Monday, March 26, 2018

வாயாடி

ஜெய்சங்கர், கே.ஆர்.விஜயா, வி.கே.ராமசாமி, பூர்ணம் விஸ்வநாதன், மனோகர், கண்ணன், சகஸ்ரநாமம், சுந்தர்ராஜன், மனோரமா, சுகுமாரி, ஏ.சகுந்தலா  ஆகியோருடன் சோவும் நடித்துள்ளார். மதுரை திருமாறன் இயக்குனர். 13 ஜனவரி 1973யில் வெளியான படமிது.

ஜெய்சங்கரும் சோவும் கல்லூரி நண்பர்கள். இருவருடைய பெயரும் ராஜா. அதைப் பயன்படுத்தி தேர்வில் வெற்றி பெறாத ஜெய் சோவுடைய சர்டிபிகேட்டை வைத்து தம்முடைய தந்தையான வி.கே.ராமசாமியை ஏமாற்றுவார். வீட்டில் வேலை செய்யும் கே.ஆர்.விஜயாவைக் காதலித்துக் கைப்பிடிப்பார். மனைவி உதவியில் படித்துப் பட்டம் பெறுவார். ஒரு கொலை கேசில் மாட்டிக் கொள்வார். விஜயா சாமர்த்தியமாக அவர் நிரபராதி என்பதை நிரூபிப்பார்.

சுமாரான படம். சோ நகைச்சுவை ஒரு முறை பார்த்து ரசிக்கலாம். அதற்கு மேல் சொல்வதற்கு எதுவுமில்லை.

No comments:

Post a Comment