Showing posts with label Sivaji. Show all posts
Showing posts with label Sivaji. Show all posts

Wednesday, July 18, 2018

அவன் ஒரு சரித்திரம்

"வணக்கம் பல முறை சொன்னனேன்" உட்பட கண்ணதாசன் கற்பனையில் எம்.எஸ்.விசுவநாதன் இசையில் அருமையான பாடல்கள். சிவாஜியின் பிரமாதமான நடிப்பு, காஞ்சனாவின் சிறந்த நடிப்பு, நல்ல கதை என பல நல்ல அம்சங்களைக் கொண்ட இப்படம் கே.எஸ்.பிரகாஷ் ராவ் இயக்கத்தில் 14 ஜனவரி 1977யில் வெளியானது.

படம் நன்றாக இருந்தாலும் நகைச்சுவைக் காட்சிகள் நன்றாக அமையவில்லை. ராமு என்ற அசட்டு கேரக்டர் சோவுக்கு. அவருடைய தந்தையாக வி.கே.ராமசாமியும், சிற்றன்னையாக மனோரமாவும், மனோரமாவுடைய தந்தையாக தங்கவேலுவும் நடித்துள்ளனர். இவர்கள் எல்லாரும் வில்லத்தனமான காமெடியன்கள். இத்தனை பேர் இருந்தும் நமக்குச் சிரிப்பு வரவில்லை. சோவுடைய கேரக்டர் மிகவும் வீக். இப்படத்தை அவர் தவிர்த்திருக்கலாம். எம்.பானுமதி அவருக்கு ஜோடி.

சிவாஜி பெரிய பணக்காரர். அவருடைய தந்தை பகவதி; தாய் பண்டரிபாய். சிவாஜி படித்து கலெக்டராகிறார். அகிம்சை வழியில் நேர்மையாக இருக்கும் அவருக்குப் பல சோதனைகள் வருகின்றன. அவற்றையெல்லாம் அவர் எப்படி வெற்றி கண்டார் என்பதே கதை. அவருக்கு உறுதுணையாக காஞ்சனாவும், ஜோடியாக மஞ்சுளாவும் நடித்துள்ளனர். தீவிரவாதியாகவும் அவருடைய தம்பியாகவும் ஸ்ரீகாந்த் நடித்துள்ளார். 

Saturday, July 7, 2018

ரோஜாவின் ராஜா


15 டிசம்பர் 1976யில் வெளியான இப்படத்தை இயக்கியவர் கே.விஜயன். மருந்துக்குக் கூட நல்ல விஷயம் எதுவும் இப்படத்தில் இல்லை.

சிவாஜி, சோ, ஏ.வி.எம்.ராஜன் எல்லோரும் கல்லூரி மாணவர்களாக வருவது சிரிப்பை வரவழைக்கிறது. ஸ்ரீகாந்த் அவர்களுடைய நண்பர். சிவாஜி ஏழை; ராஜன் பணக்காரர். ஏழை என்பதனால் அவருடைய காதலியான வாணிஸ்ரீயை அவருடன் சேர விடாமல் செய்கின்றனர். பின் அவர் தம்முடைய நண்பன் ராஜனுக்காக காதலியைத் தியாகம் செய்ய, அவர் அம்மா இறக்க, அவர் பித்து பிடித்து அலைகிறார். உண்மை அறியும் ராஜன் நண்பனைத் தேடித் கண்டுபிடித்து அவரை குணமாக்கி, வாணிஸ்ரீயையும் ஒப்படைக்கிறார்.

மேஜர் சுந்தரராஜன், மனோகர், நீலு, சோ, மனோரமா, ஜி.வரலட்சுமி, சுகுமாரி, வி.கே.ராமசாமி எனப் பல பெரும் நடிகர்கள் நடித்திருந்தும் யாரையும் இயக்குனர் நன்றாகப் பயன்படுத்தவில்லை.

சோவுக்கு இரட்டை வேடம். அப்பா-மகன். மகன் பெயர் ஜம்பு. இருவருமே மொட்டை. இருவரில் யார் தம்முடைய  கணவர் எனத் தெரியாமல் அவ்வப்போது மனோரமா தவிக்கிறார். அதுதான் நகைச்சுவை. சோவுக்கு இப்படம் தேவையா?

அவன்தான் மனிதன்


ஏ.சி.திருலோகசந்தர் இயக்கம். 11 ஏப்ரல் 1975 வெளியீடு. சிவாஜி கணேசன், ஜெயலலிதா, முத்துராமன், சந்திரபாபு, வாசு போன்றோருடன் சோவும் நடித்திருந்தார். சோவுக்கு அப்பாவு என்ற கதாப்பாத்திரம். சச்சு ஜோடி. 

துன்பவியல் கதை. எல்லா நடிகர்களும் அருமையாக நடித்துள்ளனர். கண்ணதாசன் கற்பனையில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் இப்படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட். 

Sunday, June 24, 2018

சினிமாப் பைத்தியம்

31 ஜனவரி 1975யில் வெளியான இப்படத்தை இயக்கியவர் முக்தா சீனிவாசன். ஒரு ஹிந்தி படத்தின் ரீமேக். சுவாரசியமான படம். சினிமா பைத்தியம் பிடித்து அலையக் கூடாது என்பதையும், சினிமா நடிகர்கள் எதையும் மிகைப்படுத்தி செய்வார்கள் என்பதையும் எடுத்துரைக்கும் படம். ஜெய்சங்கர் நாயகனாக நடித்துக் கொண்டிருந்த காலத்தில் தம்முடைய இமேஜைப் பற்றி சற்றும் கவலையில்லாமல் நடிகர் ஜெய்சங்கராகவே நடித்துள்ளார். அவரை விட வில்லன் நடிகர் பலசாலி, அவரை விட ஒரு துணை நடிகர் நல்ல உடல்கட்டு உடையவர், அவர் 500 ரூபாய் தர்மம் செய்தால் அவருடைய உதவியாளர் அவர் ஐயாயிரம் உதவி செய்ததாக செய்தி வெளியிடுவது, தம்முடைய மகளுக்குத் திருமணம் செய்து வைக்குமாறு உதவி கேட்டு வரும் பெண்ணுக்குப் புத்திமதி கூறி ஊர் போய்ச் சேர பணம் கொடுத்தனுப்புவது எனப் பல காட்சிகள். அவரைத் தவிர கண்டிப்பாக எந்த நடிகரும் இப்பத்திரத்தில் நடிக்க சம்மதித்திருக்க மாட்டார்கள். அவர் உண்மையில் பாராட்டுக்குரியவர்.

