தேவ்ராஜ் - மோகன் இயக்கத்தில் 1975 ஜூலையில் வெளியான இப்படம் ஓரளவுக்குச் சுவாரசியமான படம். நடிகர்களும் பொருத்தமான தேர்வு; இயல்பான நடிப்பு.
முத்துராமனைப் பணக்காரன் என நினைத்துக் காதலிக்கிரார் பத்மப்ரியா. பணக்காரனாகும் முயற்சியில் சிறை சென்று வருகிறரர் முத்துராமன். ஒரு கட்டத்தில் நோய்வாய்ப்பட்டிருக்கும் பணக்காரரான சுஜாதாவுக்கு நர்ஸாகப் போகிறார். சாகும் தருவாயில் உள்ள அவருடைய விருப்பம் முத்துராமனைத் திருமணம் செய்வதாக உள்ளது. அவர் இறந்தவுடன் அப்பணம் முழுவதும் முத்துராமனுக்கு வந்தால் தனக்கு நன்மை எனக் கணக்கு போடும் பத்மப்ரியா முத்துராமனைக் கட்டாயப்படுத்தி சுஜாதாவைத் திருமணம் செய்து கொள்ள வைக்கிறார். கடைசியில் சுஜாதா குணமாகி விடுகிறார். காதலை இழந்த பத்மப்ரியா தற்கொலை செய்ய முயற்சிக்கும்போது, இத்தனை நாட்களாக அவரால் நிராகரிக்கப்பட்ட சிவகுமார் அவரைக் காப்பாற்றுகிறார். இருவரும் இணைகின்றனர்.
சோ முத்துராமனுடைய நண்பராக வருகிறார். முருகேசன் எனப் பெயர். அவருடைய பாத்திரம் நகைச்சுவைக்கும் குணச்சித்திரத்துக்கும் மத்தியில் உள்ளது. சொல்லும்படி நகைச்சுவைக் காட்சிகளோ வசனங்களோ அமையவில்லை.
முத்துராமனைப் பணக்காரன் என நினைத்துக் காதலிக்கிரார் பத்மப்ரியா. பணக்காரனாகும் முயற்சியில் சிறை சென்று வருகிறரர் முத்துராமன். ஒரு கட்டத்தில் நோய்வாய்ப்பட்டிருக்கும் பணக்காரரான சுஜாதாவுக்கு நர்ஸாகப் போகிறார். சாகும் தருவாயில் உள்ள அவருடைய விருப்பம் முத்துராமனைத் திருமணம் செய்வதாக உள்ளது. அவர் இறந்தவுடன் அப்பணம் முழுவதும் முத்துராமனுக்கு வந்தால் தனக்கு நன்மை எனக் கணக்கு போடும் பத்மப்ரியா முத்துராமனைக் கட்டாயப்படுத்தி சுஜாதாவைத் திருமணம் செய்து கொள்ள வைக்கிறார். கடைசியில் சுஜாதா குணமாகி விடுகிறார். காதலை இழந்த பத்மப்ரியா தற்கொலை செய்ய முயற்சிக்கும்போது, இத்தனை நாட்களாக அவரால் நிராகரிக்கப்பட்ட சிவகுமார் அவரைக் காப்பாற்றுகிறார். இருவரும் இணைகின்றனர்.
சோ முத்துராமனுடைய நண்பராக வருகிறார். முருகேசன் எனப் பெயர். அவருடைய பாத்திரம் நகைச்சுவைக்கும் குணச்சித்திரத்துக்கும் மத்தியில் உள்ளது. சொல்லும்படி நகைச்சுவைக் காட்சிகளோ வசனங்களோ அமையவில்லை.
No comments:
Post a Comment