Friday, December 7, 2018

பாலம்

கார்வண்ணன் இயக்கத்தில் 10 மார்ச் 1990யில் வெளியான இப்படத்தில் முரளி, கிட்டி, நம்பியார், செந்தில் போன்றோர் நடித்திருந்தனர். 

தனது குடும்பத்தைச் சின்னாபின்னப்படுத்திய அமைச்சரை நாயகன் ஒரு பாலத்தில் கடத்தி வைத்திருப்பதே கதை. கடைசியில் போலீசாரால் சுட்டு கொல்லப்படும் நாயகன், தான் சாவதற்கு முன்பாக அமைச்சரைச் சுட்டு கொல்கிறான்.

சோ இப்படத்தில் சோவாகவே நடித்துள்ளார். ஒரே காட்சி. நாயகன் ஓர் அமைச்சரைக் கடத்த, அதைப் பற்றி சோவிடம் தொலைக்காட்சியில் கருத்து கேட்க, அவர் தமது சொந்தக் கருத்தைச் சொல்வார். சட்டத்தைக் கையிலெடுப்பது தவறு என்ற ரீதியில் சோவின் கருத்து அமைந்திருக்கும்.இவரைப் போலவே டாக்டர் ராமதாசும் தோன்றி தமது சொந்தக் கருத்தைச் சொல்வார்.

No comments:

Post a Comment