Saturday, November 4, 2017

கன்னிப் பெண்

செப்டம்பர் 1969யில் வெளியான இப்படத்தை சத்யா மூவிஸ் தயாரித்துள்ளனர். . காசிலிங்கம்  இயக்குனர். ஜெய்சங்கர் நாயகன். வாணிஸ்ரீயும் லட்சுமியும் நாயகிகள். சோ துரைசாமி என்ற கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். வில்லன் வி.கே.ராமசாமியுடைய டிரைவர் சோ. வி.கே.ஆருடன் மனோகர், சுருளி ராஜன், தேங்காய் சீனிவாசன் எனப் பலரும் இருப்பார்கள். அவர்கள் மிகவும் சீரியஸாக பேசும் போது நடுவில் புகுந்து எதிர் வசனம் பேசி அவர்கள் காலை வருவதே படம் முழுக்க சோவின் வேலை. கடைசியில் வில்லன்களிடம் மாட்டிக் கொள்ளும் சிவகுமாரைக் காப்பாற்ற ஜெய்க்கு சோ உதவுகிறார்.


படம் ஓரளவுக்கு நன்றாக இருந்தாலும் நிறைய இடங்களில் லாஜிக் இடிக்கிறது. மேஜர் சுந்தரராஜன் நேர்மையான  போலீசுக்காரர். அவர் சுடப்பட்டு இறக்கிறார். அவர் இறக்கும் தறுவாயில் தம்முடைய மகனான ஜெய் போலீசில் சேர வேண்டுமென விருப்பம் தெரிவிக்கிறார். அவர் போலீசில் சேர்ந்ததால் அவருடைய தாய் மாமனான செந்தாமரை அவரைக் காதலிக்கும் தம்முடைய மகளான லட்சுமியை அவருக்குத் திருமணம் செய்து வைக்க மறுக்கிறார். வில்லன் மனோகரிடமிருந்து வாணிஸ்ரீயைக் காப்பாற்றுவதற்காக ஜெய் அவரைத் திருமணம் செய்து கொள்கிறார். மருமகளை மாமியாரான வரலட்சுமி கொடுமைப்படுத்துகிறார். ஜெய்யின் தங்கை நிர்மலா சிவகுமாரைக் காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறார். கோவில் நகைகளைத் திருடும் வி.கே.ஆர். கூட்டத்தாரின் சூழ்ச்சியால் சிவகுமார் கைது செய்யப்படுகிறார். கடைசியில் எல்லா உண்மைகைகளும் வெளியாகி, வில்லன்கள் கம்பியெண்ண, நாயகனும் அவரைச் சேர்ந்தவர்களும் மகிழ்ச்சியாக இருக்கும்படி சுபமாக முடிகிறது படம்.

No comments:

Post a Comment