Wednesday, March 28, 2018

மனிதரில் மாணிக்கம்

சி.வி.ராஜேந்திரன் இயக்கத்தில் 7 டிசம்பர் 1973யில் வெளிவந்த இப்படத்தில் சோவுக்கு மிகச் சிறிய வேடம். வேலு என்ற கேரக்டர்; ஹீரோவுக்கு நண்பர்; மெட்ராஸ் பாஷை பேசுகிறார். சோ, மனோரமா, சுருளி ராஜன் எனப் பல நகைச்சுவை நடிகர்கள் இருந்தும் இப்படம் பெயரளவிலும் நம்மைச் சிரிக்க வைக்கவில்லை. எல்லாரும் வீணடிக்கப்பட்டுள்ளனர்.

ஏ.வி.எம்.ராஜன் தான் நாயகன். சிவாஜி முக்கிய பாத்திரத்தில் வருகிறார். அவரும் தமாஷாக நடிக்க முயல்கிறார்; ஆனால் நமக்குத் தான் சிரிப்பு வரவில்லை. நாயகனின் காதலி என்பதால் பிரமீளாவைக் கதாநாயகி எனச் சொல்லலாம். மேஜர் சுந்தர்ராஜன், எம்.என்.ராஜம் எனப் பலரும் படத்தில் உண்டு. வில்லனாக மனோகர்.

மனோகரும் ராஜனும் பெரிய திருடர்கள். போலீஸ்காரர் மேஜர் அவர்களைச் சுற்றி வளைக்கிறார். தப்பிச் செல்லும் ராஜனிடம் சந்தர்ப்பவசமாக மேஜரின் சிறு குழந்தை சிக்கி விடுகிறது. மறைந்து வாழும் ராஜன் அதை வளர்க்கிறார். மனம் திருந்தி நல்ல முறையில் வாழ்கிறார். கடைசியில் வில்லனுடன் சண்டையிட்டு உடல் பலவீனமடைகிறார். ஒரு கட்டத்தில் குழந்தை மேஜரிடம் சென்று சேர்ந்து விடுகிறது. கடைசியில் வில்லன் அதைக் கடத்த ராஜன் அவனிடம் சண்டையிட்டு அதை மீட்கிறார். ஆனால் போலீஸ் அவரைச் சுட்டு வீழ்த்தி விடுகிறது.

சுமாரான கதை; மிகச் சுமாரான திரைக்கதை; உணர்ச்சியைத் தூண்டாத வசனங்களும் காட்சி அமைப்புகளும்; வீணடிக்கப்பட்ட திறமையான நடிகர்கள். நிறைய லாஜிக் ஓட்டை; மொத்தத்தில் இது ஒரு தேவையற்ற படம். 

No comments:

Post a Comment