ஜெய்சங்கர் மீது உயிர் விடுமளவு ரசிகையான ஜெயசித்ரா தம்முடைய முறைப் பையனான கமலைத் திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார். ஜெய்யையே மணம் செய்ய கனவு காண்கிறார். சினிமா உலகம் உண்மையில்லை என்பதை ஜெய் அவருக்குப் புரிய வைப்பதே கதை.

சிவாஜி கணேசன், ஜெயலலிதா, பாலாஜி, பி.மாதவன் உட்பட பலர் கௌரவ நடிகர்களாக நடித்துள்ளனர். இவர்களைத் தவிர மேஜர் சுந்தர்ராஜன், சௌகார் ஜானகி, சச்சு, மனோரமா, வி.கே.ராமசாமி போன்றோரும் நடித்துள்ளனர்.

சோ ரமணி என்ற கேரக்டரில் ஜெய்க்கு உதவியாளராக வருகிறார். சற்றும் அலட்டிக் கொள்ளாத பாத்திரம். கலகலப்புக்குச்  சற்றும் பஞ்சமில்லை. இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி ஜெய்க்கு இவர் விளம்பரம் தேடித் தருவது நல்ல வேடிக்கை. கமலுடன் சோ நடித்த முதல் படமிது.

Sunday, May 13, 2018

தங்கப் பதக்கம்

செந்தாமரையின் நாடகத்தை சில மாற்றங்களுடன் சிவாஜி கணேசன் மேடையேற்றினார். பிறகு அவரே அதைத் திரைப்படமாகவும் எடுத்தார். அது தான் தங்கப் பதக்கம். பி. மாதவன் இயக்கத்தில் 1 மார்ச் 1974யில் இப்படம் வெளியானது.

மொத்தத்தில் நல்ல படம். போலீஸின் கம்பீரத்துடன், தந்தையின் பாசத்தையும் அருமையாக நடித்துக் காட்டுகிறார் சிவாஜி. இது கண்டிப்பாக அவருடைய சிறந்த படங்களில் ஒன்று. மற்ற நடிகர்களும் இயல்பான நடிப்பில் படத்துக்குப்  பலம் சேர்க்கிறார்கள்.

நேர்மையான போலீசுக்காரருக்கு நேர்மையற்ற திருட்டு மகன். அவனைக் கடைசி வரை திருத்த முடியாமல் போகிறது. கடைசியில் அவன் நாட்டுக்கே துரோகம் செய்யத் துணியும் போது, தனது கையாலேயே அவனை அந்த போலீஸ்காரர் சுட்டுக் கொள்கிறார்.

சிவாஜி காதல் காட்சிகளில் குழைவது அவருடைய கம்பீரத்தைக் குறைக்கிறது. செளத்ரி என்று தமிழ்நாட்டில் யாருக்குப் பெயர் இருக்கும்? அதையும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி அப்பெயரை உச்சரிக்கின்றனர். வில்லன் படிப்படியாக எப்படி உயர்ந்து நாட்டு ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்கும்படி வளர்ந்தார்? எதுவும் நம்பும்படி இல்லை.

காமெடி தனி டிராக். சோவுக்கு இரண்டு வேடங்கள் - அண்ணனாக நேர்மையான போலீஸ் சுந்தரம், தம்பியாக அடாவடி அரசியல்வாதி வையாபுரி என்ற வைகை வளவன். அண்ணன் கேரக்டரைப் பற்றி சொல்ல ஒன்றும் இல்லை. வைகை வளவனாகப் பின்னி எடுக்கிறார் சோ. முக்கியமாக இப்படத்தில் எம்.ஜி.ஆரை நிறைய தாக்குகிறார்.

சோ இதில் அப்பாயிசம் என்ற கொள்கையை அறிமுகப்படுத்துகிறார். அது என்னவென புரியவில்லையே என்று ஒருவர் சொல்ல, அதுதான் அப்பாயிசம் என்கிறார் சோ. நியாயம், நேர்மை, நாணயம் என தி.மு.க.வின் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டையும் கிண்டலடிக்கிறார். தம்பியாக வரும் சோ அடிக்கடி அண்ணா என்று அழைக்கிறார். ஏன்டா அண்ணன் பெயரைக் கெடுக்கிறாய் என அண்ணனாக வரும் சோ கிண்டலடிக்கிறார். இப்படி படத்தில் நிறைய அரசியல் வசனங்கள்.  குறிப்பாக,மேடையில் அவர் பேசும் வசனங்கள் ஏ க்ளாஸ். சந்தேகமின்றி இது சோவுடைய முக்கியமான படம். பட்டையைக் கிளப்புகிறார்.

சோவுக்கு ஜோடியாக மனோரமாவும் புஷ்பமாலாவும் நடித்துள்ளனர்.

சிவாஜியைத் தவிர, கே.ஆர்.விஜயா, ஸ்ரீகாந்த், பிரமிளா, வி.கே.ராமசாமி, மேஜர் சுந்தர்ராஜன், மனோகர், சுருளி ராஜன் போன்றோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

எம்.எஸ். இசையில் பாடல்கள் எல்லாம் சூப்பர்.

Friday, April 27, 2018

சிவகாமியின் செல்வன்

புகழ் பெற்ற "ஆராதனா" என்ற இந்திப் படத்தின் ரீமேக். 26 ஜனவரி 1974யில் வெளிவந்த இப்படத்தை இயக்கியவர் சி.வி.ராஜேந்திரன்.

சோவுக்கு இதில் சிகாமணி என்ற பாத்திரம். கதாநாயகி வீட்டில் வேலையாளாக வருகிறார். கௌரவ வேடம். நகைச்சுவை சுமார் ரகம்.

