பி.மாதவன் இயக்கத்தில் 1 மே 1987யில் வெளியான படம். சுவாரசியமான கதை, தேர்ந்த திரைக்கதை, நடிகர்களின் சிறப்பான நடிப்புடன் கூடிய நல்ல படம்.
இப்படத்தில் சோ, ராமசாமி என்ற பாத்திரத்தில் நடித்துள்ளார். ஜோடி கிடையாது. சிறிய வேடம். சிவகுமார் அலுவலகத்தில் வேலை செய்பவராக வருகிறார். நகைச்சுவை நன்றாக இருந்தாலும், ஓரிரண்டு காட்சிகளில் அரசியல் பேசினாலும், இது சோவுடைய பெயர் சொல்லும் படமில்லை. யார் வேண்டுமானாலும் நடித்திருக்கக் கூடிய வேடம்தான்.
மனைவியை இழந்த நாயகன் மகனுக்காக மறுமணம் செய்து கொள்கிறான். ஆனால் அவனுக்கு மணமான விஷயம் பிறகே அவளுக்குத் தெரிய வருகிறது. அவள் கோபித்துக் கொண்டு தாய் வீடு சென்று விட, இருவரையும் சேர்த்து வைக்க பிற கதாபாத்திரங்கள் செய்யும் முயற்சிகள் எப்படி வெற்றி பெறுகின்றன என்பதே மீதிக் கதை.
பாக்யராஜ் தனி ட்ராக்கில் வருகிறார். தனிக் கதை - அவரே எழுதியுள்ளார்; மூலக் கதையுடன் சற்றும் தொடர்பில்லை. நல்ல கலகலப்பான காட்சிகள்.
சிவகுமார், அம்பிகா, இளவரசி, ஜீவிதா, சோ, மனோரமா, செந்தில், பாக்கியராஜ் போன்ற பெரிய நட்சத்திரப் பட்டாளம் படத்தில் உண்டு. இளையராஜாவின் இசையில் சிறந்த பாடல்களும் உண்டு.
இப்படத்தில் சோ, ராமசாமி என்ற பாத்திரத்தில் நடித்துள்ளார். ஜோடி கிடையாது. சிறிய வேடம். சிவகுமார் அலுவலகத்தில் வேலை செய்பவராக வருகிறார். நகைச்சுவை நன்றாக இருந்தாலும், ஓரிரண்டு காட்சிகளில் அரசியல் பேசினாலும், இது சோவுடைய பெயர் சொல்லும் படமில்லை. யார் வேண்டுமானாலும் நடித்திருக்கக் கூடிய வேடம்தான்.
மனைவியை இழந்த நாயகன் மகனுக்காக மறுமணம் செய்து கொள்கிறான். ஆனால் அவனுக்கு மணமான விஷயம் பிறகே அவளுக்குத் தெரிய வருகிறது. அவள் கோபித்துக் கொண்டு தாய் வீடு சென்று விட, இருவரையும் சேர்த்து வைக்க பிற கதாபாத்திரங்கள் செய்யும் முயற்சிகள் எப்படி வெற்றி பெறுகின்றன என்பதே மீதிக் கதை.
பாக்யராஜ் தனி ட்ராக்கில் வருகிறார். தனிக் கதை - அவரே எழுதியுள்ளார்; மூலக் கதையுடன் சற்றும் தொடர்பில்லை. நல்ல கலகலப்பான காட்சிகள்.
சிவகுமார், அம்பிகா, இளவரசி, ஜீவிதா, சோ, மனோரமா, செந்தில், பாக்கியராஜ் போன்ற பெரிய நட்சத்திரப் பட்டாளம் படத்தில் உண்டு. இளையராஜாவின் இசையில் சிறந்த பாடல்களும் உண்டு.
No comments:
Post a Comment