Sunday, October 8, 2017

உறவுகள் இல்லையடி பாப்பா

சோ எழுதி இயக்கிய இந்நாடகம் 1975யில் முதலில் மேடையேறியது. 1980களின் இறுதியில் தொலைக்காட்சித் தொடராகவும் வெளிவந்தது.

இது அரசியல் நாடகம் இல்லை. பெயருக்குக் கூட அரசியல் பற்றி மறைமுக வசனம் கூட கிடையாது. ஆனால் எப்படி சோவுடைய அரசியல் நாடகங்கள் 50 வருடங்கள் கழித்தும் இன்றைக்கும் ஏற்புடையதாக உள்ளனவோ, அதைப் போல இச் சமூக நாடகமும் இன்றைய காலக்கட்டத்துக்கும் பொருந்தக் கூடியதாக உள்ளது.

புண்ணியகோடி என்ற வயோதிகர் வேடத்தில் சோ. அவருடைய மகனாக நீலு; பேரனாக அம்பி. ஒற்றுமையாக இருக்கும் குடும்பத்தில் ஒரு பானை நிறைய தங்கக் காசுகள் கிடைத்தவுடன் அந்த ஒற்றுமை சீர் குலைகிறது. ஒருவர் மற்றவர் மீது சந்தேகம் கொள்கின்றனர்; பரஸ்பரம் துரோகம் செய்ய முயல்கின்றனர். குடும்பத்தில் நடக்கும் சில சாவுகளும் அலட்சியப்படுத்தப் படுகின்றன. கடைசியில் எல்லாருமே இறக்க, சோ பைத்தியம் பிடித்து அலைவதாக நாடகம் முடிகிறது.


பணத்தாசையின் தீமையையும், அதன் அசுர பலத்தையும் சோ நகைச்சுவையாக அதே சமயத்தில் அழுத்தமாகவும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment