Monday, December 9, 2019

சர்க்கார் புகுந்த வீடு

சோவுடைய அரசியல் நகைச்சுவை நாவலிது. எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் எழுதியுள்ளார்.

ஒரு வீட்டில் ஒண்டுக் குடித்தனத்தில் குடியிருக்கும் ஐந்து குடும்பங்களின் பொறுப்புகளை அரசு ஏற்றுக் கொள்வதால் ஏற்படும் குளறுபடிகளைப் பற்றிய கதை. சோவுடைய "சட்டையர்" அபாரம். அனைத்து அரசியல்வாதிகளையும் ரசிக்கும்படி கிண்டலடிக்கிறார். இந்தக் கதையைப் படிக்கும் நமக்கு இது சோவுடைய கற்பனையா அல்லது உண்மையில் நடந்ததா எனச் சந்தேகம் வருமளவுக்கு அரசியல்வாதிகளின் குணாதிசயங்களின் அடிப்படையில் சோ இதை எழுதியுள்ளார்.

அக்கால அரசியல் புரிந்தவர்கள் வயிறு வலிக்கச் சிரிக்க வேண்டிய அளவு சரக்குள்ள புத்தகம். ஆனால் சற்றே நீண்ட நாவல்.