Monday, November 12, 2018

சட்டம் தலை குனியட்டும்

1972யில் மேடையேறிய இந்நாடகம் சோவின் சிறந்த அரசியல் நாடகங்களில் ஒன்று.

"ஒவ்வொரு எலெக்ஷன் நடக்கும் போதும் என் தொகுதியிலே போட்டி போடற எல்லாக் கட்சிக்காரர்களையும் பார்க்கும் போது எனக்கு ஒரு நிம்மதி வருது. எல்லாக் கட்சி கேண்டிடேட்சைப் பத்தியும் யோசிப்பேன். என்ன ஆனாலும் சரி இத்தனை பேர்லே ஒரே ஒரு ஆள்தானே ஜெயிக்க முடியும், எம்.பி. ஆக முடியும். பார்த்துக்கலாம்னு ஒரு நிம்மதி. அத்தனை கேண்டிடேட்சும் ஜெயிக்கற மாதிரி ஒரு சிஸ்டம் இருந்தா என்னை மாதிரி பொது மக்கள் கதி என்ன?"

இப்படி பல கூர்மையான யோசிக்க வைக்கக் கூடிய வசனங்கள். இந்த நாடகத்தின் மிகப் பெரிய பலம் இப்படிப்பட்ட வசனங்களே.

லட்சுமிபதி என்ற வக்கீல் பணம் இருப்பவன் (அரசியல்வாதி), பணமில்லாதவன் ஆகியோருக்கு இடையே சட்டத்தில் பாரபட்சம் இருக்கக் கூடாது. ஓர் ஏழை சந்தர்ப்ப வசத்தால் செய்த குற்றங்களுக்கு விரைவாகத் தண்டனை தீர்ப்பகிறது. ஆனால் ஓர் அரசியல்வாதி செய்த குற்றங்களுக்கு அவர் மீது விசாரணைக் கமிஷன் மட்டுமே வருகிறது. அதை அவர் எவ்வளவு தாமதப்படுத்த முடியுமோ, அவ்வளவு தாமதப்படுத்துகிறார். ஓர் இடைத் தேர்தலிலும் ஜெயித்து விடுகிறார். நேர்மையான லட்சுமிபதியையும் சாலை விபத்தில் கொன்று விடுகிறார். இத்தகையான சம்பவங்களால் சட்டமே தலை குனிய வேண்டும் என்பதே கதை முடிவு.

லட்சுமிபதியின் கதாபாத்திரம் இன்னும் சற்று கனமாக அமைத்திருக்கலாம். வந்தே மாதரம் வக்கீலைப் போல அலட்சியமாக நடந்து கொள்பவராக இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். அவரே புகழுக்காக முன்பு அந்த அரசியல்வாதிக்கு  ஆஜராவது அவருடைய கதா பாத்திரத்தை முழுமையாக நாம் ஆதரிப்பதைத் தடுக்கிறது. 

No comments:

Post a Comment