Friday, October 12, 2018

ஆலயம்

பீம்சிங் திரைக்கதை; திருமலை-மஹாலிங்கம் இயக்கம். வெளியான தேதி 11 ஆகஸ்ட் 1967. "நெஞ்சே நீ வாழ்க" என்ற நாடகத்தின் படமாக்கம்.

மேஜர் சுந்தர்ராஜன் நாயகன். நேர்மையான அவர் குடும்பத்தில் பண நெருக்கடி ஏற்படுகிறது. லஞ்சம் வாங்கலாமா என அவர் யோசிக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகிறது. ஆனால் அவர் நேர்மை தவறாமல் இப்படி நினைப்பு வந்ததற்காக தம்முடைய வேலையை ராஜினாமா செய்து விட்டு அலுவலகத்திலேயே இறந்தும் விடுகிறார்.

முழு கதையும் ஆபீஸில் நகர்கிறது. அந்த ஆபீசில் வேலை செய்பவர்களாக நாகேஷ், மனோரமா, சோ, கருணாநிதி, வி.கே.ராமசாமி, ஸ்ரீகாந்த் போன்றோர் நடித்துள்ளனர். நாடகத்திலும் படத்திலும் டைப்பிஸ்டாக வரும் கோபுவுக்கு டைப்பிஸ்ட் என்ற பட்டப் பெயரே வந்து விட்டது. சோ ரவி என்ற கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். அவரும் இதே ஆபிசில் வேலை செய்கிறார். கௌரவ வேடம். படம் முழுக்க கலகல என்று நகர்ந்தாலும் நினைவு கொள்ளும்படி நகைச்சுவை இல்லை. படமும் ஓரளவுக்குச் சுமார் ரகமே. 

No comments:

Post a Comment