Sunday, September 22, 2019

இறைவன் கொடுத்த வரம்

ரஜினிகாந்துடன் சோ சேர்ந்து நடித்த முதல் படமிது. 1978, 22 செப்டம்பரில் வெளியான இப்படத்தை ஏ பீம்சிங் இயக்கியிருந்தார்.

விஜயகுமாரும் ரஜினியும் நாயகர்கள். படாபட் ஜெயலட்சுமியும் சுமித்ராவும் நாயகிகள். ஸ்ரீகாந்த், எம்.பானுமதி போன்றோரும் நடித்திருந்தனர்.

சோவின் கேரக்டர் பெயர் ராஜா.

ரஜினிகாந்த் என்ற கதாபாத்திரத்தில்  ரஜினிகாந்த் நடித்துள்ளார். பல பெண்களை ஏமாற்றித் திருமணம் செய்யும் கேரக்டர். விஜயகுமாருடைய தங்கையான சுமித்ராவைத் திருமணம் செய்தவுடன் போலீஸ் அவரைக் கைது செய்துவிடுகிறார்கள். இதற்கிடையே வழுக்கைத் தலையுடன் இருக்கும் சோவை விருப்பம் இல்லாமல் திருமணம் செய்யும் சுமித்ராவுடைய தோழி ஜெயலட்சுமி இச்சம்பவத்துக்குப் பிறகு கணவனுடன் ஒட்டுதலாக இருக்கிறார். ஸ்ரீகாந்த் சுமித்ராவை மறுமணம் செய்கிறார். துரதிர்ஷ்டவசமாக அவர் விபத்தில் இறந்துவிடுகிறார். இதற்கிடையே விஜயகுமாருக்குத் திருமணம் நடக்க, கணவன் இழந்த செய்தியை மறைக்கும் சுமித்ரா ஒரு கட்டத்துக்குப் பிறகு உண்மையை வெளிப்படுத்துகிறார். சோவின் உதவியால் ஒரு கல்லூரியில் ஆசிரியையாக வேலைக்குப் போகிறார் சுமித்ரா. அங்கே மாணவராக ரஜினி சேர்கிறார். கடைசியில் உடல் நலமின்றி சுமித்ரா இறக்க, ரஜினி அவருக்குக் குங்குமமிட்டுச் சுமங்கலியாக அனுப்பி வைக்கிறார்.

பீம்சிங் இறந்த பிறகு வெளியான இப்படம், அவருடைய மோசமான படங்களில் ஒன்று.