Saturday, September 8, 2018

சாட்டை இல்லாத பம்பரம்

தலைப்புக்களவு படம் அவ்வளவு நன்றாக இல்லை. கதை நன்றாக இருந்தாலும் இயக்கம் சுமார் ரகம். அதனால் படமும் சுமாராகத் தான் உள்ளது. பாக்யராஜ் கதையில் ஈரோடு முருகேஷ் இயக்கிய படம். 1983 மே மாதம் வெளிவந்தது.

அப்பாவியான சிவகுமார் தைரியமான சரிதாவைத் திருமணம் செய்கிறார். திருமணத்துக்கு முன்பும் அதற்குப் பின்பும் அவர் எதிர் கொள்ளும் சவால்களும் சரிதா அதை எப்படி முறியடிக்கிறார் என்பதே கதை. க்ளைமாக்ஸ் மட்டும் பெரிய சொதப்பல். சரிதாவின் அருமையான நடிப்பு படத்துக்கு பலம்.

சோ சிவகுமாருடைய தந்தை தர்மலிங்கமாக வருகிறார். வில்லன் கேரக்டர்; க்ளைமாக்ஸில் மட்டும் நல்லவராக மாறி விடுகிறார். சொல்லும்படியான நடிப்போ, ரசிக்கும்படியான நகைச்சுவையோ இல்லை; இந்தப் படம் சோ தவிர்த்திருக்க வேண்டிய படம்.

சாமிக்கண்ணு, சங்கிலி முருகன், காந்திமதி, செந்தில் போன்றோரும் படத்தில் நடித்துள்ளனர். இளையராஜா இசை அமைத்திருந்தாலும் பாடல்கள் சுமார். 

No comments:

Post a Comment