விமானப் படையில் வேலை செய்யும் சிவாஜி வாணிஸ்ரீயைக் காதலிக்கிறார். திருமணத்துக்கு முன்பே வாணிஸ்ரீ கர்ப்பம் தரிக்கிறார். ஒரு விபத்தில் சிவாஜி இறந்து விட, அவருடைய கனவான மகனையும் விமானப் படையில் சேர்க்கவேண்டும் என்பதை நிறைவேற்ற வாணிஸ்ரீ பாடுபடுகிறார். மகனை வேறொரு வீட்டில் வளர்க்கும் சூழ்நிலை. ஒரு கட்டத்தில் தம்மிடம் தவறாக நடந்து கொள்ளும் மனோகரை அவருடைய மகனான சிறுவன் கொன்று விடுகிறான். அந்தப் பழியைத் தாமே ஏற்றுக் கொண்டு ஜெயில் சென்று பல வருடங்கள் பின் திரும்புகிறார் வாணிஸ்ரீ. அவர் எப்படி தம்முடைய மகனைச் சந்தித்தார், அவருக்கு வாணிஸ்ரீதாம் தம்முடைய தாய் என்ற உண்மை எப்படி விளங்கியது என்பது மீதி கதை.

வாணிஸ்ரீயுடைய மகனாகவும் சிவாஜியே நடித்துள்ளார். இப்படத்தைப் பொறுத்தவரை வாணிஸ்ரீயுடைய நடிப்புதான் எல்லாரையும்விடச் சிறப்பாக உள்ளது. அவருடைய கதாபாத்திரத்துக்கே முக்கியத்துவம். ஏ.வி.எம்.ராஜன், ஸ்ரீகாந்த், எம்.என்.ராஜம், லதா, ரங்காராவ் போன்றோரும் படத்தில் நடித்துள்ளனர்.

நல்ல படம்; அங்கங்கே சில குறைகளும் உண்டு. எம்.எஸ். விஸ்வநாதன் இசையில் பாடல்கள் நன்றாக உள்ளன.

Tuesday, April 10, 2018

அன்பைத் தேடி

முதல் காட்சி சோவுடைய வசனத்தில் ஆரம்பித்து, முடியும்போதும் சோ நகைச்சுவையில் முடியும். முக்தா சீனிவாசன் படம் என்பதால் சோவுக்கு முழு சுதந்திரம். அவர் தம்முடைய பாணியில் அரசியல்வாதிகளை நன்றாகக் கிண்டலடிக்கிறார். கிட்டத்தட்ட படம் முழுக்க வரும் சோவுடைய நகைச்சுவை சற்று கூட அலுப்பு தட்டவில்லை. விருந்தாளி மாமா என எல்லாரும் கூப்பிடுவார்கள், அவர் ஒரு விருந்தாளியாக சிவாஜி வீட்டில் வந்து உட்கார்வதால். ஆனால் அவர் கடைசி வரை தங்களுக்கு என்ன உறவு என அந்த வீட்டில் உள்ளவர்களுக்குப் புரியாது.

பிற்பகுதி சற்று சுமார் என்றாலும் மொத்தத்தில் படம் பார்க்கும்படி உள்ளது. சிவாஜியின் உணர்ச்சிகரமான நடிப்பும், ஜெயலலிதாவின் அருமையான நடிப்பும் படத்துக்கு மிகப் பெரிய பலம். பகல் கனவு கண்டு தன்னையே மறந்து எதையாவது போட்டு உடைத்து விடுவார் சிவாஜி. அதனால் அவர் எந்த வேலையிலும் நிலையாக இருக்க மாட்டார். ஒரு கட்டத்தில் இந்த கனவால் தம்முடைய அக்காள் மகளைத் தொலைத்து விடுவார். அப்பெண் இறந்து விட்டாள் என எல்லாரும் நம்பி இவரை ஒதுக்கிவிடுவார்கள். ஜெயலலிதாவைத் திருமணம் செய்து கொண்டு பிறக்கும் குழந்தையை அக்காளுக்குக் கொடுத்து விடும் முடிவுடன் சிவாஜி இருப்பார். அதற்கிடையே வில்லனால் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் குழந்தை கிடைத்து விட, சுபமாகப் படம் முடியும்.

சிவாஜியுடைய அக்காவாக விஜயகுமாரி, அவருடைய கணவராக மேஜர் சுந்தர்ராஜன், வில்லனாக மனோகரும் ஸ்ரீகாந்தும், நகைச்சுவைக்கு சோவும் மனோரமாவும் நடித்துள்ளனர். 

Wednesday, March 28, 2018

மனிதரில் மாணிக்கம்

சி.வி.ராஜேந்திரன் இயக்கத்தில் 7 டிசம்பர் 1973யில் வெளிவந்த இப்படத்தில் சோவுக்கு மிகச் சிறிய வேடம். வேலு என்ற கேரக்டர்; ஹீரோவுக்கு நண்பர்; மெட்ராஸ் பாஷை பேசுகிறார். சோ, மனோரமா, சுருளி ராஜன் எனப் பல நகைச்சுவை நடிகர்கள் இருந்தும் இப்படம் பெயரளவிலும் நம்மைச் சிரிக்க வைக்கவில்லை. எல்லாரும் வீணடிக்கப்பட்டுள்ளனர்.

ஏ.வி.எம்.ராஜன் தான் நாயகன். சிவாஜி முக்கிய பாத்திரத்தில் வருகிறார். அவரும் தமாஷாக நடிக்க முயல்கிறார்; ஆனால் நமக்குத் தான் சிரிப்பு வரவில்லை. நாயகனின் காதலி என்பதால் பிரமீளாவைக் கதாநாயகி எனச் சொல்லலாம். மேஜர் சுந்தர்ராஜன், எம்.என்.ராஜம் எனப் பலரும் படத்தில் உண்டு. வில்லனாக மனோகர்.

மனோகரும் ராஜனும் பெரிய திருடர்கள். போலீஸ்காரர் மேஜர் அவர்களைச் சுற்றி வளைக்கிறார். தப்பிச் செல்லும் ராஜனிடம் சந்தர்ப்பவசமாக மேஜரின் சிறு குழந்தை சிக்கி விடுகிறது. மறைந்து வாழும் ராஜன் அதை வளர்க்கிறார். மனம் திருந்தி நல்ல முறையில் வாழ்கிறார். கடைசியில் வில்லனுடன் சண்டையிட்டு உடல் பலவீனமடைகிறார். ஒரு கட்டத்தில் குழந்தை மேஜரிடம் சென்று சேர்ந்து விடுகிறது. கடைசியில் வில்லன் அதைக் கடத்த ராஜன் அவனிடம் சண்டையிட்டு அதை மீட்கிறார். ஆனால் போலீஸ் அவரைச் சுட்டு வீழ்த்தி விடுகிறது.

