Showing posts with label Kamal. Show all posts
Showing posts with label Kamal. Show all posts

Monday, June 27, 2022

உன்னை சுற்றும் உலகம்

ஏப்ரல் 29, 1977யில் வெளிவந்த இப்படத்தை ஜி.சுப்பிரமணிய ரெட்டி இயக்கியுள்ளார்.

ஹீரோயின் சப்ஜெக்ட். ஜெயலலிதாதான் படத்தில் எல்லாமே. அவர் எப்படி தம்முடைய தம்பி தங்கைகளைப் படிக்க வைத்து பெரிய மனிதர்கள் ஆக்குகிறார், அவர்கள் எப்படி துரோகிகள் ஆகி பின் திருந்துகிறார்கள் என்பதே கதை. கமல் ஜெயாவுடைய தம்பியாக வருகிறார். தங்கையாக குட்டிப் பெண் ஸ்ரீ தேவி. 

சாவித்திரி, விதுபாலா, பிரமிளா, விஜயகுமார், சண்முக சுந்தரம், ஏ.வி.எம். ராஜன், எம்.ஆர்.ஆர்.வாசு, சண்முக சுந்தரம், அசோகன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஜெயாவுக்கு உதவும் வேடத்தில் சோ. கௌரவ நடிகர். சச்சு ஜோடி.

சோவுடைய வசனம் ஒன்று கவனிக்கத்தகுந்தது. 

"தங்கச்சிதான் சினிமால நடிச்சுடுச்சே. இனிமே எலக்சன்ல நின்னா ஓட்டு போடுவீங்க இல்ல?" 


Friday, December 7, 2018

காதலா காதலா

1990க்குப் பிறகு நடிக்காமல் இருந்த சோ, திரைத்துறையில் நடந்த சச்சரவில் கமலுக்கு ஆதரவு தெரிவிக்க அவருடைய படத்தில் தாமாகவே சான்ஸ் கேட்டு சோ நடித்த படம். இதுதான் அவர் நடித்த கடைசிப் படம். கெளரவ வேடம்தான். வக்கீல் வரதாச்சாரியாக அவர் தோன்றும் காட்சிகள் கலகல. ஆனால் படம் முழுக்கவே நகைச்சுவை தான் பிரதானம். சோ தோன்றும் காட்சிகளை விட நகைச்சுவையில் பிற நடிகர்கள் கலக்க அவர்களுக்கு நல்ல வாய்ப்பு.

கமல் - பிரபு தேவா கூட்டணியில் உருவான சிறந்த நகைச்சுவைப் படம். கதை என்று பெரிதாக எதுவுமில்லை. எம்.எஸ்.விஸ்வநாதன், வடிவேலு, நாகேஷ், கோவை சரளா, செளந்தர்யா, ரம்பா, கிரேசி மோகன், நீலு, மெளலி என அனைவருமே நம்மைச் சிரிக்க வைக்கின்றனர்.

இப்படம் வெளியான தேதி 14 ஏப்ரல் 1998. இயக்கியவர் சிங்கீதம் ஸ்ரீனிவாசராவ்.

Thursday, July 26, 2018

சக்கப் போடு போடு ராசா

எஸ்.பி.முத்துராமன் இயக்கம். வெளியான தேதி 15 செப்டம்பர் 1978.

சுமாரான படம். சோ-மனோரமா தோன்றும் காட்சிகள் மட்டுமே படத்தில் ரசிக்கும்படி உள்ளன. ஐயாசாமி என்ற பெயரில் நெல்லைத் தமிழில் சோ விளாசித் தள்ளுகிறார். படம் முழுக்க அவர் வருகிறார். அதுவே படத்தின் பலம். இதில் அரசியல் பேசவில்லை; உடல் மொழியில் சிரிக்க வைக்கவில்லை; நெல்லைத் தமிழில் கிண்டலாகவும், யதார்த்தமாகவும், அப்பாவித்தனமாகவும் பேசியே நம்மைச் சிரிக்க வைத்து விடுகிறார்.

ஜெய்சங்கர்-ஜெயசித்ரா  ஹனிமூனுக்காக ஒரு ஹோட்டலில் தங்குகிறார்கள். அதன் முதலாளி மேஜர் சுந்தர்ராஜன் கொள்ளைக்காரர். அவரை அவருடைய கையாளான ஸ்ரீகாந்த் கொன்று விடுகிறார். அதைப் பார்க்கும் ஜெயசித்ரா போலீசில் சொல்ல, நிரூபணம் இல்லாததால் வில்லன்கள் தப்பிக்கின்றனர். பின்பு அவர்களே தேங்காய் சீனிவாசனைக் கொன்று அப்பழியை ஜெயசித்ரா மீது சுமத்துகின்றனர். ஜெய்சங்கர் எப்படி உண்மையைக் கண்டுபிடித்து தம்முடைய மனைவியை மீட்டார் என்பதே மீதி கதை.

