Friday, December 7, 2018

குரு சிஷ்யன்

எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் 13 ஏப்ரல் 1988யில் வெளியான இப்படம் நகைச்சுவைக் காட்சிகள் நிறைந்த நல்ல படம். வில்லன் ரவிச்சந்திரனுடைய பார்ட்னராக சோ தோன்றுகிறார். நகைச்சுவை வில்லன் வேடம் அவருக்கு. எம்.ஜி.ஆர். மறைந்து நான்கு காட்சிகள் தேர்தலில் போட்டியிட்ட நேரம். சோவுக்குச் சொல்லவா வேண்டும்? அரசியலை வெளுத்து வாங்குகிறார். படம் முழுக்க அவர் யோசிக்கும் போது கைகளை உதய சூரியன், இரட்டை இலை மற்றும் கை சின்னங்களைக் காட்டி எதுவும் உருப்படாது என்பதை அவர் பாணியில் சைகை காட்டுவார். அரசியல் புரியும் ரசிகர்கள் இக்காட்சிகளைக் காணும் போதெல்லாம் வயிறு குலுங்கச் சிரிப்பார்கள்.

ரஜினிகாந்த் - பிரபு நாயகர்கள்; வழக்கமான பழி வாங்கும் மசாலாக் கதை; ஆனால் சண்டை, பாடல் காட்சிகளைத் தவிர நகைச்சுவையே பிரதானமாக உள்ளதால் எல்லாரும் விரும்பும் படமாக இது அமைந்து விட்டது. கெளதமி அறிமுகமான படம். சீதா, வினு சக்கரவர்த்தி, பாண்டியன், ராதாரவி, செந்தாமரை, மனோரமா போன்றோரும் படத்தில் நடித்துள்ளனர். இளையராஜா இசையில் அருமையான பாடல்கள். 

No comments:

Post a Comment