சுமாரான கதை; மிகச் சுமாரான திரைக்கதை; உணர்ச்சியைத் தூண்டாத வசனங்களும் காட்சி அமைப்புகளும்; வீணடிக்கப்பட்ட திறமையான நடிகர்கள். நிறைய லாஜிக் ஓட்டை; மொத்தத்தில் இது ஒரு தேவையற்ற படம். 

Friday, February 9, 2018

பொன்னூஞ்சல்

சி.வி.ராஜேந்திரன் இயக்கத்தில் 15 ஜூன் 1973யில் வெளியான இப்படத்தில் சிங்காரம் என்ற அசட்டுக் கேரக்டர் சோவுக்கு. தங்கவேலு அப்பா; மனோரமா ஜோடி; வில்லனாக வரும் நம்பியாரின் கையாளாக இருந்து கடைசியில் நாயகனுக்கு உதவும் கதாபாத்திரம். நகைச்சுவை சொல்லும் படியாக இல்லை; பல காட்சிகள் சுத்த அசடு வடிதல். சோ தவிர்த்திருக்க வேண்டிய படமிது.

சிவாஜி ஹீரோ. எஸ்.வி. சுப்பையாவுடைய  மகன். மாமன் சஹஸ்ரநாமத்துடைய மகளான உஷா நந்தினியைக் காதலிக்கிறார். எல்லாம் கை கூடி திருமணம் நடக்கும் சமயத்தில் சுப்பையா பழைய பகையை மனத்தில் வைத்துக்கொண்டு வர தட்சிணை கேட்கிறார். அதைத் தர முடியாததால் இரண்டு குடும்பங்களுக்குமிடையே இடைவெளி விழுகிறது. நம்பியார் செய்யும் சதியால் முத்துராமனைத் திருமண செய்து கொள்கிறார் நாயகி. அவர்கள் வழக்கப்படி நாத்தனாரே தாலி கட்ட வேண்டும். அந்தத் தாலி சிவாஜி வாங்கியது எனத் தெரிந்தவுடன் சிவாஜியே நாயகியை மணந்தவர் என எல்லாரும் ஒப்புக் கொள்கின்றனர். க்ளைமாக்சில் நம்பியாரை முத்துராமன் கொலை செய்து விடுகிறார். காந்திமதி, வி. கோபாலகிருஷ்ணன், சி.ஐ.டி. சகுந்தலா, உசிலை மணி போன்றோரும் நடித்துள்ளனர்.

சுமாரான படம். நம்ப முடியாத திருமண சடங்குகள். ஆகாயப் பந்தலிலே பாடல் மட்டும் சூப்பர். பல நடிகர்கள் இருந்தும் சக்தி கிருஷ்ணசாமியின் வசனம் இருந்தும் படம் ரசிக்கும்படியாக எடுக்கப்படவில்லை. 

Wednesday, October 4, 2017

தவப் புதல்வன்

முக்தா சீனிவாசன் இயக்கிய இப்படம் 26 ஆகஸ்ட் 1972யில் வெளியானது. கதாநாயகன் சிவாஜியுடைய நண்பனாக ஜேம்ஸ் என்ற கதாபாத்திரத்தில் சோ நடித்துள்ளார். அசட்டுப் பாத்திரம்; மனோரமா ஜோடி. நாயகனுக்கு உதவ சோ போடும் திட்டங்கள் எல்லாம் நாயகனுக்குத் தொல்லைகள் தரும். ரசிக்கும்படியான நகைச்சுவை; ஆனால் சோவின் ஆகச் சிறந்த படம் எனச் சொல்ல முடியாது.


சிவாஜி பணக்காரர். பண்டரிபாயுடைய மகன்; இசைக்கலைஞர். அவருடைய முறைப் பெண் கே.ஆர்.விஜயா. வி.கோபாலகிருஷ்ணன்-காந்திமதி தம்பதியினருடைய மகள்; டாக்டர். இருவரும் திருமணம் செய்து கொள்ளும் தறுவாயில் சிவாஜிக்கு மாலைக்கண் நோய் வந்து விடுகிறது. அதை நோயாளியான தாயிடம் இருந்து மறைக்க, அதைப் பயன்படுத்தி ஹோட்டலில் நாட்டியமாடும் சகுந்தலாவும் அவருடைய குடிகார அண்ணன் வாசுவும் சதி செய்கின்றனர். பல சோதனைகளுக்குப் பிறகு சதியிலிருந்தும் நோயிலிலுருந்தும் சிவாஜி விடுபடுவதே மீதி கதை.

Monday, August 28, 2017

அருணோதயம்

முகத்தை மறைத்தபடி துக்ளக் பத்திரிகை. உடனே ஒரு வசனம் - "இதுலே எல்லாரையும் திட்டி எழுதியிருக்காங்களே. நாம இதைப் படிச்சா நம்மளையும் எல்லாரும் திட்டுவாங்க. " பத்திரிகை தூக்கி எறியப்படுகிறது. இப்படித் தான் சோவின் கேரக்டர் படத்தில் அறிமுகமாகிறது. 5 மார்ச் 1971யில் வெளியான இப்படத்தை முக்தா சீனிவாசன் இயக்கியுள்ளார். டாக்டர் சிரஞ்சீவி என்ற கேரக்டரில் சோ நடித்துள்ளார்.

