1971யில்
மேடையேறிய இந்நாடகம் சென்னையில் 100 முறைக்கு மேல் மேடையேறியது.
மந்தைவெளி
மன்னாரு என்ற கதாபாத்திரம் காணும் பகல் கனவே இந்நாடகத்தின் கதை. ஓர் உலகில் நூறு பேர்;
தங்களுக்குள் வேலைகளையும் வசதிகளையும் சரி சமமாகப் பிரித்துக் கொண்டு சமூக வாழ்க்கை
வாழ்கின்றனர். அந்த நூறு பேரில் இருவருக்கு மட்டும் கொடுக்க வேலையில்லை. அதனால் அவர்கள்
மற்றவர்கள் செய்யும் வேலையைக் கண்காணிக்கும் புது வேலையை உருவாக்குகிறார்கள். யார்
அந்தப் பதவியைப் பிடிப்பது என்பதில் இருவருக்கும் போட்டி ஏற்படுகிறது. அது தேர்தலில்
போய் முடிகிறது. தேர்தலால் ஊழல் உருவாகிறது. தேர்தல் முடிந்து வென்றவனுக்கு உதவியவர்கள்
சில சலுகைககளை எதிர்பார்க்கின்றனர். அத்தகைய ஊழலைக் கண்டு பிடிப்பவர்களுக்கும் சலுகைகள்
கிடைக்கின்றன. இப்படியே படிப்படியாக குடியாட்சியின் அனைத்துக் கேடுகளும் அறிமுகமாகி,
பணமும் புழக்கத்துக்கு வந்து, அடிதடி கொலை என முடிகிறது.
தேர்தல்
முறை ஒரு சமூகத்தை எப்படிச் சீரழிக்கிறது என்பதைச் சோ தமது பாணியில் அழகாகக் காண்பிக்கிறார்.
No comments:
Post a Comment