Sunday, June 24, 2018

மேல் நாட்டு மருமகள்

ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் 10 மே 1975யில் வெளியான இப்படம் சுமார் ரகம். இதில் சோ கௌரவ வேடத்தில் சேட்டாக வருகிறார். அவருடைய மனைவியாக மனோரமா. அவரும் கௌரவ வேடம். தேவையற்ற படம். ஒரே காட்சி - அதுவும் மனத்தில் நிற்கவில்லை.

வெளிநாட்டுக்குப் படிக்க போகும் சிவகுமார் பிரென்ச் நாட்டு லாரன்சை மணந்து கொண்டு வருகிறார். அவரையே மணம் செய்து கொள்ள காத்திருக்கும் ஜெயசுதா அவருடைய தம்பி கமல்ஹாசனை மணந்து கொள்கிறார். வெளிநாட்டுப் பெண்மணி இந்திய கலாச்சாரப்படி வாழ, கமலும் ஜெயசுதாவும் மேல்நாட்டு நாகரீகத்தில் திளைக்கின்றனர். கடைசியில் அவர்கள் மனம் திருந்தி இந்திய கலாசாரத்தை அனுசரிப்பதாக கதை.

ஜுனியர் பாலையா, பூர்ணம் விஸ்வநாதன், வாணி கணபதி, உஷா உதூப், காந்திமதி, ராமதாஸ்  ஆகியோரும் நடித்துள்ளனர். 

No comments:

Post a Comment