சிவாஜி படத்தின் நாயகன். அவருடைய அம்மா அஞ்சலி தேவி; தங்கை லட்சுமி. சிவாஜியுடைய மேலதிகாரிகளாக வி.எஸ்.ராகவனும் அவருடைய மகன் முத்துராமனும். முத்துராமனை லட்சுமி காதலிக்க, முத்துராமன் தங்கை சரோஜாதேவியை சிவாஜி காதலிக்கிறார். முத்துராமனுக்குத் தங்கையை மணமுடிக்க சம்மதிக்கிறார் சிவாஜி. அப்போது முத்துராமனைப் பற்றிய ஒரு ரகசியத்தைக் கண்டுபிடிக்கிறார். அது அவர் குடிகாரர் என்பதாகும். நண்பன் சோவின் யோசனையால் தாம் பெரிய குடிகாரராகவும், குடியால் தமக்குப் பெரிய வியாதி இருப்பதாகவும் நடிக்கிறார். அதை உண்மையென நம்பி முத்துராமன் குடியை விடுகிறார். ஆனால் இந்தப் பொய் படிப்படியாக சிவாஜிக்குக் கொலைகாரன் பட்டத்தையும், திருடன் பட்டத்தையும் வாங்கிக் கொடுக்கிறது. எல்லாரும் இவரை வெறுக்கின்றனர். ஒரு கட்டத்தில் இவர் முதலாளியின் வாரிசாகிறார். பல சம்பவங்களுக்குப் பிறகு எப்படி உண்மையை நிலை நாட்டுகிறார் என்பதே மீதி கதை.

சிவாஜி ஓவர் ஆக்டிங். சரோஜா தேவி குண்டாக ஆடாமல் அசையாமல் வருகிறார். அவர் சிவாஜிக்கு ஜோடி; நாயகி இல்லை. சோ மனோரமா மற்றும் நீலுவுடன் தனி டிராக்கில் காமெடி செய்கிறார். ரசிக்கும்படியாக இருந்தாலும் ஓஹோவென இல்லை. நீலு ரௌடியாக நல்ல நடிப்பு. சோவுக்கு முக்கிய வேடம்; ஆனால் அவர் எழுதிய கதை இல்லை; அவருடைய பலம் வசனங்கள். அது இதில் சொல்லிக் கொள்ளும்படி இல்லை.


இதைத் தவிர வி.கோபாலகிருஷ்ணன், குல தெய்வம் ராஜகோபால், வெண்ணிறாடை மூர்த்தி, கண்ணன், தேங்காய் சீனிவாசன் எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளம் படத்தில்.

Sunday, August 13, 2017

சிவாஜி நாயகன் - சோ வில்லன்

விளையாட்டுப் பிள்ளை - சிவாஜி நாயகனாக நடித்த படத்தில் சோ வில்லனாக நடித்த படம் இது. அடிதடி வில்லன் இல்லையென்றாலும் வில்லன்தான், நகைச்சுவை வில்லன்.

பிப்ரவரி 1970யில் வெளிவந்த இப்படம் கொத்தமங்கலம் சுப்பு எழுத்தில், எஸ்.எஸ்.வாசன் திரைக்கதையில், .பி.நாகராஜன் இயக்கத்தில் வெளியான அருமையான படம். கே.வி.மஹாதேவன் இசையில் "ஏரு பெருசா" உட்பட சில நல்ல பாடல்கள் படத்தில் உண்டு. சிவாஜி, பத்மினி, சோ, வி.எஸ்.ராகவன், ராகவனுடைய மனைவியாக நடிப்பவர் (பெயர் தெரியவில்லை), டி.எஸ்.பாலையா, மனோரமா, காஞ்சனா, சிவகுமார் என எல்லா நடிகர்களும் பாத்திரம் அறிந்து மிகையின்றி நடித்துள்ளனர்.

படிக்காத சிவாஜியும்அந்த கிராமத்து பண்ணையார் வி.எஸ்.ராகவனுடைய மகளான பத்மினியும் பரஸ்பரம் காதலிக்கிறார்கள். சிவாஜியுடைய பெரியப்பாவான டி.எஸ்.பாலையா நடுவில் புகுந்து சில குழப்பங்கள் ஏற்படுத்த, சிவாஜியும் பத்மினியும் ராகவன் சம்மதமின்றி கல்யாணம் செய்து கொள்கின்றனர். பாலையா சூழ்ச்சியால் அவர்களை ஊரும் குடும்பமும் ஒதுக்கி வைக்கின்றனர். இருந்த வீடும் பறிபோகிறது.

சில வருடங்கள் கழித்து, பண்ணையார் மனம் மாறி பேரன் பெயரில் சொத்தை எழுதி வைத்துவிட்டு இறந்து போகிறார். இன்னும் சில வருடங்கள் கழித்து, ஒரு நிகழ்ச்சியில், சமஸ்தான அரசன் ராமதாஸ் உயிரை மதம் பிடித்த யானையிடம் இருந்து காப்பாற்றுகிறார் சிவாஜி. அதனால் இளவரசி காஞ்சனா நட்பு கிடைக்கிறது. அதை பாலையாவுடைய மகனான சோ தவறான கண்ணோட்டத்தில் சித்தரிக்கிறார். அதை பத்மினியும், அவருடைய மகனாக வரும் சிவகுமாரும் நம்புவதால், சிவாஜி குடும்பத்தில் குழப்பம் ஏற்படுகிறது. கடைசியில் சிவாஜி உயிரைப் பறிக்க சோ செய்யும் முயற்சியும் தோல்வியில் முடிய, படம் சுபமாக முடிகிறது.

கொஞ்சம் கூட அலுக்காத திரைக்கதை; அழுகை கிடையாது. அழகான பத்மினி; வீரமான சிவாஜி; இளமையான காஞ்சனா; சிரிப்புக்கு பாலையாவும் சோவும் - இப்படி எல்லா விஷயங்களும் ஒருங்கே அமைந்த சூப்பர் படம் இது.


வேலு என்பது சோவுடைய கதாபாத்திர பெயர். மனோரமா ஜோடி. நாடக நடிகராக வருகிறார். பிற்பாதியில் சிவாஜிக்கு எதிராக சூழ்ச்சி செய்யும் வில்லனாக மாறுகிறார். கூர்மையான வசனங்கள் இல்லை என்றாலும், சிரிப்பைத் தூண்ட கூடிய வசனங்கள் மற்றும் நடிப்பு.

எங்க மாமா

14 ஜனவரி 1970ல் வெளியான ''எங்க மாமா" படம், முழுக்க முழுக்க சிவாஜியுடைய படம். படம் முழுக்க அவர் அல்லது அவரைச் சுற்றியே கதை நகர்கிறது. படத்தில் நட்சத்திர பட்டாளமே இருந்தாலும் சிவாஜிக்கு முன்பு யாரும் எடுபடவில்லை.

.சி.திருலோகசந்தர் இயக்கத்தில் வெளி வந்த படம். எம்.எஸ்.வி.யின் இசையில் எல்லாப் பாடல்களும் படத்தில் சூப்பர்.