கமல்ஹாசன், படாபட் ஜெயலட்சுமி, சுருளி ராஜன், தங்கவேலு, கண்ணன், வெண்ணிறாடை மூர்த்தி, உசிலை மணி, எஸ்.எஸ்.சந்திரன், டைப்பிஸ்ட் கோபு, அசோகன் போன்றோரும் படத்தில் நடித்துள்ளனர். 

Friday, July 6, 2018

தேன் சிந்துதே வானம்

ரா சங்கரன் இயக்கத்தில் 14 மே 1975யில் வெளியான இப்படத்தில் சிவகுமார், ஜெயசித்ரா, கமல்ஹாசன், தங்கவேலு, மேஜர் சுந்தர்ராஜன், நீலு, மனோரமா, சுகுமாரி, ஸ்ரீகாந்த், ராணி சந்திரா  ஆகியோருடன் சோவும் நடித்துள்ளார்.

"உன்னிடம் மயங்குகிறேன் " உட்பட சில நல்ல பாடல்கள் இடம் பெற்ற படம்.

சிவகுமாரையும் ஜெயசித்ராவையும் காதலிக்க வைத்துத் திருமணம் செய்து வைக்கும் கேரக்டர் கமலுக்கு. பணக்கார ஜெயசித்ராவை மயக்கி தங்கள் வலையில் விழ வைக்க முயலும் முறை மாப்பிளைகளாக சோவும் ஸ்ரீகாந்தும். ஜெயசித்ரா தந்தையாக தங்கவேலு. நீலுவும் படத்தில் உண்டு.

சோவுக்குப் பாவாடை என்ற அசட்டு கேரக்டர். மனோரமா ஜோடி. படம் அறுவையோ அறுவை. சோ மனோரமா ஜோடியின் நகைச்சுவை சுமார் ரகம்.

Monday, June 25, 2018

அந்தரங்கம்

முக்தா சீனிவாசன் இயக்கத்தில் 27 நவம்பர் 1975யில் வெளியான இப்படம் சுமார் ரகம். கமல்ஹாசன் நாயகன். தீபா அறிமுகமான படம்.

மேஜர் சுந்தர்ராஜன் தம்முடைய மனைவியான சாவித்ரி மீது கோபம் கொண்டு வீட்டிலேயே ஒதுக்கி வைத்திருப்பார். தம்முடைய மகளான தீபா திருமணம் முடிந்தவுடன் சாவித்ரியை விவாக ரத்து செய்வது மேஜரின் முடிவு. இதைத் தெரிந்து கொண்ட தீபா தாம் காதலிக்கும் கமலைத் திருமணம் செய்ய மறுத்து விடுகிறார். கமல் காரணத்தைக் கண்டுபிடிப்பதோடு மேஜரையும் சாவித்ரியையும் சேர்த்தும் வைக்கிறார். இடையில் வில்லன் கூட்டத்துடன் சண்டையும் போடுகிறார்.

"ஞாயிறு ஒளி மழையில்" சிறந்த பாடல். வி.கோபாலகிருஷ்ணன், காத்தாடி ராமமூர்த்தி எனப் பலரும் நடித்துள்ளனர்.

சோ, தேங்காய் சீனிவாசன், சுகுமாரி, மனோரமா ஆகியோரின் கூட்டணியில் நகைச்சுவைக் காட்சிகள் பிரமாதமாக வந்துள்ளன. சோ தஞ்சாவூர் தங்கமணி என்ற கேரக்டரில் வருகிறார். தஞ்சாவூருக்கு வக்காலத்து வாங்கும் கேரக்டர். அலட்டாமல் அருமையான நடிப்பு. வெளுத்து வாங்குகிறார். 

Sunday, June 24, 2018

மேல் நாட்டு மருமகள்

ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் 10 மே 1975யில் வெளியான இப்படம் சுமார் ரகம். இதில் சோ கௌரவ வேடத்தில் சேட்டாக வருகிறார். அவருடைய மனைவியாக மனோரமா. அவரும் கௌரவ வேடம். தேவையற்ற படம். ஒரே காட்சி - அதுவும் மனத்தில் நிற்கவில்லை.

வெளிநாட்டுக்குப் படிக்க போகும் சிவகுமார் பிரென்ச் நாட்டு லாரன்சை மணந்து கொண்டு வருகிறார். அவரையே மணம் செய்து கொள்ள காத்திருக்கும் ஜெயசுதா அவருடைய தம்பி கமல்ஹாசனை மணந்து கொள்கிறார். வெளிநாட்டுப் பெண்மணி இந்திய கலாச்சாரப்படி வாழ, கமலும் ஜெயசுதாவும் மேல்நாட்டு நாகரீகத்தில் திளைக்கின்றனர். கடைசியில் அவர்கள் மனம் திருந்தி இந்திய கலாசாரத்தை அனுசரிப்பதாக கதை.

ஜுனியர் பாலையா, பூர்ணம் விஸ்வநாதன், வாணி கணபதி, உஷா உதூப், காந்திமதி, ராமதாஸ்  ஆகியோரும் நடித்துள்ளனர்.