Friday, November 30, 2018

கண்ணத் தொறக்கணும் சாமி

தாசரி நாராயணராவின் மூலக்கதைக்குத் திரைக்கதை-வசனம் எழுதியவர் பாக்யராஜ். இளையராஜாவும் கங்கை அமரனும் இணைந்து இசையமைத்த படம். ஆர்.கோவிந்தராஜ் இயக்கம். 14 ஏப்ரல் 1986யில் வெளியானது.

சோவுக்கு வேணு என்ற கதாபாத்திரம்; சிவகுமாருடைய நண்பராக வருகிறார். படம் முழுக்க தோன்றும் பாத்திரம். ரஜனி சோவுக்கு ஜோடி. நகைச்சுவை ரசிக்கும்படி உள்ளது. அரசியல் வசனங்களையும் அவ்வப்போது சோ அள்ளி வீசி நம்மைச் சிரிக்க வைக்கிறார்.

வேலை தேடி பட்டணம் வரும் சிவகுமார், வீடு வாடகைக்குக் கிடைக்க ஜீவிதாவுடைய போட்டோவை ஒரு கடையிலிருந்து வாங்கி, தம்முடைய மனைவி எனப் பொய் சொல்லி வீட்டை மனோரமாவிடமிருந்து வாடகைக்கு வாங்குகிறார். இதன் காரணமாக ஜீவிதாவுடைய  திருமணம் நின்று போகிறது. அவர் சிவகுமார் வீட்டுக்கே வந்து அவருடைய மனைவி என உரிமை கொண்டாடுகிறார். சிவகுமார் எதுவம் செய்ய முடியாமல் தவிப்பதே படத்தின் மிகப் பெரிய பகுதி. வில்லன்கள்-சண்டை-ஜீவிதா சிவகுமார் சேர்ந்து வாழ்தல் எனச் சுபமாகப் படம் முடிகிறது.

நல்ல கலகலப்பான படம்; சிறிது கூட அலுக்கவில்லை.

No comments:

Post a Comment