ஞானம் என்ற கதாபாத்திரத்தில் சோ. போக்கிரியாக வருகிறார். நகைச்சுவை இப்படத்தில் சுமார் தான். பெண் வேடத்திலும் சாமியார் வேடத்திலும் தோன்றி நம்மைச் சிரிக்க வைக்க சோ செய்யும் முயற்சிகள் கை கூடவில்லை.

முறை மாமனான பாலாஜியைத் திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தில் தாய் தந்தை இல்லாத ஜெயலலிதா பட்டணம் வருகிறார். ஆனால் மைனரான பாலாஜி அவரை நிராகரித்து விடுகிறார். தற்கொலைக்கு முயற்சிக்கும் ஜெயாவை சிவாஜி தமது வீட்டுக்கு கூட்டி வருகிறார். அநாதை இல்லம் நடத்த தேவைப்படும் பணத்தை பாலாஜியிடமிருந்து வாங்கி கொடுக்க வேண்டும் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஜெயாவை நவநாகரீகப் பெண்ணாக மாற்றும் சிவாஜி, பாலாஜியை  அவர் மீது மையல் கொள்ள வைக்கிறார்ஜெயாவுக்கு பாலாஜி மீது வெறுப்பும் சிவாஜி மீது காதலும் ஏற்படுகிறது. இதற்கிடையே பாலாஜி செய்யும் சில சூழ்ச்சிகள், அவற்றிலிருந்து மீண்டு எப்படி சிவாஜி ஜெயாவை மணந்தார் என்பதே கதை.


வெண்ணிறாடை நிர்மலா, தேங்காய் சீனிவாசன், வி.கே.ராமசாமி, கருணாநிதி, டைப்பிஸ்ட் கோபு, எஸ்.என்.லட்சுமி, சி.கே.சரஸ்வதி என பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். கிரிஜா சோவுடைய காதலியாக வருகிறார்

Saturday, August 12, 2017

1960களில் சோ

1950களில் சோவின் நாடகப் பிரவேசம் நடந்தது. ஆனால் 1960களில் தான் அவர் மிகப் பெரிய நாடக ஆசிரியராக அறியப்பட்டார்.

சோ நடித்த சில நாடகங்கள் 

பெற்றால் தான் பிள்ளையா? - 1961
சொல்லித் தெரிவதில்லை (1962)
அண்டர் செகரட்டரி (Under Secretary) - 1964
தி ஹோல் ட்ரூத் (The Whole Truth)
டீ ஹவுஸ் ஆப் தி ஆகஸ்ட் மூன் (Tea House of the August Moon) - 1969

 1960களில் சோவின் நாடகங்கள்

1) Wait and See - 1961
2) What for? - 1962
3) கோ வாடிஸ் (Quo Vadis?) - 1962
4) Mind is a Monkey - 1963
5) சாதல் இல்லையேல் காதல் - 1964 (சோ எழுதிய நாடகம்; மேடையேற்றவில்லை )
6) சம்பவாமி யுகே யுகே - 1965 (இது சோ இயக்கிய முதல் நாடகம்)
7) Madras by Night - 1966
8) Is God Dead? - 1967
9) சரஸ்வதியின் செல்வன் - 1967
10) முகமது பின் துக்ளக் - 1968

1960களில் சோவின் திரைப்படங்கள் 
1) பார் மகளே பார்
வெளியான தேதி - 12-July-1963
இயக்குனர்  - பீம்சிங்
நாயகன் - சிவாஜி கணேசன்
நாயகி - விஜயகுமாரி;புஷ்பலதா
கதாபாத்திரம் பெயர் - மாடசாமி
ஜோடி - மனோரமா 
மேல் விபரம் - முதல் படம் 


2) நடு இரவில்
வெளியான தேதி - 1970
இயக்குனர்  - வீணை எஸ். பாலசந்தர் 
நாயகன் - மேஜர் சுந்தர்ராஜன் 
நாயகி - சௌகார் ஜானகி 
கதாபாத்திரம் பெயர் - மௌஸ்
ஜோடி -  பெயர் தெரியவில்லை 
மேல் விபரம் - தாமதமாக வெளிவந்தது; இரண்டாவது படம் 


3) தட்டுங்கள் திறக்கப்படும்
வெளியான தேதி - 17 ஜூன் 1966
இயக்குனர்  - சந்திரபாபு
நாயகன் - சந்திரபாபு
நாயகி - சாவித்திரி
கதாபாத்திரம் பெயர் - ராகவன் 
ஜோடி - கிடையாது 


4) மறக்க முடியுமா?
வெளியான தேதி - 12-Aug-1966
இயக்குனர்  - முரசொலி மாறன்
நாயகன் - எஸ்.எஸ்.ஆர்
நாயகி - தேவிகா
கதாபாத்திரம் பெயர் - ரத்னம்
ஜோடி - கிடையாது 
மேல் விபரம் - கலைஞர் வசனம்; சோவுக்கு சண்டைக்காட்சிசீரியஸ் கதாபாத்திரம் 


5) தேன் மழை 
வெளியான தேதி - 23 செப்டம்பர் 1966
இயக்குனர்  - முக்தா சீனிவாசன்
நாயகன் - ஜெமினி கணேசன்
நாயகி - கே.ஆர். விஜயா
கதாபாத்திரம் பெயர் - வாசுசிதம்பரம்
ஜோடி - சச்சு 
மேல் விபரம் - சோ கதை திரைக்கதையில் முதல் படம்; சோ இரட்டை வேடத்தில் முதல் படம் 



6) மனம் ஒரு குரங்கு
வெளியான தேதி - 14 ஜனவரி 1967
இயக்குனர்  - .டி.கிருஷ்ணஸ்வாமி
நாயகன் - .வி.எம்.ராஜன்
நாயகி - கே.ஆர்.விஜயா
கதாபாத்திரம் பெயர் - செல்லப்பா
ஜோடி - பெயர் தெரியவில்லை 
மேல் விபரம் - சோ கதை திரைக்கதைசோவுடைய நாடகம் படமாக்கப்பட்டது


