேட்கிறார், நாட்டின் இந்த கதிக்கு யார் காரணமென. நாரதரின் பதில் - "இந்திரா". நேரு அதிர்ச்சியடைய, தாம் இந்திரனை அழைத்ததாக நாரதர் சமாளிக்கிறார். இக்காட்சியில் ரசிகர்கள் எந்த அளவுக்கு ஆரவாரம் செய்திருப்பார்கள் எனக் கற்பனை செய்ய முடிகிறது.