12 ஜனவரி 1974யில் கே.கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த இப்படம் சுமார்ரகம். முழு நீள நகைச்சுவைப் படம்.
ஜெய்சங்கர் ஹீரோ. ஜெயசித்ரா இரு வேடங்களில் - அவசியமின்றி. சோ, தேங்காய் சீனிவாசன், தங்கவேலு, சுகுமாரி, ஸ்ரீகாந்த், வி.எஸ்.ராகவன் போன்றோர் நடித்துள்ளனர். நாயகனைத் திருமணம் செய்ய மறுக்கிறாள் நாயகி. அதனால் படிக்காத கிராமத்தானாக நடித்து நாயகியின் மனத்தை மயக்கும் கதை. பொதுவாக கிராமத்தனை வெறுக்கும் நாயகியை ஏமாற்ற பணக்காரனாக நாயகன் நடிப்பதே வழக்கம். இப்படத்தில் அது மட்டும் தான் வித்தியாசம். கடைசியில் நாயகி திருந்துவார். அதுதான் க்ளைமாக்ஸ்.
சோவுக்கு டாக்டர் வேடம். நாயகியுடைய தந்தை தேங்காய் சீனிவாசனுடைய நண்பர். படம் முழுதும் அவருடன் வருகிறார். பல யோசனைகள் சொல்வார். நாயகனையும் நாயகியையும் அவ்வப்போது வாருவார். இவருடைய பங்கு நன்றாக இருந்தாலும் படம் சுமார் என்பதால் பெரிதாக எடுபடவில்லை.
ஜெய்சங்கர் ஹீரோ. ஜெயசித்ரா இரு வேடங்களில் - அவசியமின்றி. சோ, தேங்காய் சீனிவாசன், தங்கவேலு, சுகுமாரி, ஸ்ரீகாந்த், வி.எஸ்.ராகவன் போன்றோர் நடித்துள்ளனர். நாயகனைத் திருமணம் செய்ய மறுக்கிறாள் நாயகி. அதனால் படிக்காத கிராமத்தானாக நடித்து நாயகியின் மனத்தை மயக்கும் கதை. பொதுவாக கிராமத்தனை வெறுக்கும் நாயகியை ஏமாற்ற பணக்காரனாக நாயகன் நடிப்பதே வழக்கம். இப்படத்தில் அது மட்டும் தான் வித்தியாசம். கடைசியில் நாயகி திருந்துவார். அதுதான் க்ளைமாக்ஸ்.
சோவுக்கு டாக்டர் வேடம். நாயகியுடைய தந்தை தேங்காய் சீனிவாசனுடைய நண்பர். படம் முழுதும் அவருடன் வருகிறார். பல யோசனைகள் சொல்வார். நாயகனையும் நாயகியையும் அவ்வப்போது வாருவார். இவருடைய பங்கு நன்றாக இருந்தாலும் படம் சுமார் என்பதால் பெரிதாக எடுபடவில்லை.
No comments:
Post a Comment