7) ஆலயம்
வெளியான தேதி - 11 ஆகஸ்ட் 1967
இயக்குனர்  - திருமலை-மஹாலிங்கம்
நாயகன் - மேஜர் சுந்தர்ராஜன்
நாயகி - கிடையாது
கதாபாத்திரம் பெயர் - ரவி
ஜோடி - கிடையாது
மேல் விபரம் - கௌரவ வேடத்தில் நடித்த முதல் படமிது 


8) நினைவில் நின்றவள்
வெளியான தேதி - 1-Sep-1967
இயக்குனர்  - முக்தா சீனிவாசன்
நாயகன் - ரவிசந்திரன்
நாயகி - கே.ஆர்.விஜயா
கதாபாத்திரம் பெயர் - மனோதத்துவ டாக்டர் சம்பந்தம்
ஜோடி - மனோரமா  
மேல் விபரம் - சோ திரைக்கதை-வசனம் ;


9) பெண் என்றால் பெண்  
வெளியான தேதி - 7 டிசம்பர் 1967
இயக்குனர்  - ஆரூர்தாஸ்
நாயகன் - ஜெமினி கணேசன்
நாயகி - விஜயகுமாரி, சரோஜா தேவி 
கதாபாத்திரம் பெயர் - தெரியவில்லை
ஜோடி - தெரியவில்லை



10) நான் யார் தெரியுமா?
வெளியான தேதி - 8 டிசம்பர் 1967
இயக்குனர்  - வி.வி.ரமணன் 
நாயகன் - ஜெய்சங்கர்
நாயகி - தெரியவில்லை
கதாபாத்திரம் பெயர் - தெரியவில்லை
ஜோடி - தெரியவில்லை 

11) கற்பூரம்
வெளியான தேதி - 9 டிசம்பர் 1967
இயக்குனர்  - சி.என்.ஷண்முகம்
நாயகன் - .வி.எம்.ராஜன்
நாயகி - புஷ்பலதா
தெரியவில்லைஜோடி - மனோரமா  



12) கலாட்டா கல்யாணம் 
வெளியான தேதி - 12 ஏப்ரல் 1968
இயக்குனர்  - சி.வி.ராஜேந்திரன்
நாயகன் - சிவாஜி கணேசன்
நாயகி - ஜெயலலிதா 
கதாபாத்திரம் பெயர் - விட்டல்
ஜோடி - சச்சு 
மேல் விபரம் - ஜெயலலிதாவுடன் முதல் படம் 







13) நீலகிரி எக்ஸ்பிரஸ்
வெளியான தேதி - 14-ஏப்ரல் -1968
இயக்குனர்  - திருமலை மகாலிங்கம்
நாயகன் - ஜெய்சங்கர்
நாயகி - விஜயலலிதா
கதாபாத்திரம் பெயர் - ராவணன்
ஜோடி - கிடையாது  
மேல் விபரம் - சோ திரைக்கதை-வசனம் 


14) கண்ணன் என் காதலன்
வெளியான தேதி - 25-Apr-1968
இயக்குனர்  - .நீலகண்டன்
நாயகன் - எம்.ஜி.ஆர்
நாயகி - வாணிஸ்ரீ;
ஜெயலலிதா கதாபாத்திரம் பெயர் - பட்டாபி
ஜோடி - பெயர் தெரியவில்லை  
மேல் விபரம் - எம்.ஜி.ஆருடன் இணைந்து சோ நடித்த முதல் படம்



15) பொம்மலாட்டம்
வெளியான தேதி - 31-May-1968
இயக்குனர்  - முக்தா சீனிவாசன்
நாயகன் - ஜெய்சங்கர்
நாயகி - ஜெயலலிதா 
கதாபாத்திரம் பெயர் - ஜாம் பஜார் ஜக்கு
ஜோடி - மனோரமா   
மேல் விபரம் - சோ திரைக்கதை-வசனம்


16) குழந்தைக்காக
வெளியான தேதி - Jun 1968
இயக்குனர்  - பி.மாதவன்
நாயகன் - மேஜர் சுந்தர்ராஜன், ராமதாஸ், மனோகர்
நாயகி - கிடையாது 
கதாபாத்திரம் பெயர் - குடுகுடுப்பைக்காரன்
ஜோடி - கிடையாது   
மேல் விபரம் - சோ கௌரவ வேடம் 


17) கணவன்
வெளியான தேதி - Aug 1968
இயக்குனர்  - .நீலகண்டன்
நாயகன் - எம்.ஜி.ஆர்
நாயகி - ஜெயலலிதா
கதாபாத்திரம் பெயர் - பரதன்
ஜோடி - மனோரமா  
மேல் விபரம் - எம்.ஜி.ஆர். எழுதிய கதை 


18) டெல்லி மாப்பிள்ளை
வெளியான தேதி - 13 Sep 1968
இயக்குனர்  - தேவன்
நாயகன் - ரவிசந்திரன் 
நாயகி - ராஜஸ்ரீ
கதாபாத்திரம் பெயர் - சின்னதம்பி
ஜோடி - சச்சு   




19) ஒளி விளக்கு 
வெளியான தேதி - 20 Sep 1968
இயக்குனர்  - சாணக்யா
நாயகன் - எம்.ஜி.ஆர்
நாயகி - சௌகார் ஜானகிஜெயலலிதா
கதாபாத்திரம் பெயர் - கத்திரி
ஜோடி - கிடையாது  
மேல் விபரம் - சோ நடித்த முதல் வண்ணப்படம்


20) லட்சுமி கல்யாணம்
வெளியான தேதி - Nov 1968
இயக்குனர்  - ஜீ.ஆர். நாதன்
நாயகன் - சிவாஜி கணேசன்
நாயகி - கிடையாது
கதாபாத்திரம் பெயர் - சீனு
ஜோடி - கிடையாது  


21) மகிழம்பூ
வெளியான தேதி - 31 ஜனவரி 1969
இயக்குனர்  - வி.டி.அரசு 
நாயகன் - .வி.எம்ராஜன்
நாயகி - புஷ்பலதா
கதாபாத்திரம் பெயர் - பூங்காவனம்
ஜோடி - மனோரமா  



22) உலகம் இவ்வளவு தான்
வெளியான தேதி - 13 ஏப்ரல் 1969
இயக்குனர்  - வேதாந்தம் ராகவையா
நாயகன் - நாகேஷ்
நாயகி - கிடையாது
கதாபாத்திரம் பெயர் - வரதன்
ஜோடி - மனோரமா  
மேல் விபரம் - சுப்பு ஆறுமுகம் கதை - வசனம் ; நாகேஷ் கதாநாயகன்


