Sunday, September 2, 2018

கடவுளின் தீர்ப்பு

ஜூலை 1981யில் வெளியான இப்படத்தை இயக்கியவர் விந்தன். விஜயபாபு, சங்கீதா என மிகவும் அறியப்படாதவர்கள் நாயகன்-நாயகி.

ஜாதிக் கொடுமைச் சாடும் கதைக்களம். ஆனால் நடிகர்களின் சுமார் நடிப்பு, சுமாரான இசை மற்றும் திரைக்கதை, பலமற்ற வசனம் ஆகிய காரணங்களால் படம் நன்றாக இல்லை. படத்தின் ஒரே பலம் சோ. அவர் குணச்சித்திர வேடத்தில் வருகிறார். சிற்சில இடங்களில் மறைமுகமாக அரசியலைச் சாடுகிறார். மற்றபடி அவருடைய வாடிக்கையான கேலி, கிண்டல் இதில் கிடையாது. இருந்தாலும் அவர் தோன்றுகின்ற காட்சிகள் பார்க்கும்படி இருக்கின்றன. அதற்குக் காரணம் அவருடைய நிறைவான நடிப்பு. சங்கரன் ஐயர் என்பது அவருடைய கதாபாத்திரப் பெயர். தாழ்த்தப்பட்ட குலத்தைச் சேர்ந்த எம்.பானுமதியைத் திருமணம் செய்து கொள்வதால், அவரை ஊரார் கோவிலில் பூஜை செய்வதிலிருந்து விலக்குகிறார்கள். ஜாதிக் கொடுமைக்கு எதிராக வாதிடும் வேடம் அவருக்கு.

மேஜர் சுந்தர்ராஜனுடைய மகளான சங்கீதா தாழ்த்தப்பட்ட குலத்தைச் சேர்ந்த விஜயபாபுவைக் காதலிக்கிறார். அதனால் விளையும் எதிர் வினைகளைத் தாண்டி அவர்கள் எப்படி ஒன்று சேர்ந்தார்கள் என்பதே கதை.

விஜயகுமாரி, காந்திமதி, சுருளிராஜன், ஸ்ரீகாந்த் போன்றோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். 

No comments:

Post a Comment