"வணக்கம் பல முறை சொன்னனேன்" உட்பட கண்ணதாசன் கற்பனையில் எம்.எஸ்.விசுவநாதன் இசையில் அருமையான பாடல்கள். சிவாஜியின் பிரமாதமான நடிப்பு, காஞ்சனாவின் சிறந்த நடிப்பு, நல்ல கதை என பல நல்ல அம்சங்களைக் கொண்ட இப்படம் கே.எஸ்.பிரகாஷ் ராவ் இயக்கத்தில் 14 ஜனவரி 1977யில் வெளியானது.
படம் நன்றாக இருந்தாலும் நகைச்சுவைக் காட்சிகள் நன்றாக அமையவில்லை. ராமு என்ற அசட்டு கேரக்டர் சோவுக்கு. அவருடைய தந்தையாக வி.கே.ராமசாமியும், சிற்றன்னையாக மனோரமாவும், மனோரமாவுடைய தந்தையாக தங்கவேலுவும் நடித்துள்ளனர். இவர்கள் எல்லாரும் வில்லத்தனமான காமெடியன்கள். இத்தனை பேர் இருந்தும் நமக்குச் சிரிப்பு வரவில்லை. சோவுடைய கேரக்டர் மிகவும் வீக். இப்படத்தை அவர் தவிர்த்திருக்கலாம். எம்.பானுமதி அவருக்கு ஜோடி.
சிவாஜி பெரிய பணக்காரர். அவருடைய தந்தை பகவதி; தாய் பண்டரிபாய். சிவாஜி படித்து கலெக்டராகிறார். அகிம்சை வழியில் நேர்மையாக இருக்கும் அவருக்குப் பல சோதனைகள் வருகின்றன. அவற்றையெல்லாம் அவர் எப்படி வெற்றி கண்டார் என்பதே கதை. அவருக்கு உறுதுணையாக காஞ்சனாவும், ஜோடியாக மஞ்சுளாவும் நடித்துள்ளனர். தீவிரவாதியாகவும் அவருடைய தம்பியாகவும் ஸ்ரீகாந்த் நடித்துள்ளார்.
படம் நன்றாக இருந்தாலும் நகைச்சுவைக் காட்சிகள் நன்றாக அமையவில்லை. ராமு என்ற அசட்டு கேரக்டர் சோவுக்கு. அவருடைய தந்தையாக வி.கே.ராமசாமியும், சிற்றன்னையாக மனோரமாவும், மனோரமாவுடைய தந்தையாக தங்கவேலுவும் நடித்துள்ளனர். இவர்கள் எல்லாரும் வில்லத்தனமான காமெடியன்கள். இத்தனை பேர் இருந்தும் நமக்குச் சிரிப்பு வரவில்லை. சோவுடைய கேரக்டர் மிகவும் வீக். இப்படத்தை அவர் தவிர்த்திருக்கலாம். எம்.பானுமதி அவருக்கு ஜோடி.
சிவாஜி பெரிய பணக்காரர். அவருடைய தந்தை பகவதி; தாய் பண்டரிபாய். சிவாஜி படித்து கலெக்டராகிறார். அகிம்சை வழியில் நேர்மையாக இருக்கும் அவருக்குப் பல சோதனைகள் வருகின்றன. அவற்றையெல்லாம் அவர் எப்படி வெற்றி கண்டார் என்பதே கதை. அவருக்கு உறுதுணையாக காஞ்சனாவும், ஜோடியாக மஞ்சுளாவும் நடித்துள்ளனர். தீவிரவாதியாகவும் அவருடைய தம்பியாகவும் ஸ்ரீகாந்த் நடித்துள்ளார்.