23) அடிமைப் பெண்
வெளியான தேதி - May 1969
இயக்குனர்  - கே. சங்கர்
நாயகன் - எம்.ஜி.ஆர்
நாயகி - ஜெயலலிதா
கதாபாத்திரம் பெயர் - மந்திரவாதி
ஜோடி - கிடையாது  



24) ஆயிரம் பொய்
வெளியான தேதி - Jul 1969
இயக்குனர்  - முக்தா சீனிவாசன்
நாயகன் - ஜெய்சங்கர்
நாயகி - வாணிஸ்ரீ
கதாபாத்திரம் பெயர் - முத்து
ஜோடி - மனோரமா  
மேல் விபரம் - சோ கதை-வசனம்


25) நிறை குடம்
வெளியான தேதி - Aug 1969
இயக்குனர்  - முக்தா சீனிவாசன்
நாயகன் - சிவாஜி கணேசன்
நாயகி - வாணிஸ்ரீ
கதாபாத்திரம் பெயர் - கிரி
ஜோடி - மனோரமா  
மேல் விபரம் - திரைக்கதை-வசனம் சோசோ எழுதிய சீரியஸ் கதையிது 



26) கன்னிப் பெண்
வெளியான தேதி - 11 Sep 1969
இயக்குனர்  - ஏ. காசிலிங்கம்
நாயகன் - ஜெய்சங்கர்
நாயகி - வாணிஸ்ரீ, லட்சுமி
கதாபாத்திரம் பெயர் - துரைசாமி
ஜோடி - கிடையாது  


27) அன்னையும் பிதாவும்
வெளியான தேதி - 19 Sep 1969
இயக்குனர்  - கிருஷ்ணன் பஞ்சு
நாயகன் - .வி.எம்ராஜன்
நாயகி - வாணிஸ்ரீ
கதாபாத்திரம் பெயர் - மார்க்கண்டேயன்
ஜோடி - கிடையாது  
மேல் விபரம் - சோ வில்லனாக நடித்த முதல் படமிது


28) ஐந்து லட்சம்
வெளியான தேதி - Nov 1969
இயக்குனர்  - ஜிராமகிருஷ்ணன்
நாயகன் - ஜெமினி கணேசன்
நாயகி - சரோஜா தேவி
கதாபாத்திரம் பெயர் - ரங்கு
ஜோடி - மனோரமா 

1960களின் நாடகங்கள் மற்றும் திரைப்படங்களின் எண்ணிக்கை

எழுதிய நாடகங்கள் - 10
நடித்த நாடகங்கள் - 15க்கு மேல்; எண்ணிக்கை தெரியவில்லை
இயக்கிய நாடகங்கள் - 5
நடித்த திரைப்படங்கள் - 28
சீரியஸ் கதாபாத்திரத்தில் நடித்த படங்கள் - 1
சண்டைக்காட்சிகளில் நடித்த படங்கள் - 2
வில்லனாக நடித்த படங்கள் - 1
கௌரவ வேடத்தில் நடித்த படங்கள் - 2
சோ எழுதிய படங்கள் - 7
சோ நாடகம் படமாக்கப்பட்டது - 1
சோ இரட்டை வேடங்களில் நடித்த படங்கள் - 1

சோ நடித்த படங்களின் நாயகர்கள் 

ஜெய்சங்கர் - 5 படங்கள்
எம்.ஜி.ஆர் - 4 படங்கள்
சிவாஜி - 4 படங்கள்
ஏ.வி.எம்.ராஜன் - 4 படங்கள்
ஜெமினி - 3 படங்கள்
ரவிசந்திரன் - 2 படங்கள்
எஸ்.எஸ்.ஆர். - 1 படம்
நாகேஷ் - 1 படம்
மேஜர் சுந்தர்ராஜன் - 3 படங்கள்
சந்திரபாபு - 1 படம்
ராமதாஸ் - 1 படம்
மனோகர் - 1 படம்


சோ நடித்த படங்களின் நாயகியர் 

ஜெயலலிதா - 5 படங்கள்
வாணிஸ்ரீ - 5 படங்கள்
கே.ஆர். விஜயா - 3 படங்கள்
புஷ்பலதா - 3 படங்கள்
சௌகார் ஜானகி - 1 படம்
தேவிகா - 1 படம்
சாவித்திரி - 1 படம்
விஜயலலிதா - 1 படம்
சரோஜா தேவி - 2 படங்கள்
விஜயகுமாரி - 2 படங்கள்
லட்சுமி - 1 படம்
ராஜஸ்ரீ - 1 படம்

சோ நடித்த படங்களின் இயக்குனர்கள்

முக்தா சீனிவாசன் - 5 படங்கள்
ப.நீலகண்டன் - 2 படங்கள்
திருமலை மகாலிங்கம் - 2 படங்கள்
பீம்சிங் - 1 படம்
வீணை எஸ். பாலசந்தர் - 1 படம்
முரசொலி மாறன் - 1 படம்
சந்திரபாபு - 1 படம்
ஏ.டி.கிருஷ்ணஸ்வாமி - 1 படம்
சி.வி.ராஜேந்திரன் - 1 படம்
பி.மாதவன் - 1 படம்
சாணக்யா - 1 படம்
ஜீ.ஆர். நாதன் - 1 படம்
வேதாந்தம் ராகவையா - 1 படம்
கே. சங்கர் - 1 படம்
கிருஷ்ணன் பஞ்சு - 1 படம்
ஜி. ராமகிருஷ்ணன் - 1 படம்
வி.டி.அரசு - 1 படம்
சி.என்.ஷண்முகம் - 1 படம்
ஏ. காசிலிங்கம் - 1 படம்
வி.வி.ரமணன்  - 1 படம்
தேவன்  - 1 படம்
ஆரூர்தாஸ் - 1 படம்

சோவுடன் ஜோடியாக நடித்தவர்கள் 

மனோரமா - 10 படங்கள்
சச்சு - 3 படங்கள்

சோ நடித்த படங்கள் எண்ணிக்கை வருடவாரியாக 

1963 - 1
1966 - 4
1967 - 6
1968 - 9
1969 - 8