Thursday, March 7, 2019

ஜனதா நகர் காலனி

நாடகமாக எழுதாமல் டி.விக்காகவே சோ எழுதிய நகைச்சுவைத் தொடர் இது. 80களின் கடைசியில் தூர்தர்ஷனில் ஒளிபரப்பானது.

நகைச்சுவை, நையாண்டித்தனத்துக்குக் குறைவில்லாத கலகலப்பான தொடர். ஒவ்வொரு எபிஸோடிலும் ஏதாவது ஒரு பிரச்சினையில் காலனி மக்கள் மாட்டிக் கொண்டு தவிக்க, சோ பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க செய்யும் முயற்சிகளால் பிரச்சினை மென்மேலும் வளர, கடைசியில் அதிர்ஷ்டவசமாக நன்மையில் முடியும். தம்முடைய திட்டத்தால் தான் பிரச்சினைகள் தீர்ந்தது எனக் கூறி, "சுப்புணி இருக்க பயமேன் " என்ற வசனத்தைச் சோ சொல்வதுடன் எபிஸோடு முடியும்.

ஒன்றிரண்டு எபிசோடுகளில் அரசியலையும் சோ வம்புக்கிழுக்க மறக்கவில்லை. 

No comments:

Post a Comment